QuoteFlags off Varanasi-New Delhi Vande Bharat Express Train
QuoteLaunches Unified Tourist Pass System under Smart City Mission
Quote“I feel immense pride when the work of Kashi’s citizens is showered with praise”
Quote“UP prospers when Kashi prospers, and the country prospers when UP prospers”
Quote“Kashi along with the entire country is committed to the resolve of Viksit Bharat”
Quote“Modi Ki Guarantee Ki Gadi is a super hit as government is trying to reach the citizens, not the other way round”
Quote“This year, Banas Dairy has paid more than one thousand crore rupees to the farmers of UP”
Quote“This entire area of ​​Purvanchal has been neglected for decades but with the blessings of Mahadev, now Modi is engaged in your service”

நம: பார்வதி பதயே, ஹர ஹர மஹாதேவ்!

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் ஸ்ரீ கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத் சட்டமன்ற சபாநாயகரும் பனாஸ் பால்பண்ணையின் தலைவருமான திரு சங்கர் பாய் சவுத்ரி. மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிற பிரமுகர்கள் மற்றும் வாரணாசியின் எனது குடும்ப உறுப்பினர்களே!

பாபா சிவனின் இந்தப் புனித பூமியில் காசி மக்கள் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

என் காசி மக்களின் இந்த ஆர்வம் இந்தக் குளிர்காலத்திலும் சூழலை சூடாக்கியுள்ளது.

ஜி-20 மாநாட்டின் விருந்தினர்களாக இருந்தாலும் சரி, வாரணாசிக்கு வரும் விருந்தினர்களாக இருந்தாலும் சரி, வாரணாசி மக்களைப் பாராட்டும்போது, நானும் பெருமைப்படுகிறேன். காசி மக்கள் செய்த பணிகளை உலகமே பாராட்டும்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மகாதேவின் காசிக்கு எனது சேவையை வழங்குவதை நான் விரும்புகிறேன், என்னால் இன்னும் அதிகமாக செய்ய முடியும் என்று நான் உணர்கிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

காசி வளரும்போது, உ.பி.யும் வளர்ச்சி அடையும். உ.பி., வளர்ச்சி அடையும் போது, நாடும் வளர்ச்சி அடையும். இன்றும் அதே உத்வேகத்துடன் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

|

என் குடும்ப உறுப்பினர்களே,

இன்று காசி உட்பட முழு நாடும் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உறுதிபூண்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை ஆயிரக்கணக்கான கிராமங்களையும் ஆயிரக்கணக்கான நகரங்களையும் சென்றடைந்துள்ளது. இந்தப் பயணத்தில் கோடிக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர். இங்கே காசியில், இந்த  யாத்திரையின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. இந்த யாத்திரையில் ஓடும் வாகனத்தை மோடியின் உத்தரவாத வாகனம் என்று நாட்டு மக்கள் அழைக்கின்றனர்.   ஏழைகளின் நலன் மற்றும் மக்கள் நலனுக்கான மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் எந்த பயனாளியும் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம். முன்பெல்லாம் ஏழைகள் வசதிகளுக்காக அரசிடம் செல்வது வழக்கம். இப்போது மோடி அரசாங்கமே ஏழைகளிடம் செல்லும். அதனால், மோடியின் உத்தரவாத வாகனம் சூப்பர்ஹிட் ஆகிவிட்டது. காசியிலும் ஆயிரக்கணக்கான புதிய பயனாளிகள் அரசின் திட்டங்களைப் பெற்றுள்ளனர். சிலருக்கு ஆயுஷ்மான் கார்டுகள் கிடைத்தன, சிலருக்கு இலவச ரேஷன் கார்டுகள் கிடைத்தன, அல்லது பக்கா வீடு உத்தரவாதம் அளிக்கப்பட்டது, சிலருக்கு குழாய் நீர் இணைப்பு கிடைத்தது, சிலருக்கு இலவச எரிவாயு இணைப்பு கிடைத்தது. எந்த பயனாளியும் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி; ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும். இந்தப் பிரச்சாரத்தால் மக்கள் பெற்ற மிக முக்கியமான விஷயம் நம்பிக்கை. இத்திட்டங்களால் பயனடைந்தவர்கள் தங்கள் வாழ்க்கை இனி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளனர். என்றாவது ஒரு நாள் தங்களுக்கும் திட்டங்களின் பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை 2047 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் என்ற நாட்டின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.

குடிமக்களைத் தவிர நானும் பயனடைகிறேன். நான் இந்த லட்சிய யாத்திரையில் 2 நாட்களாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். நேற்று பள்ளி மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு என்ன நம்பிக்கை இருந்தது! பெண்கள் அவ்வளவு அழகான கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள்; சிலர் அறிவியலை விளக்கிக் கொண்டிருந்தார்கள். அங்கன்வாடி குழந்தைகள் பாடல்களைப் பாடி எங்களை மிக அற்புதமாக வரவேற்றனர். அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!  

