Quoteபீகார் மாநிலம் பெட்டியாவில் ரூ.12,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteஇந்தியன் ஆயிலின் 109 கி.மீ. தூர முசாபர்பூர் – மோதிஹரி சமையல் எரிவாயு குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
Quoteமோதிஹரியில் இந்தியன் ஆயிலின் எல்பிஜி நிரப்பும் ஆலை மற்றும் சேமிப்பு முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteநகர எரிவாயு விநியோகத் திட்டங்கள் மற்றும் தானியம் சார்ந்த எத்தனால் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Quoteபல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Quoteபெட்டியா ரயில் நிலைய மறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டினார்
Quoteநர்கட்டியாகஞ்ச் – கவுனாஹா, ரக்சவுல் - ஜோக்பானி இடையே இரண்டு புதிய ரயில் சேவைகளைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Quote"இரட்டை என்ஜின் அரசின் கீழ், பீகார் அதன் பழைய பெருமையை மீண்டும் பெறும் பாதையில் வேகமாக நகர்கிறது"
Quote" வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த பீகார் ஆகியவற்றின் உறுதிப்பாட்டை எடுக்க பெட்டியா, சம்பரனை விட சிறந்த இடம் இருக்க முடியாது"
Quote"பீகார் வளமாக இருந்த போதெ
Quoteநரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Quoteநவீன உள்கட்டமைப்பு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார்.
Quoteஇன்று இந்தியா தனது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அங்கீகரித்து வருவதாக அவர் கூறினார்.

அன்னை சீதா, லவ்-குஷ் பிறந்த மகரிஷி வால்மீகி பூமியிலிருந்து அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, அமைச்சரவையில் எனது சகா நித்யானந்த் ராய் அவர்களே, துணை முதலமைச்சர்கள் விஜய் குமார் சின்ஹா அவர்களே, சாம்ராட் சவுத்ரி அவர்களே, மாநில அமைச்சர்களே, மதிப்பிற்குரிய இதர பிரமுகர்களே, பீகாரின் எனதருமை சகோதர சகோதரிகளே! வணக்கம்!

பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு புத்துயிர் அளித்த மண் இது, புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த மண்தான் மோகன்தாஸை மகாத்மா காந்தியாக மாற்றியது. 'வளர்ச்சியடைந்த பீகார் வளர்ச்சியடைந்த பாரதம்' தீர்மானத்திற்கு, பெட்டியாவை விட சிறந்த இடம் இருக்க முடியுமா, சம்பரனை விட சிறந்த இடம் இருக்க முடியுமா? இன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நமது அனைத்து சகாக்களையும் ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளீர்கள். இன்று, பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும், பீகாரின் மக்களவைத் தொகுதிகளிலிருந்தும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' தீர்மானத்திற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். பீகார் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். நான் வங்காளத்தில் இருந்தேன். இந்த நாட்களில் வங்காளத்தில் உள்ள உற்சாகம் முற்றிலும் வித்தியாசமானது. 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடந்தது. நான் நேரத்தை மிச்சப்படுத்த கடுமையாக முயற்சித்தேன், ஆனால் இன்னும் தாமதமாகிவிட்டது. உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

 

|

நண்பர்களே,

பீகார் பல நூற்றாண்டுகளாக நாட்டை வழிநடத்திய மற்றும் அன்னை பாரதிக்கு பல திறமையான ஆளுமைகளை வழங்கிய நிலம். பீகார் எப்போதெல்லாம் செழித்திருக்கிறதோ, அப்போதெல்லாம் பாரதம் செழித்திருக்கிறது என்பது உண்மை. எனவே, 'வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு' பீகார் சமமாக முக்கியமானது. இரட்டை என்ஜின் அரசு மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து, பீகாரில் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று, பீகாருக்கு சுமார் 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் பரிசாகக் கிடைத்துள்ளன. ரயில்வே, சாலைகள், எத்தனால் ஆலைகள், நகர எரிவாயு விநியோகம், சமையல் எரிவாயு விநியோகம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். இந்த வேகத்தை நாம் தக்க வைத்துக் கொண்டு, வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக இதே வேகத்தில் தொடர வேண்டும். இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நண்பர்களே,

