டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டில் முக்கிய உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8 மாதங்களில் அரசு மேற்கொண்ட பெரிய முடிவுகளை பட்டியலிட்டார். சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுவதே அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் பட்டியலிட்டுக் காட்டிய கடந்த 8 மாதங்களில் அரசின் பெரிய சாதனைகள் வருமாறு:-
பிரதமர் விவசாயிகள் திட்டத்தின்கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு
விவசாயிகள், தொழிலாளர்கள், கடை நடத்துவோர் ஆகியோருக்கு ஓய்வூதியம் உறுதி செய்தல்
தண்ணீர் போன்ற முக்கிய பொருள் குறித்த விவகாரங்களில் தேங்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவர நீர்வள அமைச்சகம் உருவாக்கம்
நடுத்தர வகுப்பினருக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்கு ரூ.25,000 கோடி சிறப்பு நிதியம்
தில்லியில் 40 லட்சம் பேருக்கு பயனளிக்கும் அனுமதியற்ற குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கை
முத்தலாக் தொடர்பான சட்டம்
குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான கடும் தண்டனைக்குரிய சட்டம்
திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம்
சிட்பண்டு திட்டங்களில் மோசடியைத் தடுக்கும் சட்டம்
தேசிய மருத்துவ ஆணைய சட்டம்
கம்பெனி வரியைக் குறைக்கும் வரலாற்றுச் சிறப்பு நடவடிக்கை
சாலை விபத்துக்களைத் தடுக்க கடுமையான சட்டம்
பாதுகாப்பு தலைமைத் தளபதி நியமனம்
நாட்டுக்கு அடுத்த தலைமுறை போர் விமானங்களைப் பெற்றுத்தந்தது
போடோ அமைதி ஒப்பந்தம்
ப்ரு-ரியாங் நிரந்தர தீர்வு
மாபெரும் ராமர்கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைப்பு
அரசியல் சட்ட 370-வது பிரிவை அகற்றும் முடிவு
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை உருவாக்க முடிவு
குடியுரிமை திருத்தச்சட்டம்