ஆஸ்திரேலியப் பிரதமர் மாண்புமிகு திரு ஆண்டனி அல்பானீசுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 24, 2023 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள அட்மிரால்டி இல்லத்தில் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். 

|

அட்மிரால்டி இல்லத்தில் பிரதமருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 

|

புதுதில்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது வருடாந்திர தலைவர்களின் உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான முடிவுகளை நினைவுகூர்ந்த தலைவர்கள், பல அம்சங்கள் நிறைந்த இந்திய- ஆஸ்திரேலிய விரிவான கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் விரிவுப்படுத்தும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், முக்கிய தாதுக்கள், கல்வி, புலம்பெயர்தல் மற்றும் பரிமாற்றம் மக்களிடையேயான உறவு முதலியவற்றில் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் பேசினார்கள். 

|

இந்தியா-ஆஸ்திரேலியா புலம்பெயர்தல் மற்றும் பரிமாற்றக் கூட்டுமுயற்சி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திறமை வாய்ந்த ஆரம்பகால தொழில் முறையினருக்கான பரிமாற்ற ஏற்பாட்டுத் திட்டம் என்று அழைக்கப்படும் மேட்ஸ் என்ற புதிய திறன் மேம்பாட்டுக்கான திட்டம் மூலம் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிறரின் பரிமாற்றத்தை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும்.

இந்திய-ஆஸ்திரேலிய ஹைட்ரஜன் பணிக்குழுவின் விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். இதன்படி, ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர்கள், எரிபொருள் செல்களுடன், ஆதரவளிக்கும் உள்கட்டமைப்பு மற்றும் தரநிலைகள், ஒழுங்குமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சுத்தமான ஹைட்ரஜனின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரைவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். 

|

பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் அமைக்கப்படுவதற்கு ஆதரவளித்தமைக்காக ஆஸ்திரேலியாவிற்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார்.

விதிகளின் அடிப்படையில், சர்வதேச ஆணைக்கு இணங்க, அமைதியான, வளமான மற்றும் உள்ளடக்கிய இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்யும் தங்களது நிலைப்பாட்டை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் பற்றியும் அவர்கள் ஆலோசித்தார்கள்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் மற்றும் அதன் முன்முயற்சிகளுக்கு வலுவான ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதி அளித்தார். வரும் 2023, செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் திரு அல்பனீஸ் இந்தியா வரவுள்ளதை ஆவலுடன் எதிர் நோக்குவதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். 

  • CHANDRA KUMAR June 06, 2024

    बीजेपी और मंत्रिमंडल बीजेपी को चाहिए की वह प्रमुख रणनीतिक मंत्रालय अपने पास रखे। लोकसभा अध्यक्ष पद, गृह मंत्रालय, वित्त मंत्रालय, रक्षा मंत्रालय को बीजेपी के पास ही होना चाहिए। नीतीश कुमार को रेल मंत्रालय, कृषि मंत्रालय और कपड़ा उद्योग मंत्रालय दे देना चाहिए। चंद्रबाबू नायडू को उद्योग मंत्रालय, सड़क मंत्रालय, परिवहन मंत्रालय दे दिया जाए। सभी सहयोगियों को भी छोटा छोटा नया मंत्रालय बनाकर दे दिया जाए। मंत्रालय की संख्या बढ़ा देना चाहिए लेकिन बजट घटा देना चाहिए। सभी मंत्री को पांच करोड़ का संसद निधि मिलता है, इसे पांच करोड़ से घटाकर एक करोड़ कर दिया जाए। इससे बीजेपी को दो हजार करोड़ का बचत होगा, जिसे बीजेपी अपने हिसाब से अपने सांसदों के बीच बांट सकती है। जबकि विपक्ष के सांसदों को सिर्फ एक करोड़ ही मिलेगा। इससे विपक्ष नियंत्रण में रहेगा। बीजेपी को यह ध्यान रखना चाहिए कि सहयोगी दल को खुश भी रखना है, ज्यादा से ज्यादा नए मंत्रालय बना बनाकर दे दीजिए, लेकिन सभी मंत्रालय को एक करोड़ से दो करोड़ का ही सालाना बजट आवंटित कीजिए। इससे बीजेपी के लिए सहयोगी पार्टी और नेताओं को नियंत्रित करना आसान हो जाएगा। सहयोगी पार्टी को ऐसा लगे जैसे आपने उसकी सभी मांग मान ली है, उसकी हर मांग पूरी कर दी है। लेकिन बजट में कटौती कर दीजिए, महंगाई और घाटे का बजट की बात कहकर, उसके विरोध को शांत कर दीजिए।
  • Amit Jha June 26, 2023

    🙏🏼🇮🇳#Narendramodijigloballeadar
  • DHANRAJ KUMAR SUMAN June 10, 2023

    GOOD MORNING SIR. JAI HIND SIR.
  • Pappu Ram Nirmalkar May 28, 2023

    The Boss
  • Ravi Shankar May 27, 2023

    जय हिन्द जय भारत 🇮🇳🇮🇳
  • Kunika Dabra May 27, 2023

    Bharat Mata ki jai🙏🏻🚩
  • Kunika Dabra May 27, 2023

    jai Shree ram 🚩🙏🏻
  • Kunika Dabra May 27, 2023

    ONE EARTH ONE FUTURE ONE FAMILY 🙏🏻🌍❤️
  • CHANDRA KUMAR May 26, 2023

    बीजेपी को चाहिए की श्रीमती द्रोपदी मुर्मू को 28 मई को भूटान दौरा पर भेज दे, और इस दौरे को पूर्व निर्धारित दौरा घोषित कर दे। इससे विपक्षी दलों के इस मांग को गलत ठहराया जा सकेगा की नए संसद भवन का उद्घाटन राष्ट्रपति द्रौपदी मुर्मू से कराया जाए। एक षड्यंत्र के तहत बीजेपी को स्त्री विरोधी बनाया जा रहा है ताकि 2024 के लोकसभा चुनाव में प्रियंका गांधी को मोदीजी के सामने खड़ा किया जा सके। सावधानी से विपक्षी दलों के सामूहिक बहिष्कार को बेवकूफी करने का मामला बना देना चाहिए। बाद में जब बहिष्कार करने वाले, उसी संसद भवन में बैठेंगे तब उन्हें अफसोस होगा। नए संसद भवन का नाम, इंद्रप्रस्थ रखा जाए। इससे देश भर में हिन्दुओं के बीच अच्छा संदेश जायेगा।
  • Abhay Kumar Golu jee May 26, 2023

    modi jee boss
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
In Mann Ki Baat, PM Stresses On Obesity, Urges People To Cut Oil Consumption

Media Coverage

In Mann Ki Baat, PM Stresses On Obesity, Urges People To Cut Oil Consumption
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 24 பிப்ரவரி 2025
February 24, 2025

6 Years of PM Kisan Empowering Annadatas for Success

Citizens Appreciate PM Modi’s Effort to Ensure Viksit Bharat Driven by Technology, Innovation and Research