Quoteஇத் திட்டம் கைவினைஞர்கள் மற்றும் சிறு வணிகங்களுடன் தொடர்புடையவர்களுக் கைக்கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது..
Quoteஇந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Quote“உள்ளூர் கைவினைப்பொருட்கள் தயாரிப்பில் சிறு கைவினைக் கலைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் கவனம் செலுத்துகிறது”
Quote" பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, அவர்களின் வளமான மரபுகளைப் பாதுகாக்கிறது"
Quote"திறமையான கைவினைக் கலைஞர்கள் தற்சார்பு இந்தியாவின் அடையாளங்கள்; அவர்களை புதிய இந்தியாவின் கைவினைக் கலைஞர்கள் என்று அரசு கருதுகிறது"
Quote"கிராமத்தின் ஒவ்வொரு பிரிவையும் அதன் வளர்ச்சிக்காக மேம்படுத்துவது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவசியம்"
Quote"தேசத்தின் கைவினைக் கலைஞர்களின் தேவைகளுக்கு ஏற்ப நமது திறன் உட்கட்டமைப்பு முறையை மறுசீரமைக்கப்பட வேண்டும்"
Quote"இன்றைய கலைஞர்கள் நாளைய தொழில்முனைவோராக முடியும்"
Quote"மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாறும் போது கைவினைஞர்கள் வலு பெறுவர்"

வணக்கம்!

கடந்த சில நாட்களாகபட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாகஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிறகும் பங்குதாரர்களிடம் பட்ஜெட் குறித்துப் பேசுவதை நாங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் கூடியவரை விரைவாகவும்  கவனம் செலுத்தும் வகையிலும் பட்ஜெட்டை எவ்வாறு அமல்படுத்த வேண்டும்பங்குதாரர்கள் என்ன ஆலோசனைகளை வழங்குகிறார்கள்அவர்களின் பரிந்துரைகளை அரசு எவ்வாறு செயல்படுத்த வேண்டும்என்பதற்கான சிந்தனை அமர்வுகள் மிக நன்றாக நடக்கின்றன. பட்ஜெட்டுடன் நேரடித் தொடர்புள்ள அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில்துறையினருடனும் சங்கங்களுடனும் விவசாயிகள்பெண்கள்இளைஞர்கள்பழங்குடியினர்நமது தலித் சகோதர சகோதரிகளுடனும் மற்றும் ஆயிரக்கணக்கான பங்குதாரர்களுடனும் கலந்துரையாடியதில் சிறந்த ஆலோசனைகள் வெளிவந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அரசிற்கும் பயனுள்ள ஆலோசனைகள் கிடைத்துள்ளன. மேலும்இம்முறை பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில்பட்ஜெட்டில் என்ன இருந்திருக்க வேண்டும் அல்லது இருந்திருக்கக் கூடாது என்று விவாதிக்காமல்இந்த பட்ஜெட்டை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வழிகள் குறித்து அனைத்துப் பங்குதாரர்களும் திட்டவட்டமாக விவாதித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பிரதமரின்  விஸ்வகர்மா திறன் கௌரவிப்புத் திட்டம்  அல்லது சுருக்கமாக  பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது  இந்த சிந்தனையின் விளைவு. இந்த பட்ஜெட்டில் பிரதமரின் விஸ்வகர்மா திட்ட அறிவிப்பு பரவலான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளதுஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நண்பர்களே!

கைவினைஞர்கள்உள்ளூர் கைவினைப் பொருட்களை சிறிய அளவில் உற்பத்தி செய்வதிலும்பொதுமக்களுக்கு அவர்களின் ஈர்ப்பைத் தக்கவைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாகநம் நாட்டில் அவர்களின் பங்களிப்பு  சமூகத்தின் தயவில் விடப்பட்டதுமேலும் அவர்களின் பங்கு குறைத்து மதிப்பிடப்பட்டது.

