Quoteநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னத்தின் மாதிரியை திறந்துவைத்தார்
Quote"வரலாறு உருவாக்கப்படும் போது, வருங்கால சந்ததியினர் அதை நினைவில் வைத்துக் கொள்வதும், மதிப்பிடுவதும் மட்டுமல்லாமல், அதிலிருந்து தொடர்ந்து உத்வேகத்தையும் பெறுகிறார்கள்"
Quote"இந்த நாள் வருங்கால சந்ததியினரால் விடுதலையின் அமிர்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூரப்படும்"
Quote"செல்லுலார் சிறைச்சாலையின் அறைகளில் இருந்து, மிகுந்த வேதனையும், வலியும் நிறைந்த குரல்கள் இன்றும் கேட்கின்றன"
Quote"வங்கத்தில் இருந்து, தில்லியில் இருந்து, அந்தமான் வரை, நாட்டின் ஒவ்வொரு பகுதியும் நேதாஜியின் பாரம்பரியத்தை போற்றி வணங்குகிறது"
Quote"நமது ஜனநாயக அமைப்புகளுக்கு முன்னால் உள்ள நேதாஜியின் பிரமாண்ட சிலை மற்றும் கடமைப் பாதை நமது கடமைகளை நினைவூட்டுகின்றன."
Quote"கடல் பல்வேறு தீவுகளை இணைப்பது போல, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வு, அன்னை இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையையும் ஒன்றிணைக்கிறது"
Quoteநிகழ்ச்சியின் போது, ​​நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார்.
Quote"அந்த முன்னோடிகளின் வேதனை மற்றும் வலி மிகுந்த குரல்கள், இன்றும் செல்லுலார் சிறை அறைகளில் இருந்து கேட்கப்படுகின்றன" என்று அவர் கூறினார்.

நாட்டின் உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களே, அந்தமான் & நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர், ராணுவ தளபதி மற்றம் முப்படைகளின் தலைவர்கள், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், மற்றும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் ஆகிய அனைவருக்கும் வணக்கம்.

|

பராக்கிரம தினத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த உத்வேகம் அளிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இன்று ஒரு வரலாற்று நாள். வரலாறு உருவாகும்போது, ​​வருங்கால சந்ததியினர் அதை நினைவில் வைத்துக் கொள்வதும், மதிப்பிடுவதும் மட்டுமல்லாமல், அதிலிருந்து தொடர்ந்து உத்வேகமும் பெறுகிறார்கள். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 21 தீவுகளுக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெறுகிறது. அவை இப்போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களில் வழங்கப்படும். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வாழ்க்கையைப் போற்றும் வகையில், அவர் தங்கியிருந்த தீவில் புதிய நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளை வருங்கால சந்ததியினர் விடுதலையின் அமிர்தகாலத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூருவார்கள். நேதாஜி நினைவுச்சின்னம் மற்றும் புதிதாக பெயரிடப்பட்டுள்ள 21 தீவுகள் இளம் தலைமுறையினருக்கு நிலையான உத்வேகத்தை அளிக்கும்.

