Quoteகாசநோய் இல்லாத பஞ்சாயத்து முன்முயற்சியை தொடங்கி வைத்து, இந்தியா முழுவதும் காசநோய் தடுப்பு சிகிச்சை மற்றும் குடும்பம் சார்ந்த மாதிரி சிகிச்சையையும் தொடங்கி வைத்தார்
Quoteகாசநோய் இல்லாத சமுதாயத்தை உறுதிப்படுத்துவதை நோக்கி இந்தியா தனது உறுதிப்பாட்டை அர்ப்பணித்துள்ளது
Quote2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் லட்சியத்தை செயல்படுத்தும் திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது
Quote“காசநோய் போன்ற நோயை எதிர்த்துப் போராட உலகளவிலான தீர்மானத்திற்கு புதிய ஆற்றலை காசி வழங்கும்”
Quote“ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டின் மூலம் உலக நலனுக்கான மற்றொரு உறுதிப்பாட்டை இந்தியா நிறைவு செய்கிறது”
Quoteகாசநோய்க்கு எதிரான உலகப் போருக்கான புதிய மாதிரியை வழங்கும் இந்தியாவின் முயற்சிகள்”
Quote“காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்கேற்பு இந்தியாவின் மிகப் பெரிய பங்களிப்பாகும்”
Quote“2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முடிவு கட்ட இந்தியா தற்போது இலக்கு வைத்து பாடுபடுகிறது”
Quote“இந்தியாவின் நவீன தொழில்நுட்பம், புத்தாக்கங்கள் அனைத்துப் பிரச்சாரங்களின் பயனை மேலும் மேலும் நாடுகள் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்”

ஹர ஹர மகாதேவ்!

உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பாதக் அவர்களே, பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்களே, உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் அவர்களே, அனைத்து பிரதிநிதிகளே, ஸ்டாப் டிபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளே, மகளிரிரே மற்றும் பண்பாளரே!

ஒரே உலகம் காசநோய் மாநாட்டை காசியில் நடத்துவது எனக்கு சிறந்த மகிழ்ச்சியை தருகிறது. அதிர்ஷ்டவசமாக, நானும் காசியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். காசநோய் போன்ற நோய்க்கு எதிரான உலகளாவிய நமது முயற்சிக்கு காசி புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

|

ஒரே உலகம் காசநோய் மாநாட்டிற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் மனப்பூர்வமாக வரவேற்று நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தில் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளை காசி நகரம் பெற்றுள்ளது.  எந்தவிதமான தடைகள் இருந்தாலும் காசி எப்போதும் அனைவரது முயற்சியுடன் புதிய வழிகளை உருவாக்கி வந்துள்ளது. காசநோய் போன்ற நோய்களுக்கு எதிராக போராடுவதில் உலக உறுதிப்பாட்டுக்கு காசி புதிய ஆற்றலாக விளங்குகிறது.

உலகம் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தம் ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை உலகுக்கு வழங்கியுள்ளது.  ஜி20 அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா அதன் கருப்பொருளாக “ஒரே குடும்பம், ஒரே உலகம், ஒரே எதிர்காலம்” என்பதை மையமாக வைத்துள்ளது. ஒரே உலகம் ஒரே சுகாதாரம் என்ற தொலைநோக்குடன் உலகில் இந்தியா முன்னேறி செல்கிறது. ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டுடன் உலக நன்மைக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.

|

2014-ம் ஆண்டுக்கு பிறகு காச நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாடும், அர்ப்பணிப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. காச நோய்க்கு எதிரான உலகளாவிய போரில் புதிய நடைமுறையில் இந்தியாவின் முயற்சிகள் முக்கியமானவை. உடல் தகுதி இந்தியா இயக்கம், யோகா, கேலோ இந்தியா உள்ளிட்டவற்றின் மூலம் ஊட்டச்சத்து, சிகிச்சைகளில் புதுமை, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, ஆரோக்கியம், நோய்த்தடுப்பு போன்றவை மக்களின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படுத்தப்படுகிறது.