இப்போது  திறன் உள்கட்டமைப்பு அமைப்பை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நாம் மாற்றியமைக்க வேண்டும்.  முத்ரா திட்டம்  மூலம் வங்கி உத்தரவாதம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை அரசு தற்போது வழங்குகிறது. இந்தத் திட்டம் நமது  கைத்தொழில் செய்யும்  நண்பர்களுக்கு அதிகபட்ச நன்மையை உறுதிசெய்ய வேண்டும். நமது டிஜிட்டல் கல்வியறிவு இயக்கங்களில்கைத்தொழில் செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நண்பர்களே!

இன்றைய கைவினைஞர்களை நாளைய  தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் நோக்கம். இதை மனதில் வைத்துகவர்ச்சிகரமான வடிவமைப்புபேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் மூலம் அவர்கள் தயாரிக்கும் தயாரிப்புகளை மேம்படுத்தவும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதில்வாடிக்கையாளர்களின் தேவைகளும் கவனிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் உள்ளூர் சந்தையை மட்டுமல்லஉலகச் சந்தையையும் குறிவைத்து வருகிறோம். இன்று இங்கு கூடியிருக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் நமது கைவினைஞர் நண்பர்களுடன் கைகோர்த்துஅவர்களின் விழிப்புணர்வை அதிகரித்துஅவர்கள் முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்காகநீங்கள் அனைவரும் முடிந்தவரை இந்தக்  கைவினைஞர்களுடன் இணைந்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்மேலும் அவர்களை அணுகி அவர்களின் கற்பனைகளுக்கு சிறகுகளை அளியுங்கள்.

நண்பர்களே!

கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம்தான்  நாம் அவர்களை மேம்படுத்த முடியும். அவர்களில் பலர் நமது எம்எஸ்எம்இ துறைக்குப் பொருட்கள் வழங்குவோராகவும்தயாரிப்பாளர்களாகவும் மாறலாம். கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியை அவர்களுக்கு வழங்குவதன் மூலம்பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக அவர்களை உருவாக்க முடியும். இந்த மக்களை அவர்களின் தேவைகளுடன் இணைப்பதன் மூலம் தொழில்துறை உலகம் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அவர்களுக்குத் திறன் மற்றும் தரமான பயிற்சியையும் தொழில்துறை வழங்க முடியும்.

நண்பர்களே!

இன்று இணையவழிக் கருத்தரங்கின் கடைசி அமர்வு. இதுவரைபட்ஜெட்டின் வெவ்வேறு பகுதிகள் குறித்து 12 இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். இந்நிலையில்நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கவுள்ளது. அனைத்து எம்.பி.க்களும் புதிய நம்பிக்கை மற்றும் புதிய ஆலோசனைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள். பட்ஜெட் நிறைவேற்றப்படும் வரை செயல்பாட்டில் புதிய உற்சாகம் காணப்படும். இந்தச் சிந்தனை அமர்வுகள் தனித்துவமான முயற்சியாகும்இது ஒரு பயனுள்ள முயற்சிமொத்த நாடும் ஒவ்வொரு மாவட்டமும் இதனுடன் இணைந்திருக்கின்றன. நேரத்தை ஒதுக்கி இந்த இணையவழிக் கருத்தரங்கை  செழுமைப்படுத்தியவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இன்று வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும்இதுவரை இணையவழிக் கருத்தரங்குகளை நடத்திஅதை முன்னெடுத்துச் சென்ற மற்றும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s fruit exports expand into western markets with GI tags driving growth

Media Coverage

India’s fruit exports expand into western markets with GI tags driving growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
We remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan: Prime Minister
February 21, 2025

Appreciating the address of Prime Minister of Bhutan, H.E. Tshering Tobgay at SOUL Leadership Conclave in New Delhi, Shri Modi said that we remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan.

The Prime Minister posted on X;

“Pleasure to once again meet my friend PM Tshering Tobgay. Appreciate his address at the Leadership Conclave @LeadWithSOUL. We remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan.

@tsheringtobgay”