சுதந்திரத்தைத் தொடர்ந்து பல தசாப்தங்களில் பீகார் ஒரு குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொண்டது. காட்டாட்சி பீகாரில்  நடைபெற்றபோது, இந்த வெளியேற்றம் இன்னும் வேகமெடுத்தது. காட்டாட்சியைக் கொண்டு வந்தவர்கள் தங்கள் சொந்த குடும்பங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தனர், பீகாரில் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை பணயம் வைத்தனர். பீகாரைச் சேர்ந்த எனது இளம் நண்பர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி மற்ற மாநிலங்களின் பிற நகரங்களுக்குச் சென்றனர், அதே நேரத்தில் இங்கு ஒரே ஒரு குடும்பம் மட்டுமே செழித்து வளர்ந்தது. வெறும் வேலைக்கு ஈடாக நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இப்படி சாமானிய மக்களைக் கொள்ளையடித்தவர்களை யாராவது மன்னிக்க முடியுமா? இவர்களை மன்னிக்க முடியுமா? இப்படிப்பட்டவர்களை மன்னிக்க முடியுமா? காட்டாட்சியை பீகாருக்கு கொண்டு வந்த குடும்பம்தான் பீகார் இளைஞர்களின் மிகப்பெரிய குற்றவாளி. காட்டாட்சி  இயக்கத்திற்கு காரணமான குடும்பம், பீகாரில் லட்சக்கணக்கான இளைஞர்களின் தலைவிதியை பறித்துள்ளது. இந்த காட்டு ராஜ்ஜியத்தில் இருந்து பீகாரை மீட்டு இவ்வளவு தூரம் கொண்டு வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான்.

நண்பர்களே,

தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசு பீகாரின் இளைஞர்களுக்கு பீகாரிலேயே வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று போடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கும் பின்னால் உள்ள உணர்வு இதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தத் திட்டங்களின் மிகப்பெரிய பயனாளிகள் யார்? மிகப்பெரிய பயனாளிகள் வேலை தேடும் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களாக இருப்பார்கள். கங்கை நதியின் மீது 6 வழிச்சாலை கேபிள் பாலம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பீகாரில் 22,000 கோடி மதிப்பிலான 12,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 12-க்கும் மேற்பட்ட பாலங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பாலங்களும், அகலமான சாலைகளும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கும், தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் வழிவகுக்கின்றன. இந்த ரயில்கள் யாருக்காக இயக்கப்படுகின்றன? இது போன்ற வசதிகளைக் கனவு கண்ட பெற்றோர்களின் இளைஞர்களுக்கானது. கட்டப்படும் இந்த உள்கட்டமைப்பு வேலைவாய்ப்புக்கான குறிப்பிடத்தக்க வழிமுறையாகும். இது தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், சேவை தொடர்பான பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பல துறைகளுக்கு வேலைகளை உருவாக்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசு முதலீடு செய்யும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இறுதியில் பீகாரில் உள்ள சாதாரணக் குடும்பங்களை சென்றடையும். இது மணல், கல், செங்கல், சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற தொழில்களை ஊக்குவிக்கும், மேலும் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய கடைகளுக்கு ஒரே மாதிரியாகப் பயனளிக்கும்.

 