நிசாய் மித்ரா இயக்கத்தின் மூலம் மக்களின் பங்களிப்புடன் காசநோயாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் மூலம் 10 லட்சம் காச நோயாளிகள் பொது மக்களால் தத்தெடுக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 10 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கூட இந்த இயக்கத்தின் கீழ் உதவ முன்வந்துள்ளனர்.  இந்த திட்டத்தின் கீழ் காசநோயாளிகளுக்கான நிதியுதவி 1000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்த இயக்கம் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.  வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே!

2018-ம் ஆண்டில் காசநோயாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தை அரசு அறிவித்தது. இதன் மூலம் இதுவரை 2000 கோடி ரூபாய் நோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் அவர்களது சிகிச்சைக்காக செலுத்தப்பட்டுள்ளது. சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட காசநோயாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். நாட்டில் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. காச நோயாளிகள் அதிகம் உள்ள பகுதிகளை கருத்தில் கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ப சிறப்பு செயல்திட்ட கொள்கைகள் வகுக்கப்படுகிறது. இவற்றின் ஒரு பகுதியாக ‘காச நோய் இல்லாத ஊராட்சிகள் இயக்கம்’ என்ற புதிய இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. காச நோய்க்கு 6 மாத  சிகிச்சைக்கு பதிலாக 3 மாத சிகிச்சை திட்டத்தையும் அரசு தொடங்கியிருக்கிறது. முன்னதாக நோயாளிகள் 6 மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது புதிய நடைமுறையில் நோயாளிகள் வாரத்தில் ஒரு நாள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையே போதுமானது.

|

நண்பர்களே!

சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நோய் கண்காணிப்பு தொடர்பான புதிய நடைமுறையை உருவாக்கியிருக்கிறது. உலக சுகாதார அமைப்பை தவிர பிற நாடுகள் எதுவும் இத்தகையை முறையை உருவாக்கவில்லை. இந்தியா மட்டுமே இந்த நடைமுறையை உருவாக்கியிருக்கிறது.

காச நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று இது தொடர்பான நோய் தடுப்பு பணிகளுக்காக கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.  உலகளவில் காச நோயை ஒழிக்க 2030-ம் ஆண்டு என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் அதை ஒழிக்க இலக்கு நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மற்றொரு உறுதியான நடவடிக்கையாகும். நோய் கண்டறிதல், பரிசோதனை, கண்காணிப்பு சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களை பயன்படுத்தி பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா போராடியது.  இந்தியாவின் உள்ளூர் அணுகுமுறை உலகளவில் திறன் வாய்ந்ததாக இருந்தது.  காச நோய்க்கான மருந்துகளைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே 80 சதவீத மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் இயக்கங்கள், புதுமையான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பல நாடுகள் பயன்பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளும் இது தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கலாம்.  நமது இந்த தீர்மானம் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதிபட கூறுகிறேன். நாம் காசநோய்க்கு முடிவுகட்ட முடியும்.

|

தொழுநோய்க்கு எதிரான மிகப்பெரிய இயக்கம் 2001-ம் ஆண்டு நான் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தொடங்கப்பட்டது. இதன் மூலம் குஜராத்தில் தொழுநோய் விகிதம் 23 சதவீதத்தில் இருந்து 1 சதவீதத்துக்கும் குறைவாக சரிந்தது. காச நோய்க்கு எதிராகவும் போராடி இந்தியா  வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.  இன்றைய புதிய இந்தியா இலக்குகளை அடைவதில் பெயர் பெற்றது.  திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றுதல், சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் தொடர்பான இலக்கு பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகித இலக்கை முன்கூட்டியே எட்டியது போன்றவை இதில் அடங்கும். பொது மக்களின் பங்களிப்பு  ஒட்டுமொத்த உலகத்துக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும்.  பொது மக்களின் பங்களிப்பின் மூலம் காச நோய்க்கு எதிரான போரில் இந்தியா வெற்றிபெறும். காச நோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

|

நண்பர்களே!