சகோதர சகோதரிகளே,

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் முதல் சுதந்திர அரசு உருவாக்கப்பட்டது. வீர் சாவர்க்கரும் அவரைப் போன்ற பல மாவீரர்களும் இந்த மண்ணில் நாட்டிற்காக தவம் செய்து தியாகத்தின் உச்சத்தை தொட்டவர்கள். அந்த முன்னோடிகளின் வேதனை மற்றும் வலி மிகுந்த குரல்கள், இன்றும் செல்லுலார் சிறை அறைகளில் இருந்து கேட்கப்படுகின்றன. அந்தமானின் அடையாளம் சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகளுக்குப் பதிலாக அடிமைத்தனத்தின் அடையாளங்களுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. நமது தீவுகளின் பெயர்களில் கூட அடிமைத்தனத்தின் முத்திரை இருந்தது. இன்று ராஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவாகவும், ஹேவ்லாக் மற்றும் நீல் தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் தீவுகளாகவும் மாறிவிட்டது. ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் ஆகிய பெயர்கள் நேதாஜியால் வழங்கப்பட்டவை. சுதந்திரத்திற்குப் பிறகும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்திய தேசிய ராணுவ அரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​எங்கள் அரசு இந்த பெயர்களை மீண்டும் நிலைநிறுத்தியது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றின் பக்கங்களில் மறக்கப்பட்ட அதே நேதாஜி 21-ம் நூற்றாண்டில் நினைவு கூரப்படுகிறது. அந்தமானில் முதன்முறையாக மூவர்ணக்கொடியை நேதாஜி ஏற்றிய அதே இடத்தில் இன்று, இந்திய கொடி வானுயரப் பட்டொளி வீசிப் பறக்கிறது. இது இந்த பகுதிக்கு வரும் அனைத்து மக்களின் இதயங்களிலும் தேசபக்தியை நிரப்பும். அவரது நினைவாக கட்டப்படும் புதிய அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மேலும் நினைவில் அமையக் கூடியதாக இருக்கும். 2019-ம் ஆண்டில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது முதல் அந்த இடம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது. அவரது 125-வது பிறந்த தினத்தையொட்டி வங்காளத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த தினம் பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டது. வங்காளம் முதல் தில்லி வரையிலும், தில்லி முதல் அந்தமான் வரையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளும் நேதாஜியின் மரபைப் போற்றி வணங்குகின்றன.

|

பராக்கிரம தினத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த உத்வேகம் அளிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இன்று ஒரு வரலாற்று நாள். வரலாறு உருவாகும்போது, ​​வருங்கால சந்ததியினர் அதை நினைவில் வைத்துக் கொள்வதும், மதிப்பிடுவதும் மட்டுமல்லாமல், அதிலிருந்து தொடர்ந்து உத்வேகமும் பெறுகிறார்கள். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 21 தீவுகளுக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெறுகிறது. அவை இப்போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களில் வழங்கப்படும். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வாழ்க்கையைப் போற்றும் வகையில், அவர் தங்கியிருந்த தீவில் புதிய நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளை வருங்கால சந்ததியினர் விடுதலையின் அமிர்தகாலத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூருவார்கள். நேதாஜி நினைவுச்சின்னம் மற்றும் புதிதாக பெயரிடப்பட்டுள்ள 21 தீவுகள் இளம் தலைமுறையினருக்கு நிலையான உத்வேகத்தை அளிக்கும்.

சகோதர சகோதரிகளே,

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் முதல் சுதந்திர அரசு உருவாக்கப்பட்டது. வீர் சாவர்க்கரும் அவரைப் போன்ற பல மாவீரர்களும் இந்த மண்ணில் நாட்டிற்காக தவம் செய்து தியாகத்தின் உச்சத்தை தொட்டவர்கள். அந்த முன்னோடிகளின் வேதனை மற்றும் வலி மிகுந்த குரல்கள், இன்றும் செல்லுலார் சிறை அறைகளில் இருந்து கேட்கப்படுகின்றன. அந்தமானின் அடையாளம் சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகளுக்குப் பதிலாக அடிமைத்தனத்தின் அடையாளங்களுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. நமது தீவுகளின் பெயர்களில் கூட அடிமைத்தனத்தின் முத்திரை இருந்தது. இன்று ராஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவாகவும், ஹேவ்லாக் மற்றும் நீல் தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் தீவுகளாகவும் மாறிவிட்டது. ஸ்வராஜ் மற்றும் ஷஹீத் ஆகிய பெயர்கள் நேதாஜியால் வழங்கப்பட்டவை. சுதந்திரத்திற்குப் பிறகும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்திய தேசிய ராணுவ அரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​எங்கள் அரசு இந்த பெயர்களை மீண்டும் நிலைநிறுத்தியது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றின் பக்கங்களில் மறக்கப்பட்ட அதே நேதாஜி 21-ம் நூற்றாண்டில் நினைவு கூரப்படுகிறது. அந்தமானில் முதன்முறையாக மூவர்ணக்கொடியை நேதாஜி ஏற்றிய அதே இடத்தில் இன்று, இந்திய கொடி வானுயரப் பட்டொளி வீசிப் பறக்கிறது. இது இந்த பகுதிக்கு வரும் அனைத்து மக்களின் இதயங்களிலும் தேசபக்தியை நிரப்பும். அவரது நினைவாக கட்டப்படும் புதிய அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மேலும் நினைவில் அமையக் கூடியதாக இருக்கும். 2019-ம் ஆண்டில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது முதல் அந்த இடம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது. அவரது 125-வது பிறந்த தினத்தையொட்டி வங்காளத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த தினம் பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டது. வங்காளம் முதல் தில்லி வரையிலும், தில்லி முதல் அந்தமான் வரையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளும் நேதாஜியின் மரபைப் போற்றி வணங்குகின்றன.

