Quoteராஜஸ்தானில் ரூ.17,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார்
Quoteராஜஸ்தானில் ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
Quoteரூ.2300 கோடி மதிப்பிலான எட்டு முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Quote'காதிபுரா ரயில் நிலையத்தை' நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteசுமார் ரூ.5,300 கோடி மதிப்பிலான சூரியசக்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்
Quoteரூ.2,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான மின் பகிர்மானத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், சுமார் ரூ.2,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Quoteஜோத்பூரில் இந்தியன் ஆயிலின் எல்பிஜி நிரப்புதல் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quote"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வளர்ச்சியடைந்த ராஜஸ்தானுக்கு முக்கியப் பங்கு உள்ளது"
Quote"கடந்த காலத்தின் விரக்தியை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் முன்னேற இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது"
Quoteஇந்த நிகழ்வில் 17,000 கோடி மதிப்பிலான சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகளைச் சேர்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Quoteஇந்த செலவினம் சிமெண்ட், கற்கள் மற்றும் பீங்கான் தொழில்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்பதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
Quoteஇந்த சாலைகள் தில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுடன் சிறந்த இணைப்பை உறுதி செய்யும்.
Quoteவினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கடுமையான புதிய மத்திய சட்டம் குறித்துப் பேசிய அவர், இத்தகையை முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இது செயல்படும் என்றார்.

ராஜஸ்தானின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்!

 உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தவும், அதை மக்களிடையே கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சரையும்  நான் பாராட்டுகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபருக்கு நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பு பாரதத்தில் மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டிலும் எதிரொலித்தது. இது ராஜஸ்தான் மக்களின் அடையாளம். நமது சக ராஜஸ்தானியர்கள் தாங்கள் மிகவும் நேசிப்பவர்கள் மீது தங்கள் பாசத்தைப் பொழிவதற்கு எந்த முயற்சியையும் விட்டுவைப்பதில்லை. சட்டமன்றத் தேர்தலின் போது, நான் ராஜஸ்தானுக்கு வருகை தந்த போதெல்லாம் நீங்கள் எங்களுக்கு அளித்த மகத்தான ஆதரவை நான் நினைவு கூர்கிறேன். நீங்கள் அனைவரும் மோடியின் உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு வலுவான 'இரட்டை இன்ஜின்' அரசை அமைத்தீர்கள். இப்போது, ராஜஸ்தானில் விரைவான முன்னேற்றத்தை நாம் காண்கிறோம். இன்று, ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாங்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளோம்.  இந்தத் திட்டங்களுக்கு பங்களிப்பு அளித்த ராஜஸ்தானைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர சகோதரிகளே,

 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி என்பது ஒருபுறம் இருக்க, உயிர்வாழ்வதும் வேலை கிடைப்பதும் கூட ஒரு போராட்டமாகத் தோன்றியது. அதை இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள். இப்போது  வளர்ச்சியடைந்த பாரதத்தை, வளர்ச்சியடைந்த ராஜஸ்தானை நாங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் பெரிய கனவு காண்கிறோம். லட்சிய இலக்குகளை நிர்ணயிக்கிறோம். அவற்றை அடைய அயராது உழைக்கிறோம்.  நேற்றிரவு, நான் ஒரு வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பினேன். நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாரைச் சேர்ந்த முக்கிய தலைவர்களைச் சந்தித்தேன். அவர்களும் பாரதம் செய்து வரும் முன்னேற்றங்களைக் கண்டு வியக்கிறார்கள். 

சகோதர சகோதரிகளே,

வளர்ச்சியடைந்த ராஜஸ்தானை நோக்கிய பயணம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவதற்கு முக்கியமானது. ரயில்வே, சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு விரைவான வளர்ச்சியை அடைய வேண்டும். இத்தகைய முன்னேற்றங்கள் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கும். மேலும் தொழில்துறை வளர்ச்சியைத் தூண்டும். தொழிற்சாலைகள் நிறுவப்படுவதை ஊக்குவிக்கும். மேலும் ராஜஸ்தானில் சுற்றுலாவை ஊக்குவிக்கும். அதிகரித்த முதலீடு இயற்கையாகவே அதிக வேலை வாய்ப்புகளாக மாறுகிறது. சாலைகள் அமைத்தல், ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் நிலையங்களை அமைத்தல், ஏழைகளுக்கு வீடுகள் கட்டுதல், குடிநீர் மற்றும் எரிவாயு குழாய்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதனால், போக்குவரத்துடன் தொடர்புடையவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சியை விட ஆறு மடங்கு அதிகம். இந்த கணிசமான முதலீடு ராஜஸ்தானில் உள்ள சிமெண்ட், கல், பீங்கான் போன்ற தொழில்களுக்கு பயனளிக்கும்.

 

|

சகோதர சகோதரிகளே,

கடந்த பத்தாண்டுகளில் ராஜஸ்தானில் கிராமச் சாலைகள் முதல் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் வரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு அதிகரித்திருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இன்று, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் கடற்கரையிலிருந்து பஞ்சாப் வரை அகலமான மற்றும் நவீன நெடுஞ்சாலைகளால் ராஜஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வைக்கப்பட்ட சாலைகள், இணைப்பை மேலும் வலுப்படுத்தும். ரயில்வே மின்மயமாக்கல் மற்றும் பழுதுபார்ப்பு உள்ளிட்ட பல திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க வசதியை வழங்கும்.


