Congratulates the United Nations and the Food and Agriculture Organization for the launch of the International Year of Millets 2023
“Once-in-a-century pandemic followed by a conflict situation has shown that food security is still a concern for the planet”
“Need of the hour is to make millets a food choice for the future”
“Millets are good for the consumer, cultivator and climate”
“Millets are a good way to increase agricultural and dietary diversity”
“Raising awareness to create ‘Millet Mindfulness’ is an important part of this movement”

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்திருந்த செய்தி பகிரப்பட்டது. இந்தியாவின் சார்பாக இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல இணையமைச்சர் திருமிகு ஷோபா கரண்ட்லாட்ஜே, பிரதமரின் செய்தியை வாசித்தார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்முயற்சியின் காரணமாக 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒத்துழைப்போடு 2023- ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொது சபை அறிவித்தது.

மனிதர்கள் முதலில் பயிரிட்ட பயிர்களுள் சிறுதானியங்களும் அடங்கும் என்றும், அதில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்திருப்பதாகவும் தமது செய்தியில் குறிப்பிட்ட பிரதமர், எதிர்கால  உணவாக சிறுதானியங்களை மாற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். “நூற்றாண்டில் ஒரு முறை நிகழும் பெருந்தொற்றும், அதிகரித்து வரும் உலகளாவிய பிரச்சனைகளும் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை மாற்றமும் உணவு இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதுபோன்ற சூழலில் சிறுதானியங்களுடன் சம்பந்தப்பட்ட உலகளாவிய இயக்கம் முக்கிய முயற்சியாக இருக்கும்”, என்று அவர் தெரிவித்தார்.

“நுகர்வோருக்கும், பயிரிடுவோருக்கும் பருவ நிலை பிரச்சனைக்கும் சிறுதானியங்கள் மிகச்சிறந்தது. நுகர்வோருக்கு தேவையான சமமான ஊட்டச்சத்து அதில் நிறைந்துள்ளது. குறைவான தண்ணீர் தேவைப்படுவதாலும், இயற்கை வேளாண்மைக்கு உகந்ததாக விளங்குவதாலும், அவற்றை பயிரிடுபவர்களும் பயனடைகின்றனர். நமது சுற்றுச்சூழலும் பெருமளவு பயனடைகிறது. ‘சிறுதானியங்களில் முழு கவனம் செலுத்தப்படுவது' குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். நிறுவனங்களும், தனி நபர்களும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, பாதுகாப்பான, நிலையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பெருந்திரள் இயக்கத்தின் தொடக்கமாக அமையும் என்று நான் நம்புகிறேன்”, என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தமது செய்தியில் தெரிவித்தார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
‘Make in India’ is working, says DP World Chairman

Media Coverage

‘Make in India’ is working, says DP World Chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi condoles loss of lives due to stampede at New Delhi Railway Station
February 16, 2025

The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to stampede at New Delhi Railway Station. Shri Modi also wished a speedy recovery for the injured.

In a X post, the Prime Minister said;

“Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.”