கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்படாஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லியை நவம்பர் 20 அன்று சந்தித்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் பார்படாஸ் இடையேயான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் இரு தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது.
சுகாதாரம், மருந்து, பருவநிலை மாற்ற நடவடிக்கை, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் ஆய்வு செய்தனர்.
உலகளாவிய தெற்கில் இந்தியாவின் தலைமைக்கு பிரதமர் மோட்லி பாராட்டு தெரிவித்தார். உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தம் செய்வது குறித்தும் இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
Had a very good meeting with Prime Minister Mia Amor Mottley of Barbados. Our talks covered areas such as science and technology, healthcare, education, climate change and agriculture. I am grateful to the Government and people of Barbados for conferring the Honorary Order of… pic.twitter.com/zEVyKjTw2F
— Narendra Modi (@narendramodi) November 21, 2024