சுகாதார சேவைகளை காசி நகருக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது சுகாதார கண்காணிப்புப் பிரிவு  இயக்கப்பட்டு இருப்பதையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள  குழந்தைகள் நல நிறுவனத்தில்  நவீனமயமாக்கப்பட்ட ரத்தவங்கி, பன்னோக்கு மருத்துவ வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டு இருப்பதையும், பண்டிட் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதையும் நான் சுட்டிக்காட்டுகிறேன். இதேபோல், கபீர் சௌரா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, டயாலிசஸ் வசதிகள், சி டி ஸ்கேன் வசதிகள் என காசி நகரத்தின் கிராமப்பகுதிகள் அனைத்திலும் சகாதார வசதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. வாரணாசியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க ஏதுவாக 70-க்கும் மேற்பட்ட மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

|

இதுவரையிலான தேசத்தின் அனுபவம், மனவலிமை,  நிபுணத்துவம் ஆகியவற்றை பயன்படுத்தி காசநோயை இந்தியாவில் இருந்து அறவே ஒழிக்கவேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு அவற்றின் தேவைக்கேற்ப தொடர்ந்து உதவ இந்தியா, எப்போதுமே தயாராக உள்ளது.  காசநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒவ்வொருவரின் முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றிபெறும்.  நம்முடைய இன்றைய முயற்சிகள் நமது பாதுகாப்பான எதிர்காலத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும் என நம்புகிறேன். நமது எதிர்கால சந்ததியினரிடம்  ஆரோக்கியமான உலகத்தை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. மிக்க நன்றி.

 

  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 27, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 12, 2024

    🙏🏻🙏🏻🙏🏻👏🏻
  • ज्योती चंद्रकांत मारकडे February 11, 2024

    जय हो
  • Sanjay March 28, 2023

    नटराज 🖊🖍पेंसिल कंपनी दे रही है मौका घर बैठे काम करें 1 मंथ सैलरी होगा आपका 3000 एडवांस 1000✔मिलेगा पेंसिल पैकिंग करना होगा खुला मटेरियल आएगा घर पर माल डिलीवरी पार्सल होगा अनपढ़ लोग भी कर सकते हैं पढ़े लिखे लोग भी कर सकते हैं लेडीस 😍भी कर सकती हैं जेंट्स भी कर सकते हैं, 8530960902Call me 📲📲 ✔ ☎व्हाट्सएप नंबर☎☎ आज कोई काम शुरू करो 24 मां 🚚डिलीवरी कर दिया जाता है एड्रेस पर✔✔✔ 8530960902Call me
  • Vinay Jaiswal March 27, 2023

    जय हो नमों नमों
  • Argha Pratim Roy March 25, 2023

    JAY HIND ⚔ JAY BHARAT 🇮🇳 ONE COUNTRY 🇮🇳 1⃣ NATION🛡 JAY HINDU 🙏 JAY HINDUSTAN ⚔️
  • Tribhuwan Kumar Tiwari March 25, 2023

    वंदेमातरम
  • PRATAP SINGH March 25, 2023

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 वंदे मातरम् वंदे मातरम् 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
'Operation Sindoor on, if they fire, we fire': India's big message to Pakistan

Media Coverage

'Operation Sindoor on, if they fire, we fire': India's big message to Pakistan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi's address to the nation
May 12, 2025
QuoteToday, every terrorist knows the consequences of wiping Sindoor from the foreheads of our sisters and daughters: PM
QuoteOperation Sindoor is an unwavering pledge for justice: PM
QuoteTerrorists dared to wipe the Sindoor from the foreheads of our sisters; that's why India destroyed the very headquarters of terror: PM
QuotePakistan had prepared to strike at our borders,but India hit them right at their core: PM
QuoteOperation Sindoor has redefined the fight against terror, setting a new benchmark, a new normal: PM
QuoteThis is not an era of war, but it is not an era of terrorism either: PM
QuoteZero tolerance against terrorism is the guarantee of a better world: PM
QuoteAny talks with Pakistan will focus on terrorism and PoK: PM

நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் திறனையும் அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம்.

நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது உளவுத்துறையினருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.

நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ஆப்ரேஷன் சிந்தூரின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு அன்னைக்கும், ஒவ்வொரு சகோதரிக்கும் மற்றும் ஒவ்வொரு மகளுக்கும் இந்த பராக்கிரமத்தை சமர்ப்பிக்கிறேன்.

நண்பர்களே, ஏப்ரல் 22ம் தேதி பகல்காமில் தீவிரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்கவந்த குற்றமற்ற அப்பாவி குடிமகன்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு,,,, அவர்களது குடும்பத்திற்கு முன்னே,,,, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர்.

இது தீவிரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும்

ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும்

ஒரே குரலில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின.

நாங்கள் தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம்

இன்று ஒவ்வொரு தீவிரவாதியும், தீவிரவாதத்தினால் ஏற்படும் தொல்லையை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்த செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

நண்பர்களே,

ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு ‍பெயர் மட்டுமல்ல

இந்த நாட்டின் கோடி கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு

ஆப்ரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி

மே 6 ம் தேதி இரவு, மே 7 ம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள்.

இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது

அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீது சரியாக தாக்குதல் நடத்தினார்கள்

தீவிரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, பாரதம் இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள்

ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது

அடிப்படையான முடிவு எடுக்கும்போது, அது சரியான முடிவுகளை கொண்டுவந்து தருகிறது

பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது பாரதம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது,

பாரதம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபெடியானது.

பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற தீவிரவாதிகளின் வாழ்விடங்கள், உலக தீவிரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கியது

உலகில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால்,

செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும்

லண்டன் பாதாள ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது பாரதத்தில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய தீவிரவாத தாக்குதலாக இருக்கட்டும்

இவற்றின் தொடர்பு எப்படியாவது இந்த தீவிரவாத முகாம்களோடு இணைந்திருந்தது

தீவிரவாதிகள் நமது சசோதரிகளின் நெற்றி குங்குமத்தை அழித்தனர். இதனால் பாரதம் தீவிரவாதத்தின் தலைமை பீடத்தை இப்போது அழித்திருக்கிறது.

பாரதத்தின் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான கொடுமையான தீவிரவாதிகள் இறந்திருக்கிறார்கள்.

தீவிரவாதத்தின் பல கிளைகள்

கடந்த 25-30 ஆண்டுகளாக வெளிப்படையாக பாகிஸ்தானில் உலாவி வருகிறார்கள்.

இவர்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள்.

அவர்களை பாரதம் ஒரே அடியில் அழித்து விட்டது.

நண்பர்களே,

பாரதத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப்பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டது.

தோல்வி மனப்பான்மையில் வீழ்ந்து விட்டது.

நிலைகுலைந்து போய் விட்டது.

இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கை எடுத்தது.

தீவிரவாதத்தின் மீது பாரதத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை பாரதத்தின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது.

இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது.

ஆனால், பாரதம் பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.

பாரதத்தின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தானின் விமானப்படையின் ஏர் பஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம்.

இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது

பாரதம் முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

எனவே,

பாரதத்தின் தாக்குதல் செயல்பாடுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேட தொடங்கியது

பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என வேண்டியது.

மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10 ம் தேதி மதியத்திற்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத்தளபதி நம்முடைய ராணுவத்தளபதியோடு தொடர்பு கொண்டார்.

அதுவரை நாம் தீவிரவாத கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் அழித்து விட்டோம்.

தீவிரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம்.

பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த தீவிரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம்.

இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது,

அதாவது, அவர்களது தரப்பிலிருந்து தீவிரவாத தாக்குதலோ, அல்லது ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது,

உடனே, பாரதம் அதை பற்றி யோசனை செய்தது.

நான் மீண்டும் சொல்கிறேன்.

