அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை இந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் மேம்படுத்தும்."
உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிபித்தோவில் இந்திய திபத் எல்லை காவல் படையினரால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுடன் 9 சிறிய நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்படும் கண்காட்சி ஒன்றையும் பார்வையிட்டதாக கூறியிருந்தார்.
These development works will improve quality of life for people living in remote parts of Arunachal Pradesh. https://t.co/qAAIFLPW6K
— Narendra Modi (@narendramodi) April 11, 2023