Quoteதில்லி-வதோதரா விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteபிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் புதுமனை புகுவிழாவைத் தொடங்கிவைத்து பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteஜல் ஜீவன் இயக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Quoteஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 9 சுகாதார மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Quoteஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து இவ்வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Quoteஇந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்
Quote"குவாலியர் நிலம் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது"
Quote"இரட்டை என்ஜின் என்றால் மத்திய பிரதேசத்தின் இரட்டை வளர்ச்சி"
Quote"மத்திய பிரதேசத்தை இந்தியாவின் முதல் 3 மாநிலங்களுக்குள் கொண்டு செல்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது"
Quote"பெண்களுக்கு அதிகாரமளித்தல் வாக்கு வங்கி என்பதை விட தேசிய மறுசீரமைப்பு மற்றும் தேசிய நலனுக்கான ஒ
Quote"குவாலியர் நிலம் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது" என்று கூறிய பிரதமர், மண்ணின் மைந்தர்கள் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
Quoteபொறுப்புள்ள குடிமகனாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இதுவே மத்தியப் பிரதேசத்தை முதல் 3 மாநிலங்களின் இடத்திற்குக் கொண்டு செல்லும் என்றார்.
Quoteஇன்றைய ஜல் ஜீவன் திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர், இந்த வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க இது உதவும் என்றார்.
Quoteஎங்களால் பின்னோக்கிப் பார்க்க முடியாது என்றார்.

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

என் குடும்ப உறுப்பினர்களே,

நம்மைப் போன்ற கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டின் விடுதலைக்காகப் போராடும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் பாரதத்தை வளர்ச்சியடையச் செய்து, இந்தியாவை வளமாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் உள்ளது. இன்றும், இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்காக மீண்டும் உங்கள் மத்தியில் குவாலியருக்கு வந்துள்ளேன். தற்போது, சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

 

|

திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்காக திரைச்சீலைகள் ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தப்படுவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். திரைச்சீலைகள் பல முறை உயர்த்தப்பட்டதால் கைதட்டி களைத்துப் போனீர்கள். ஒரு வருடத்தில் எந்த அரசும் செய்ய முடியாத பல தொடக்க விழாக்களையும், அடிக்கல் நாட்டு விழாக்களையும் இன்று நமது அரசு செய்து வருகிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், மக்கள் கைதட்டி சோர்வடைகிறார்கள். இவ்வளவு வேலைகளைச் செய்யும் திறன் எங்களிடம் உள்ளது.

கற்பனை செய்து பாருங்கள் நண்பர்களே, 9 ஆண்டுகளில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா 5-வது பெரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளது. ஆனால், இது நடக்கவில்லை என்பதை நிரூபிக்க இந்த வளர்ச்சிக்கு எதிரானவர்கள் முயற்சிக்கின்றனர். அடுத்த ஆட்சியில், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். இதுவும் அதிகார வெறி கொண்ட சிலரை ஏமாற்றமடையச் செய்கிறது.

இந்த வளர்ச்சிக்கு எதிரானவர்களுக்கு நாடு 6 தசாப்தங்களை வழங்கியது. 60 ஆண்டுகள் என்பது குறுகிய காலம் அல்ல. 9 ஆண்டுகளில் இவ்வளவு வேலையைச் செய்ய முடியும் என்றால், 60 ஆண்டுகளில் எவ்வளவு செய்திருக்க முடியும்! அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே, இது அவர்களின் தோல்வி. அப்போது ஏழைகளின் உணர்வுகளுடன் விளையாடி வந்த அவர்கள், இன்றும் அதே விளையாட்டை விளையாடி வருகின்றனர். அப்போது அவர்கள் சாதியின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தி வந்தனர், இன்றும் அதே பாவத்தை செய்கிறார்கள். அப்போது அவர்கள் ஊழலில் மூழ்கி, இன்று மேலும் மேலும் ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர். அந்தக் காலத்தில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைப் புகழ்வதில் மும்முரமாக இருந்தனர், இன்றும் அவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க அதையே செய்கிறார்கள். அதனால்தான் நாட்டின் பெருமையைப் புகழ்வதை அவர்கள் விரும்புவதில்லை.