|

நண்பர்களே,

தற்போது இயங்கும் அல்லது இயக்கப்படவுள்ள அனைத்து புதிய ரயில்களும் 'மேட் இன் இந்தியா' தயாரிப்பாகும். அதாவது பாரத மக்களுக்கும் இந்த முயற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ரயில் என்ஜின்களை உற்பத்தி செய்யும் நவீன தொழிற்சாலைகளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் பீகாரில் நிறுவப்பட்டுள்ளன. இன்று உலகம் முழுவதும் டிஜிட்டல் இந்தியா பற்றி அதிகம் பேசப்படுகிறது. இன்று, பெட்டியா, சம்பரன் போன்ற இடங்களில் கிடைக்கும் அத்தகைய டிஜிட்டல் அமைப்பு இல்லாத பல வளர்ந்த நாடுகள் உள்ளன. வெளிநாட்டுத் தலைவர்கள் என்னைச் சந்திக்கும்போது, 'மோடி ஜி, இதையெல்லாம் எப்படி இவ்வளவு விரைவாக நிறைவேற்றினீர்கள்?' என்று கேட்கிறார்கள். இதைச் செய்தது மோடி அல்ல, பாரதத்தின் இளைஞர்கள் என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். பாரதத்தின் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒவ்வொரு அடியிலும் துணை நிற்பேன் என்ற உத்தரவாதத்தை மட்டுமே மோடி அளித்துள்ளார். இன்று, பீகார் இளைஞர்களுக்கு 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இந்த உத்தரவாதத்தையும் நான் அளிக்கிறேன். மோடி ஒரு உத்தரவாதம் அளிக்கிறார் என்றால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அர்த்தம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நண்பர்களே,

ஒவ்வொரு வீட்டையும் சூரிய ஒளி இல்லமாக மாற்ற விரும்புகிறோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கூறுகிறது. ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் சோலார் மின் உற்பத்தி அலகு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த வழியில், அந்த வீடும் சம்பாதிக்கலாம் மற்றும் இலவசமாக மின்சாரத்தைப் பெறலாம். ஆனால் இந்தியக் கூட்டணி இன்னும் லாந்தர் விளக்கை நம்பியே இருக்கிறது. பீகாரில் லாந்தர் விளக்கின் ஆட்சி இருந்தவரை, ஒரு குடும்பத்தின் வறுமை மட்டுமே ஒழிக்கப்பட்டது, ஒரு குடும்பம் மட்டுமே செழித்தது.

 

|

நண்பர்களே,

இன்று, பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் உயிருடன் இருந்திருந்தால், மோடியிடம் அவர்கள் கேட்கும் அதே கேள்வியை அவரிடமும் கேட்பார்கள். பரம்பரை மற்றும் ஊழலை ஆதரிப்பவர்கள் வணக்கத்திற்குரிய அண்ணல், ஜே.பி., லோகியா, பாபா சாஹேப் அம்பேத்கர் ஆகியோரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருப்பார்கள். இந்தத் தலைவர்கள் தங்கள் சொந்த குடும்பங்களை மேம்படுத்தவில்லை, ஆனால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

 

 

|

நண்பர்களே,

தேர்தலுக்குப் பிறகு தங்களுக்கு எங்கும் செல்ல இடமில்லை என்பது இந்தியக் கூட்டணியுடன் தொடர்புடையவர்களுக்குத் தெரியும். தங்களுக்கு வரவிருக்கும் தோல்வியை உணர்ந்த ராமர் கூட இந்திய கூட்டணியின் இலக்காகி விட்டார். பெட்டியாவில் அன்னை சீதா மற்றும் லவ்-குஷ் இருப்பதை ஒருவர் உணர்கிறார். பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் ராமர் கோயிலுக்கு எதிராக இந்தியக் கூட்டணி மக்கள் பேசும் விதத்தை பீகார் மக்கள் கவனித்து வருகின்றனர். ராமரை அவமதிக்கும் நபர்களை ஆதரிப்பவர்களையும் பீகார் மக்கள் கவனித்து வருகின்றனர். குழந்தை ராமரை பல தசாப்தங்களாக கூடாரங்களில் வைத்திருந்த வம்சாவளியினர் இவர்கள். ராமர் கோயில் கட்டுவதற்கு எதிராக தீவிர முயற்சிகளை மேற்கொண்ட வம்சாவளியினர் இவர்கள். இன்று, பாரதம் தனது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் போற்றுவதால், இந்த மக்களுக்கு அதிலும் பிரச்சினைகள் உள்ளன.

 

|

மீண்டும், உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடன் சொல்லுங்கள் -

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

மிகவும் நன்றி!

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Regional rural banks are helping Indias growth story

Media Coverage

Regional rural banks are helping Indias growth story
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 16, 2025
June 16, 2025

Citizens Appreciate India's Unstoppable Rise: PM Modi’s Leadership Redefines Global Ties