Quoteஅறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை
Quote“ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரேதேசம், குஜராத் மக்கள் பாரம்பரியத்தை மங்கார் பகிர்கிறது”
Quote“குரு கோவிந்த் போன்ற பெரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் லட்சியத்தின் பிரதிநிதிகள்”
Quoteபழங்குடியினர் சமுதாயம் அல்லாமல் இந்தியாவின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் நிறைவடையாது
Quoteமங்காரின் முழுமையான வளர்ச்சிக்கு ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகியவை இணைந்து பாடுபடவேண்டும்

வணக்கம்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலகட்டத்தில், மங்கர் தாம் பகுதியில் நாம் அனைவரும் ஒன்றுகூடியிருப்பது, புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில், மங்கர் தாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர்  பிரிட்டிஷ்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த இடம், தங்கள் இன்னுயிரை ஈந்த பழங்குடியின மக்களின் தேசப்பற்றை பிரதிபலிப்பதாகக் கூறினார்.

நண்பர்களே,

சாலைகள் உருவாக்கப்பட்டு இந்த பகுதி வளர்ச்சி கண்டிருப்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல, சமூக சீர்திருத்தவாதியும்,சுதந்திரப் போராட்ட தியாகியுமான குரு கோவிந்-தின் கொள்கைகளை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று பிரதமர் குறிப்பிட்டார்.

|

நண்பர்களே,

நேற்றையை இந்தியா, இன்றைய இந்தியா மற்றும் எதிர்கால இந்தியாவின் வரலாறு, பழங்குடியின சமூகத்தினர் இல்லாமல் முடிவு பெறாது என்றார் பிரதமர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின், அனைத்துப் பக்கங்களிலும் பழங்குடியின சமூகத்தினரின் வீரம் பொதிந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த நாடு, பழங்குடியின சமூகத்தினரின் தியாகத்திற்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், அந்த சமூகம், இயற்கை, சுற்றுச்சூழல், கலாச்சாரம், பண்பாடு மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்தக் குணாதிசயத்தையும் பாதுகாத்திருக்கிறது என்றார்.  எனவே இந்த நாடு பழங்குடியின சமூகத்தினரின் உயரியப் பங்களிப்புக்கு நன்றிசொல்லவேண்டிய நேரம் இது. இந்த உத்வேகம்தான், கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமளித்தது என்று பிரதமர் கூறினார்.

இன்று முதல் அடுத்த சில நாட்களில், பக்வான் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளான ஜன்ஜாதிய கவுரவ் திவஸ் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சுதந்திரப்  போராட்ட பழங்குடியின வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அருங்காட்சிகயங்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

|

சகோதர சகோதரிகளே,

பல்வேறு பழங்குடி சமூகத்தினருக்கு சேவை செய்ய மத்திய அரசு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழங்குடியினத்தவர்களுக்கு தண்ணீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக,  பழங்குடியினர் நல்வாழ்வுத்திட்டம் தற்போது செயல்படுத்தப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போது வனப்பகுதிகள் மேம்படுத்தப் பட்டிருப்பதுடன்,  வனவளமும் பாதுகாக்கப்பட்டு, டிஜிட்டல் இந்தியாவிற்கு, பழங்குடியின மக்களின் பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

பழங்குடியின இளைய தலைமுறையினருக்கு திறன் மேம்பாட்டுடன் கூடிய நவீனகல்வி கிடைக்க ஏதுவாக, ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

|

நண்பர்களே,

அகமதாபாத்-உதய்பூர் ரயில் தடம் நேற்று முதல் அகலரயில்பாதையாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் ராஜ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதர-சகோதரிகள் பெரிதும் பயன் பெறுவார்கள். மேலும் ராஜஸ்தானில் உள்ள பெரும்பாலான பழங்குடியின பகுதிகள், குஜராத்தின் பழங்குடியினப் பகுதிகளுடன் இணைக்கப்படுவதுடன், தொழில் வளர்ச்சிக்கும் வித்திடும். அதேநேரத்தில், புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.

|

நண்பர்களே,

நாம் தற்போது  மங்கர்தாமின் முழுமையான வளர்ச்சிக்கு வித்திடவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அதற்கு, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குரு கோவிந்-தின் நினைவிடத்திற்கு, செல்ல ஏதுவாக, சாலைவழித்தடத்தை அமைக்க வேண்டும் என இந்த 4 மாநில அரசுகளையும் கேட்டக்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Most NE districts now ‘front runners’ in development goals: Niti report

Media Coverage

Most NE districts now ‘front runners’ in development goals: Niti report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
July 09, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது

 கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

நாடுகளால் வழங்கப்பட்ட விருதுகள்:

1. 2016, ஏப்ரலில் சௌதி அரேபியாவுக்கான அவரது பயணத்தின் போது, சௌதி அரேபியாவின் மிக உயரிய சிவில் விருது - மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.  கௌரவமிக்க இந்த விருது மன்னர்  சல்மான்வின் அப்துலாசிஸ் அவர்களால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

|

2. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய சிவில் விருதான ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காஸி அமீர் அமானுல்லா கான் விருது பிரதமர்  மோடிக்கு வழங்கப்பட்டது.

|

3. 2018- ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டபோது தி கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

|

4. 2019-ல், ஆர்டர் ஆஃப் சையது விருது  பிரதமருக்கு வழங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவில் விருதாகும்.

|

5. 2019-ல் ரஷ்யாவின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

6. வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் மிக உயரிய கௌரவமான ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குயிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இஸ்ஸூதின் விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

7. 2019-ல் கௌரவமிக்க மன்னர் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரினைசான்ஸ் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பஹ்ரைன் வழங்கியது.

|

8. ஒப்பற்ற சேவைகள் மற்றும் சாதனைகள் செய்தவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் விருதான லெஜியன் ஆஃப் மெரிட் அமெரிக்க அரசால் 2020-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

9. பூடானின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் ஜியால்போ விருது 2021 டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மிக உயரிய சிவில் விருதுகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் உள்ள கௌரவமிக்க அமைப்புகளால் பல விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.

1. சியோல் அமைதிப் பரிசு: மனித குலத்தின் நல்லிணக்கம், நாடுகளுக்கிடையே சமரசம் செய்தல், உலக சமாதானம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்ததன் மூலம் சிறப்பு பெறும் தனி நபர்களுக்கு சியோல் அமைதிப் பரிசு, கலாச்சார அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. கௌரவமிக்க இந்த விருது 2018-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

2. புவிக்கோளின் சாம்பியனுக்கான ஐநா விருது: இது ஐநா சபையின் மிக உயரிய சுற்றுச்சூழலுக்கான விருதாகும் உலகளாவிய அரங்கில் பிரதமர் மோடியின் துணிச்சலான சுற்றுச்சூழல் தலைமைத்துவத்தை அங்கீகரித்து . 2018-ல் ஐநா இதனை வழங்கியது.

|

3. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.

|

4. உலகளாவிய கோல்கீப்பர் விருது”: தூய்மை இந்தியா திட்டத்திற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால்  இந்த விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா பிரச்சாரத்தை “மக்கள் இயக்கமாக” மாற்றிய மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்த இந்தியர்களுக்கு இந்த விருதினைப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

|

5. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.