 

|

ஏழை, தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி குடும்பங்களுக்கு பக்கா வீடுகளை மோடி உறுதி செய்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் இதுவரை 4 கோடி குடும்பங்களுக்கு பக்கா வீடுகள் கிடைத்துள்ளன. ம.பி.,யிலும், இதுவரை லட்சக்கணக்கான வீடுகள் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன; இன்றும், ஏராளமான வீடுகள் திறக்கப்பட்டுள்ளன. இவர்கள் தில்லியில் மத்திய அரசை ஆட்சி செய்தபோது, ஏழைகளுக்கு வீடு வழங்குகிறோம் என்ற பெயரில் கொள்ளை மட்டுமே நடந்தது. இவர்கள் கட்டிய வீடுகள் வசிப்பதற்கு கூட தகுதியற்றவை. அந்த வீடுகளில் கால் பதிக்காத லட்சக்கணக்கான பயனாளிகள் நாடு முழுவதும் இருந்தனர். ஆனால், இன்று கட்டப்படும் வீடுகளில், வீடு கட்டும் விழாக்கள் கோலாகலமாக நடக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு பயனாளியும் அவரவர் வசதிக்கேற்ப இந்த வீடுகளை கட்டி வருகின்றனர். அவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் வீடுகளை கட்டி வருகின்றனர்.

எங்கள் அரசு, தொழில்நுட்பம் மூலம், பணிகளை கண்காணித்து, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் அனுப்புகிறது. திருட்டு இல்லை, பணக் கசிவு இல்லை, ஊழல் இல்லை. வீடு கட்டும் பணி சுமூகமாக நடக்கும். முன்பெல்லாம் வீடு என்ற பெயரில் நான்கு சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால் இன்று கட்டப்படும் வீடுகளில் கழிப்பறை, மின்சாரம், குழாய் நீர், உஜ்வாலா எரிவாயு என அனைத்தும் கிடைக்கிறது. இன்று, குவாலியர் மற்றும் ஷியோபூர் மாவட்டங்களுக்கான முக்கியமான நீர் தொடர்பான திட்டங்களுக்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது இந்த வீடுகளுக்கு தண்ணீர் வழங்கவும் உதவும்.

என் குடும்ப உறுப்பினர்களே,

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது இந்தியாவின் வாக்கு வங்கி அல்ல, மாறாக தேசிய நலன் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான அர்ப்பணிப்பு இயக்கம். கடந்த காலங்களில் பல அரசாங்கங்களை நாம் பார்த்துள்ளோம். மக்களவையிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு குறித்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து நமது சகோதரிகளிடம் மீண்டும் மீண்டும் வாக்கு கேட்டனர். ஆனால், நாடாளுமன்றத்தில் நடந்த சதியால், சட்டம் இயற்றப்படவில்லை. அது மீண்டும் மீண்டும் நிறுத்தப்பட்டது. ஆனால் சகோதரிகளுக்கு மோடி உத்தரவாதம் அளித்தார். மோடியின் உத்தரவாதம் என்பது ஒவ்வொரு உத்தரவாதத்தையும் நிறைவேற்றுவதாகும்.

 

|

இன்று நாரி சக்தி வந்தனா அதினியம் நனவாகி விட்டது. வளர்ச்சிப் பயணத்தில் நமது பெண்களின் பங்களிப்பை அதிகரித்து முன்னேற்றப் பாதையை மேலும் திறப்பதற்காக நாம் அதே திசையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதை இந்த நிகழ்விலும் எதிர்காலத்திற்காகவும் நான் கூறுகிறேன்.

சகோதர சகோதரிகளே,

இன்று நாம் செயல்படுத்தியுள்ள அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் உத்வேகம் பெறப் போகின்றன.

எப்போதும் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீது மோடி கவனம் செலுத்துகிறார். அவர்களை மோடி வணங்குகிறார். இத்தனை ஆண்டுகளாக நாட்டின் சிறு விவசாயிகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இந்த சிறு விவசாயிகள் குறித்த தனது கவலைகளை மோடி வெளிப்படுத்தினார். பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறு விவசாயிகளின் கணக்கிற்கும் எங்கள் அரசு இதுவரை ரூ .28,000 அனுப்பியுள்ளது. நம் நாட்டில் 2.5 கோடி சிறு விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிடுகின்றனர். முன்பெல்லாம் சிறு விவசாயிகள் சிறுதானியங்கள் பயிரிடுவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சிறுதானியங்களுக்கு 'ஸ்ரீ-அன்னா' என்ற அடையாளத்தைக் கொடுத்து, உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வது நமது அரசுதான்.

 

|

நண்பர்களே,

எங்கள் அரசாங்கத்தின் இந்த உணர்வுக்கு மற்றொரு முக்கிய சான்று பிரதமர் விஸ்வகர்மா திட்டம் ஆகும். நமது குயவர் சகோதர சகோதரிகள், கொல்லர்கள், தச்சர்கள், பொற்கொல்லர்கள், மாலை தயாரிப்பாளர்கள், தையல் வேலை செய்யும் சகோதர சகோதரிகள், சலவைத் தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பல நண்பர்கள் நம் வாழ்க்கையின் முக்கிய தூண்களாக உள்ளனர். அவர்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கவே முடியாது. சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு எங்கள் அரசாங்கம் அவர்களை கவனித்துக் கொண்டுள்ளது.

 

|

இந்த நண்பர்கள் சமூகத்தில் பின்தங்கி விட்டனர். ஆனால் இப்போது அவர்களை முன்னிறுத்த மோடி ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நண்பர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு ஆயிரக்கணக்கான ரூபாய் வழங்கும். நவீன உபகரணங்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும். இந்த நண்பர்களுக்கு லட்சக்கணக்கில் குறைந்த வட்டியில் கடன்களும் வழங்கப்படுகின்றன. விஸ்வகர்மா நண்பர்களுக்கு கடன் வழங்குவதற்கான உத்தரவாதத்தை மோடியும், மத்திய அரசும் கொடுத்துள்ளன.

 

|

இந்த நண்பர்கள் சமூகத்தில் பின்தங்கி விட்டனர். ஆனால் இப்போது அவர்களை முன்னிறுத்த மோடி ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நண்பர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு ஆயிரக்கணக்கான ரூபாய் வழங்கும். நவீன உபகரணங்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும். இந்த நண்பர்களுக்கு லட்சக்கணக்கில் குறைந்த வட்டியில் கடன்களும் வழங்கப்படுகின்றன. விஸ்வகர்மா நண்பர்களுக்கு கடன் வழங்குவதற்கான உத்தரவாதத்தை மோடியும், மத்திய அரசும் கொடுத்துள்ளன.

அதனால்தான் சகோதர சகோதரிகளே, இந்த வளர்ச்சியின் வேகத்தை முன்னெடுத்துச் செல்லவும், அதை விரைவாக அதிகரிக்கவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், இன்று நீங்கள் என்னை ஆசீர்வதிக்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளீர்கள்! குவாலியர்-சம்பல் பிராந்தியத்தின் நண்பர்கள் என்னை ஆசிர்வதிக்க இங்கு வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்-

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

மிகவும் நன்றி

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India achieves 20pc ethanol blending target 5 years ahead of schedule: ISMA

Media Coverage

India achieves 20pc ethanol blending target 5 years ahead of schedule: ISMA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets countrymen on Kargil Vijay Diwas
July 26, 2025

Prime Minister Shri Narendra Modi today greeted the countrymen on Kargil Vijay Diwas."This occasion reminds us of the unparalleled courage and valor of those brave sons of Mother India who dedicated their lives to protect the nation's pride", Shri Modi stated.

The Prime Minister in post on X said:

"देशवासियों को कारगिल विजय दिवस की ढेरों शुभकामनाएं। यह अवसर हमें मां भारती के उन वीर सपूतों के अप्रतिम साहस और शौर्य का स्मरण कराता है, जिन्होंने देश के आत्मसम्मान की रक्षा के लिए अपना जीवन समर्पित कर दिया। मातृभूमि के लिए मर-मिटने का उनका जज्बा हर पीढ़ी को प्रेरित करता रहेगा। जय हिंद!