நண்பர்களே

போதுமான மின்சார வசதி இல்லாமல் எந்த நாடும் முன்னேற முடியாது. நாங்கள் பதவியேற்றவுடன், நாட்டின் அதிகார சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னுரிமை அளித்தோம். நாங்கள் கொள்கைகளை வகுத்தோம். தீர்க்கமான தேர்வுகளை செய்தோம். சூரியசக்தி உற்பத்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளித்தோம். இன்று, சூரியசக்தி உற்பத்தியில் பாரதம் உலகத் தலைவராக நிற்கிறது. இது எங்கள் முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். சூரியக் கடவுளின் அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெற்ற ராஜஸ்தான், இந்த விஷயத்தில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, மின்சார உற்பத்தியில் ராஜஸ்தானை தன்னிறைவு அடையச் செய்ய இரட்டை இன்ஜின் அரசு விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. இன்று, சூரிய மின்சக்தி ஆலையைத் தொடங்கி வைத்த நாம், மேலும் இரண்டு ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்தத் திட்டங்கள் மின்சாரம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

நண்பர்களே

ஒவ்வொரு குடும்பமும் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கும், உபரி மின்சாரத்தை விற்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கும் பிஜேபி அரசு உறுதிபூண்டுள்ளது. இதை அடைய, மத்திய அரசு பிரதமரின் சூர்ய சக்தி திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதாவது இலவச மின்சாரத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான வீடுகளுக்கு மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த திட்டம் நாடு முழுவதும் 1 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும். மொட்டை மாடியில் சோலார் பேனல்களை நிறுவ ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிற்கும் மத்திய அரசு நேரடியாக உதவி வழங்கும். இதற்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

நண்பர்களே,

வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை அடைய, சமூகத்தின் நான்கு முக்கிய பிரிவுகளான இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாங்கள் விடாமுயற்சியுடன் கவனம் செலுத்தி வருகிறோம்.  இந்த பிரிவினரை மேம்படுத்த மோடி அளித்த உத்தரவாதங்களை இரட்டை இன்ஜின் அரசு நிறைவேற்றி வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜஸ்தானின் பிஜேபி அரசு தமது முதல் பட்ஜெட்டில், இளைஞர்களுக்கு 70 ஆயிரம் வேலை காலியிடங்களை நிரப்பும் முடிவை அறிவித்தது. 

நண்பர்களே,

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ. 450 க்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக ராஜஸ்தான் பிஜேபி உறுதியளித்தது. அந்த வாக்குறுதி மதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள எண்ணற்ற சகோதரிகள் இந்த முயற்சியால் பயனடைந்து வருகின்றனர். 

 

|

நண்பர்களே,

ஒவ்வொரு பயனாளிக்கும் உரிய உரிமைகளை எந்தவித இழப்பும் இல்லாமல் உடனடியாக வழங்குவதை உறுதி செய்வதே மோடியின் முயற்சியாகும். அதனால்தான் நாங்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான யாத்திரையைத் தொடங்கினோம். இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த கோடிக்கணக்கான தனிநபர்கள் பங்கேற்றனர். இந்த இயக்கத்தின் போது, சுமார் 3 கோடி பேர் இலவச மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். ராஜஸ்தானைச் சேர்ந்த சுமார் 16 லட்சம் தனிநபர்கள் தலா ரூ. 2 லட்சம் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.

நண்பர்களே,

 பாரதம் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் போது, முழு தேசமும் மகிழ்ச்சியடைகிறது.  அடுத்த ஆட்சிக் காலத்தில் பாரதம் உலகளவில் மூன்றாவது பொருளாதார சக்தியாக மாறும் என்று மோடி கூறும்போது ஒட்டுமொத்த தேசமும் நம்பிக்கையைப் பெறுகிறது.   இத்தகைய அரசியல் இளம் பாரதத்தை, குறிப்பாக பெரிய கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட, வளர்ந்த பாரதத்தின் பார்வையை ஆதரிக்கும் முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்கத் தவறிவிடுகிறது. வளர்ந்த ராஜஸ்தான் மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான திட்டம் ஒவ்வொரு முதல் முறை வாக்காளருக்கும் உள்ளது.  மோடியின் உறுதிப்பாடுகள் மீதான நம்பிக்கையை ராஜஸ்தானும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மிக்க நன்றி.

 

Thank you very much.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India’s ‘Thumbs Up’ for the Jan Man Survey on 11 Years of Modi Government

Media Coverage

India’s ‘Thumbs Up’ for the Jan Man Survey on 11 Years of Modi Government
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi's statement ahead of departure for visit to Cyprus, Canada and Croatia
June 15, 2025

Today, I will embark on a three-nation tour to the Republic of Cyprus, Canada and Croatia.

On June 15-16, I will visit the Republic of Cyprus at the invitation of President H.E Nikos Christodoulides. Cyprus is a close friend and an important partner in the Mediterranean region and the EU. The visit provides an opportunity to build upon the historical bonds and expand our ties in the areas of trade, investment, security, technology and promote people-to-people exchanges.

From Cyprus, I will travel to Kananaskis, Canada to attend the G 7 Summit at the invitation of Prime Minister H.E. Mark Carney. The Summit will provide space for exchange of views on pressing global issues and the priorities of the Global South. I also look forward to engaging withleaders from partner countries.

On 18 June, I look forward to my visit to the Republic of Croatia and meetings with President Zoran Milanovic and Prime Minister Andrej Plenkovic. Both our countries enjoy centuries-old close cultural links. As the first visit by an Indian Prime Minister to Croatia, it will open new avenues for bilateral cooperation in areas of mutual interest.

This three-nation tour is also an opportunity to thank partner countries for their steadfast support to India in our fight against cross-border terrorism, and to galvanize global understanding on tackling terrorism in all its forms and manifestations.