|

அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்பது நீர், இயற்கைச் சூழல், சுற்றுச்சூழல், வீரம், பாரம்பரியம், சுற்றுலா, ஆக்கம் மற்றும் ஊக்கம் போன்றவற்றின் தொகுப்பாகும். இத்தகைய பெருமைமிக்க ஆற்றலைக் கண்டறிந்து பெருமைகளைப் பறைச்சாற்றவேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டைக் காட்டிலும், 2022-ல் அந்தமானுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக வேலைவாய்ப்பு அதிகரித்து சுற்றுலா தொடர்பான வருவாய் அதிகரித்துள்ளது. அந்தமானுக்கும் விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் மிகுதியாக ஏற்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலர் இங்கு வந்து வரலாற்று அனுபவங்களைக் கண்டு உணர்கின்றனர்.

|

கடந்த கால ஆட்சியில் தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் தாழ்வு மனப்பான்மை மூலம் இந்தியாவின் உண்மையான சக்தியை உணரத் தவறிவிட்டனர். இமாலய மாநிலங்கள் ஆகட்டும் குறிப்பாக வடகிழக்கு, அந்தமான் நிக்கோபார் தீவுகளாகட்டும் பல ஆண்டுகளாக மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. ஏனெனில், அந்தப் பகுதிகள் தொடர்பற்ற நிலையிலும் எளிதில் செல்ல முடியாத வகையிலும் அமைந்துள்ளது என்று தவறான கண்ணோட்டத்துடன் அணுகியதால் வந்த விளைவாகும். சிங்கப்பூர், மாலத்தீவு மற்றும் சிஷல்ஸ் போன்ற தீவுகள் வளர்ச்சி அடைந்தன. மேற்கூறப்பட்ட நாடுகளின் புவியியல் பரப்பளவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைவிட குறைந்ததாகும். ஆனால், அந்த தீவுகள் ஆதாரங்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தி, நன்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது என்றார். நமது நாட்டில் உள்ள தீவுகளுக்கும் அத்தகைய திறனும் ஆற்றலும் உள்ளது. அதனைப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. மிகவேக இணையதள வசதியை அந்தமானில் ஏற்படுத்துவதற்கு நீர்மூழ்கி கண்ணாடி இழை பயன்படுத்தப்பட்டிருப்பதன் விளைவாக டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகளும், பல்வேறு கடினமான சேவைகளும் எளிமையாக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.

  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • Reena chaurasia September 09, 2024

    bjp
  • Jitender Kumar Haryana BJP State President August 18, 2024

    Need worl cladd dental and eye surgeon otherwise I am handicapped
  • JBL SRIVASTAVA May 27, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 13, 2024

    🙏🏻🙏🏻
  • ज्योती चंद्रकांत मारकडे February 12, 2024

    जय हो
  • Sankar Dey January 23, 2024

    joy sree ram🙏🙏🙏🙏🙏🙏
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India’s Economic Momentum Holds Amid Global Headwinds: CareEdge

Media Coverage

India’s Economic Momentum Holds Amid Global Headwinds: CareEdge
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives due to fire tragedy in Hyderabad, Telangana
May 18, 2025
QuoteAnnounces ex-gratia from PMNRF

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to fire tragedy in Hyderabad, Telangana. Shri Modi also wished speedy recovery for those injured in the accident.

The Prime Minister announced an ex-gratia from PMNRF of Rs. 2 lakh to the next of kin of each deceased and Rs. 50,000 for those injured.

The Prime Minister’s Office posted on X;

"Deeply anguished by the loss of lives due to a fire tragedy in Hyderabad, Telangana. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM "

@narendramodi