பிரதமர் திரு நரேந்திர மோடி கம்போடிய பிரதமர் மேதகு சாம்டெக் அக்கா மோஹா சேனா படேய் டெக்னோ ஹூன் சென்-ஐ இன்று காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, மனிதவள மேம்பாடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, மேம்பாட்டு ஒத்துழைப்பு, இணைப்பு, பெருந்தொற்றுக்குப் பிறகான பொருளாதார மீட்சி மற்றும் மக்கள் இடையேயான உறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு போன்ற இரு தரப்பு விஷயங்கள் குறித்து  இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இரு தரப்பு செயல்பாடுகளில் இருவரும் திருப்தி தெரிவித்தனர்.

இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை கம்போடிய பிரதமர் திரு ஹுன் சென் வலியுறுத்தினார். பிரதமர் திரு மோடியும் பரஸ்பர உணர்வை வெளிப்படுத்தியதுடன், இந்தியாவின் கிழக்கு நோக்கிய  கொள்கையில் கம்போடியாவின் மதிப்புமிக்க பங்கை வலியுறுத்தினார். மீகாங்-கங்கா ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் விரைவான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான வளர்ச்சி கூட்டாண்மையை தலைவர்கள் ஆய்வு செய்தனர்.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள வரலாறு மற்றும் நாகரிக இணைப்பு  எடுத்துரைத்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சாரம் மற்றும் மொழியியல் இணைப்பை எடுத்துரைக்கும் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் மற்றும்  பிரியார் விகார் ஆலயங்களின் மீட்புப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பிற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். 

குவாட் தடுப்பூசி முன்முயற்சியின் கீழ் 3.25 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கியதற்காக கம்போடிய பிரதமர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார். 

இந்தியாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 70-வது ஆண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுவதையொட்டி இரு தலைவர்களும் பரஸ்பரம் பாராட்டு தெரிவித்தனர்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Behind India’s remarkable showing on renewables

Media Coverage

Behind India’s remarkable showing on renewables
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives due to an accident in Jhabua, Madhya Pradesh
June 04, 2025
QuoteAnnounces ex-gratia from PMNRF

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to an accident in Jhabua, Madhya Pradesh. Shri Modi also wished speedy recovery for those injured in the accident.

The Prime Minister announced an ex-gratia from PMNRF of Rs. 2 lakh to the next of kin of each deceased and Rs. 50,000 for those injured.

The Prime Minister’s Office posted on X;

“Deeply anguished by the loss of lives due to an accident in Jhabua, Madhya Pradesh. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi"