Quoteபாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனை அமைப்பை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Quoteஇதன் வாயிலாக புத்தாக்கம், செயல்திறன் கட்டமைப்பு, வேகமான தொழில்நுட்பம் போன்றவற்றை இந்தியாவில் ஏற்படுத்த முடியும்
Quote'கால் பிஃபோர் யு டிக்' என்ற செயலியையும், பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Quoteஇந்த செயலியின் மூலம் பிரதமரின் கதிசக்தியின் கீழ் ‘அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறை’ குறித்து விளக்கம்
Quoteஅத்தியாவசிய சேவைகளில் குறைந்த அளவிலான இடையூறு மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைத்து, வர்த்தகத்தில் ஏற்படக் கூடிய நஷ்டங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளும்

சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் & இந்தியாவில் உள்ள புத்தாக்க மையத்தை விக்யான் பவனில் 22 மார்ச், 2023 மதியம் 12.30-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனை அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 'கால் பிஃபோர் யு டிக்' என்ற செயலியையும், பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.

சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு என்பது ஐநா-வின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு முகமையாகும். இதன் தலைமையகம் ஜெனிவா-வில் உள்ளது. மேலும் இதற்கு கள அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் உண்டு. சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்போடு கடந்த மார்ச் 2022-ல் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் திறக்கப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மேரோலி-யில் மத்திய டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையக்கட்டிடத்தில் 2-வது தளத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு அமைய உள்ளது. இதன் மூலம் இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவுகள், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு சேவையாற்றுவதோடு, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் மேம்பாடு அடைவது மற்றும் அந்தந்த பகுதியில் பொருளாதார கூட்டு நடவடிக்கைகளின் மூலம் பயனடைய முடியும்.

கடந்த 2021 நவம்பர்-ல் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தர நிர்ணய அமைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள் மற்றும் தொழில்துறையினர் ஆகியோர் இணைந்து  6ஜி தொழில்நுட்ப புத்தாக்கக்குழு அமைக்கப்பட்டது. இதன் முக்கிய பணியானது இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்குவதாகும். அதன் மூலம் பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆவணத்தின் மூலம் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறு, சிறு நடுத்தரதொழில் நிறுவனங்கள் போன்றவைகளுக்கு சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் மூலம் 6ஜி சேவை சோதனை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

பிரதமரின் கதிசக்தித் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களில் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒன்றிணைந்த செயல்முறைகள் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மதிப்புமிக்க கண்ணாடி இழைக்கேபிள் போன்ற முக்கியமானவைகள் சேதமாவதை தடுக்கும் பொருட்டு, 'கால் பிஃபோர் யு டிக்' இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினால் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் விளைவாக நம் நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,000 கோடி இழப்பீடு ஏற்படுகிறது.  புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலி மூலம் குழி தோண்டுபவர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் ஆகியோருக்கு எஸ்எம்எஸ்/இமெயில் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படுவதன் விளைவாக திட்டமிட்ட நடவடிக்கைகள் ஏற்பட்டு நிலத்திற்கு கீழே உள்ள முக்கிய பொருட்கள் சேதமடையாமல் காப்பாற்றப்படும்.

'கால் பிஃபோர் யு டிக்' இந்த செயலி மூலம் ‘அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறை’ செயல்பாட்டின் விளைவாக அனைத்து துறை சார்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக செயல்பாடுகள் மேம்பாடு அடையும்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம்/சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பைச் சேர்ந்த தொலைத்தொடர்பு அமைச்சர்கள், அதன் பொதுச்செயலர் மற்றும் மூத்த அதிகாரிகள், ஐநா சபையின் தலைமைகள் மற்றும் இந்தியாவில் உள்ள சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், தூதுவர்கள், தொழில்துறையின் தலைமைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறு, சிறு நடுத்தரதொழில் நிறுவனங்கள், கல்வித்துறையின் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

 

  • N S Nandiesha reddy February 29, 2024

    Modi once again
  • Pt Deepak Rajauriya jila updhyachchh bjp fzd December 23, 2023

    जय
  • Vinay Jaiswal March 24, 2023

    जय हो नमों नामों 🙏
  • Gandhi Kumar March 23, 2023

    இந்து என்ற சொல்லால் என் இதயம் எல்லாம் நிறைந்து இருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஜாதி ஒழிந்தது அந்த இந்து என்ற சொல்லால் இந்திய பிரதமரை எந்நாளும் நான் மறக்க மாட்டேன் ஜாதி தலைவிரித்து ஆடியது ஜாதிகள் இல்லையடி பாப்பா 50 ஆண்டு காலம் சொல்லி வந்தார்கள் இதைக் கேட்டே ஆண்டுகளில் அது மறைய தொடங்கியிருக்கிறது வாழ்க நரேந்திர மோடி
  • PRATAP SINGH March 22, 2023

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 वंदे मातरम् वंदे मातरम् 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
  • अनन्त राम मिश्र March 22, 2023

    आप सभी को चैत्र नवरात्रि नवबर्ष की अनन्त हार्दिक शुभकामनाएं और हार्दिक बधाई!आप सभी के उज्जवल भविष्य की मंगल कामनाएं!
  • Kumar Pankaj March 22, 2023

    good morning sir thanks 🙏 happy birthday 🎈 COVID-19 to you.
  • Kuldeep Yadav March 22, 2023

    આદરણીય પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારા નમસ્કાર મારુ નામ કુલદીપ અરવિંદભાઈ યાદવ છે. મારી ઉંમર ૨૪ વર્ષ ની છે. એક યુવા તરીકે તમને થોડી નાની બાબત વિશે જણાવવા માંગુ છું. ઓબીસી કેટેગરી માંથી આવતા કડીયા કુંભાર જ્ઞાતિના આગેવાન અરવિંદભાઈ બી. યાદવ વિશે. અમારી જ્ઞાતિ પ્યોર બીજેપી છે. છતાં અમારી જ્ઞાતિ ના કાર્યકર્તાને પાર્ટીમાં સ્થાન નથી મળતું. એવા એક કાર્યકર્તા વિશે જણાવું. ગુજરાત રાજ્ય ના અમરેલી જિલ્લામાં આવેલ સાવરકુંડલા શહેર ના દેવળાના ગેઈટે રહેતા અરવિંદભાઈ યાદવ(એ.બી.યાદવ). જન સંઘ વખત ના કાર્યકર્તા છેલ્લાં ૪૦ વર્ષ થી સંગઠનની જવાબદારી સંભાળતા હતા. ગઈ ૩ ટર્મ થી શહેર ભાજપના મહામંત્રી તરીકે જવાબદારી કરેલી. ૪૦ વર્ષ માં ૧ પણ રૂપિયાનો ભ્રષ્ટાચાર નથી કરેલો અને જે કરતા હોય એનો વિરોધ પણ કરેલો. આવા પાયાના કાર્યકર્તાને અહીંના ભ્રષ્ટાચારી નેતાઓ એ ઘરે બેસાડી દીધા છે. કોઈ પણ પાર્ટીના કાર્યકમ હોય કે મિટિંગ એમાં જાણ પણ કરવામાં નથી આવતી. એવા ભ્રષ્ટાચારી નેતા ને શું ખબર હોય કે નરેન્દ્રભાઇ મોદી દિલ્હી સુધી આમ નમ નથી પોચિયા એની પાછળ આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તાઓ નો હાથ છે. આવા પાયાના કાર્યકર્તા જો પાર્ટી માંથી નીકળતા જાશે તો ભવિષ્યમાં કોંગ્રેસ જેવો હાલ ભાજપ નો થાશે જ. કારણ કે જો નીચે થી સાચા પાયા ના કાર્યકર્તા નીકળતા જાશે તો ભવિષ્યમાં ભાજપને મત મળવા બોવ મુશ્કેલ છે. આવા ભ્રષ્ટાચારી નેતાને લીધે પાર્ટીને ભવિષ્યમાં બોવ મોટું નુકશાન વેઠવું પડશે. એટલે પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારી નમ્ર અપીલ છે કે આવા પાયા ના અને બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ મૂકો બાકી ભવિષ્યમાં ભાજપ પાર્ટી નો નાશ થઈ જાશે. એક યુવા તરીકે તમને મારી નમ્ર અપીલ છે. આવા કાર્યકર્તાને દિલ્હી સુધી પોચડો. આવા કાર્યકર્તા કોઈ દિવસ ભ્રષ્ટાચાર નઈ કરે અને લોકો ના કામો કરશે. સાથે અતિયારે અમરેલી જિલ્લામાં બેફામ ભ્રષ્ટાચાર થઈ રહીયો છે. રોડ રસ્તા ના કામો સાવ નબળા થઈ રહિયા છે. પ્રજાના પરસેવાના પૈસા પાણીમાં જાય છે. એટલા માટે આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ લાવો. અમરેલી જિલ્લામાં નમો એપ માં સોવ થી વધારે પોઇન્ટ અરવિંદભાઈ બી. યાદવ(એ. બી.યાદવ) ના છે. ૭૩ હજાર પોઇન્ટ સાથે અમરેલી જિલ્લામાં પ્રથમ છે. એટલા એક્ટિવ હોવા છતાં પાર્ટીના નેતાઓ એ અતિયારે ઝીરો કરી દીધા છે. આવા કાર્યકર્તા ને દિલ્હી સુધી લાવો અને પાર્ટીમાં થતો ભ્રષ્ટાચારને અટકાવો. જો ખાલી ભ્રષ્ટાચાર માટે ૩૦ વર્ષ નું બિન ભ્રષ્ટાચારી રાજકારણ મૂકી દેતા હોય તો જો મોકો મળે તો દેશ માટે શું નો કરી શકે એ વિચારી ને મારી નમ્ર અપીલ છે કે રાજ્ય સભા માં આવા નેતા ને મોકો આપવા વિનંતી છે એક યુવા તરીકે. બાકી થોડા જ વર્ષો માં ભાજપ પાર્ટી નું વર્ચસ્વ ભાજપ ના જ ભ્રષ્ટ નેતા ને લીધે ઓછું થતું જાશે. - અરવિંદ બી. યાદવ (એ.બી યાદવ) પૂર્વ શહેર ભાજપ મહામંત્રી જય હિન્દ જય ભારત જય જય ગરવી ગુજરાત આપનો યુવા મિત્ર લી. કુલદીપ અરવિંદભાઈ યાદવ
  • Babaji Namdeo Palve March 22, 2023

    सर नमस्कार गुढीपाडव्याच्या हार्दिक शुभेच्छासर हार्दिक शुभ कामनाए सर
  • Manju uniyal March 22, 2023

    भारत माता की तरफ से शुभ कामना विजय भवः
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Over 28 lakh companies registered in India: Govt data

Media Coverage

Over 28 lakh companies registered in India: Govt data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Chhatrapati Shivaji Maharaj on his Jayanti
February 19, 2025

The Prime Minister, Shri Narendra Modi has paid homage to Chhatrapati Shivaji Maharaj on his Jayanti.

Shri Modi wrote on X;

“I pay homage to Chhatrapati Shivaji Maharaj on his Jayanti.

His valour and visionary leadership laid the foundation for Swarajya, inspiring generations to uphold the values of courage and justice. He inspires us in building a strong, self-reliant and prosperous India.”

“छत्रपती शिवाजी महाराज यांच्या जयंतीनिमित्त मी त्यांना अभिवादन करतो.

त्यांच्या पराक्रमाने आणि दूरदर्शी नेतृत्वाने स्वराज्याची पायाभरणी केली, ज्यामुळे अनेक पिढ्यांना धैर्य आणि न्यायाची मूल्ये जपण्याची प्रेरणा मिळाली. ते आपल्याला एक बलशाली, आत्मनिर्भर आणि समृद्ध भारत घडवण्यासाठी प्रेरणा देत आहेत.”