 

|

என் குடும்ப உறுப்பினர்களே,

நவீன இணைப்பு மற்றும் அழகுபடுத்தல் காரணமாக ஏற்படும் மாற்றங்களை காசியின் உதாரணத்துடன் நாம் காணலாம். காசி ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகவும் ஆன்மீக மையமாகவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இங்கு சுற்றுலாவும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, சுற்றுலா மூலம் காசியில் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீ காசி விஸ்வநாதர் தாம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டதிலிருந்து, இதுவரை 13 கோடி பேர் பாபா விஸ்வநாதரை தரிசித்துள்ளனர். பனாரஸுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சுற்றுலாப் பயணி வரும்போது, அவர் எதையாவது எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். ஒவ்வொரு சுற்றுலா பயணியும் காசியில் அவரவர் திறனுக்கு ஏற்ப ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.1,000, ரூ.5,000 செலவழிக்கின்றனர். அந்த பணம் உங்கள் பாக்கெட்டில் சேரும். நாம் முதலில் நம் நாட்டில் உள்ள 15 நகரங்களுக்குச் செல்ல வேண்டும், பின்னர் வேறு இடங்களுக்குச் செல்வது பற்றி யோசிக்க வேண்டும் என்று செங்கோட்டையின்  கொத்தளத்திலிருந்து நான் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். முன்பு சிங்கப்பூர் அல்லது துபாய் செல்ல நினைத்தவர்கள் இப்போது முதலில் தங்கள் சொந்த நாட்டை சுற்றிப்பார்க்கப் போகிறார்கள், முதலில் தங்கள் நாட்டைப் போய்ப் பார்க்குமாறு தங்கள் குழந்தைகளைச் சொல்கிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வெளிநாடுகளில் செலவழித்த பணம் தற்போது சொந்த நாட்டிலேயே செலவழிக்கப்படுகிறது.

 

|

சகோதர சகோதரிகளே,

சுற்றுலா வளர்ந்தால், அனைவரும் சம்பாதிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வாரணாசிக்கு வரும்போது, ஹோட்டல் உரிமையாளர்களும் பணம் சம்பாதிக்கிறார்கள். வாரணாசிக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் டூர்-டாக்ஸி ஆபரேட்டர்கள், எங்கள் படகோட்டிகள் மற்றும் எங்கள் ரிக்ஷா இழுப்பவர்களுக்கு ஓரளவு வருமானத்தை வழங்குகிறார்கள். இங்கு சுற்றுலா அதிகரித்துள்ளதால், சிறு, குறு வியாபாரிகள் பெரும் பயனடைந்துள்ளனர். சரி, ஒன்று சொல்லுங்கள். கோடோலியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா இல்லையா?

|

நண்பர்களே,

காசி மக்களின் வருமானத்தை அதிகரிக்க, இங்குள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்க எங்கள் அரசு அயராது உழைத்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாரணாசியில் இன்று ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் சிஸ்டம் - காசி தரிசனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் இனி வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல தனி டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு பாஸ் மூலம் எல்லா இடங்களிலும் நுழைய முடியும்.

|

இன்று, கங்கையில் பல படித்துறைகளை புனரமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. நவீன பேருந்து நிழற்குடைகள் அல்லது விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் கட்டப்படும் நவீன வசதிகள் எதுவாக இருந்தாலும், இது வாரணாசிக்கு வரும் மக்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும்.

 

|

நண்பர்களே,

உங்கள் அனைவரின் முயற்சியாலும், வாரணாசியில் நவீன பனாஸ் பால்பண்ணை அல்லது அமுல் கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது, மேலும் இந்தப் பணிகள் அநேகமாக ஓரிரு மாதங்களில் முடிவடையும் என்று சங்கர் பாய் என்னிடம் கூறினார். வாரணாசியில் பனாஸ் டெய்ரி நிறுவனம் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க இந்த பால்பண்ணை பசு இனப்பெருக்கத்திற்கான பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறது. பனாஸ் பால்பண்ணை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பனாஸ் பால்பண்ணை ஆலைகள் ஏற்கனவே லக்னோ மற்றும் கான்பூரில் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு, பனாஸ் பால் பண்ணை உ.பி.யின் 4000 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ .1000 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் மற்றொரு முக்கியமான பணி இங்கு செய்யப்பட்டது. ஈவுத்தொகையாக, பனாஸ் பால் பண்ணை இன்று உ.பி.யின் பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ .100 கோடிக்கு மேல் டெபாசிட் செய்துள்ளது. இந்த சலுகைகளைப் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

|

என் குடும்ப உறுப்பினர்களே,

காசியில் பாயும் இந்த வளர்ச்சி அமிர்தம் இந்த பகுதி முழுவதையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். பூர்வாஞ்சல் பகுதி முழுவதும் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் மகாதேவின் ஆசீர்வாதத்துடன், இப்போது மோடி உங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. மோடி தனது மூன்றாவது இன்னிங்ஸில் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவேன் என்ற உத்தரவாதத்தை நாட்டிற்கு வழங்கியுள்ளார். இந்த உத்தரவாதத்தை நான் இன்று நாட்டுக்கு அளிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் காசி மக்களாகிய நீங்கள் அனைவரும் தான். நீங்கள் எப்போதும் என்னுடன் நிற்கிறீர்கள், எனது தீர்மானங்களை வலுப்படுத்துகிறீர்கள்.

வாருங்கள், மீண்டும் உங்கள் கைகளை உயர்த்தி சொல்லுங்கள் - நம: பார்வதி பதயே, ஹர ஹர மகாதேவ்.

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

  • sanjvani amol rode January 12, 2025

    jay shriram
  • sanjvani amol rode January 12, 2025

    jay ho
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩,,
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩,
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय मां भारती 🇮🇳
  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • Devendra Kunwar October 08, 2024

    BJP
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • Reena chaurasia September 09, 2024

    बीजेपी
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Over 28 lakh companies registered in India: Govt data

Media Coverage

Over 28 lakh companies registered in India: Govt data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 19 பிப்ரவரி 2025
February 19, 2025

Appreciation for PM Modi's Efforts in Strengthening Economic Ties with Qatar and Beyond