பாகிஸ்தானின் தீவிரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிதுகாலத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.

வருகிற நாட்களில்

பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம்.

அது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம்.

நண்பர்களே,

பாரத்தின் மூன்று படைகளும், நம்முடைய விமானப்படை, நம்முடைய தரைப்படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப்படை, பாரதத்தின் துணை ராணுவப்படை அனைத்தும் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன

சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆப்ரேஷன் சிந்தூர் பாரதத்தின் வழிமுறையாகி விட்டது.

ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது.

ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய தரக்கட்டுப்பாடு உருவாகி இருக்கிறது.

முதலில், பாரதத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.

நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம்.

தீவிரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இரண்டாவதாக, பாரதம் அணுஆயுத தாக்குதல் என்ற மிரட்டலையெல்லாம் பொருத்துக்கொள்ளாது.

அணுஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற தீவிரவாத முகாம்கள் மீது பாரதம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்

மூன்றாவதாக, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் தீவிரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், உலகம் பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று பார்த்திருக்கிறது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது,

பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர்.

ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் தீவிரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது.

நாங்கள் பாரதம் மற்றும் எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம்.

நண்பர்களே, யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம்.

மேலும், இந்த முறை ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது.

நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிக பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.

மேலும்,

நியு ஏஜ் வார் பேரில் எங்களது திறமையை காண்பித்திருக்கிறோம்.

இந்த ஆப்ரேஷன் மூலமாக

நம்முடைய இந்தியாவிலேயே தயாரிப்போம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் திறமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது

21 ம் நூற்றாண்டின் போர் முறைகளில் இந்தியாவின் போர்க்கருவிகள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது

நண்பர்களே

இந்த மாதிரியான தீவிரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்

நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும்

உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல, ஆனால் இந்த யுகம் தீவிரவாதத்திற்கானதும் அல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான Zero Tolerance, ஒரு நல்ல உலகத்திற்கு உறுதி அளிக்கிறது

நண்பர்களே

பாகிஸ்தானின் ராணுவம், பாகிஸ்தானின் ஆட்சி எந்த வகையில் தீவிரவாதத்திற்கு துணைபோகின்றதோ அது ஒருநாள் பாகிஸ்தானை முடிவுக்கு கொண்டுவரும்

பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தம் நாட்டில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை சுத்தப்படுத்தவேண்டும்

இதைதவிர, அமைதிக்கு வேறு வழியே இல்லை

பாரதத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது

தீவிரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருங்கே செல்லவியலாது

தீவிரவாதமும், வாணிகமும் ஒருங்கே செல்லவியலாது

மேலும், தண்ணீரும், ரத்தமும் ஒரேசேர பாய முடியாது

நான் இன்று உலக சமுதாயத்திற்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

எங்களுடைய அறிவிக்கப்பட்ட நீதி என்னவென்றால்,

பாகிஸ்தானுடன் ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால் அது தீவிரவாதம் பற்றிதான் இருக்கும்

ஒருவேளை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற காஷ்மீரை பற்றியதாக இருக்கும்

அன்புக்குரிய நாட்டுமக்களே

இன்று புத்த பூர்ணிமா

பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையை காட்டியிருக்கிறார்

அமைதியின் பாதை பலத்தோடுதான் செல்கிறது

மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும்

ஒவ்வொரு பாரதவாசியும் அமைதியோடு வாழ வேண்டும்

வளர்ச்சியடைந்த பாரதம் என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும்

இதற்காக பாரதம் சக்திசாலி நாடாக இருக்கவேண்டியது அவசியம்

மேலும் ‍தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும்

மேலும் கடந்த சில நாட்களில் பாரதம் இதைதான் செய்திருக்கிறது

நான் மீண்டும் ஒருமுறை பாரதத்தின் ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்

இந்த பாரத குடிமக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன்

நன்றி

பாரத் மாதாகி ஜெய்

பாரத் மாதாகி ஜெய்

பாரத் மாதாகி ஜெய்