QuoteWith the inauguration and foundation stone laying of many development projects from Darbhanga, the life of the people of the state is going to become easier:PM
QuoteThe construction of Darbhanga AIIMS will bring a huge change in the health sector of Bihar:PM
QuoteOur government is working with a holistic approach towards health in the country: PM
QuoteUnder One District One Product scheme Makhana producers have benefited, Makhana Research Center has been given the status of a national institution, Makhanas have also received a GI tag:PM
QuoteWe have given the status of classical language to Pali language: PM

பீகார் மாநிலம் தர்பங்காவில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் வாக்குப்பதிவு நடந்து வருவதாகவும், மாநில மக்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு வாக்களித்து வருவதாகவும் கூறினார். ஜார்க்கண்ட் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மறைந்த சாரதா சின்ஹா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், இசைத் துறையில் அவரது ஒப்பிடமுடியாத பங்களிப்புகளை, குறிப்பாக சாத் மஹாபர்வ் பாடலை அவர் பாராட்டினார்.

பீகார் மாநிலமும், ஒட்டுமொத்த நாடும் முக்கிய வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை சந்தித்து வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். கடந்த காலங்களில் திட்டங்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்ததைப் போலல்லாமல், தற்போது அவை வெற்றிகரமாக கள அளவில் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார். "நாம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை நோக்கி உறுதியாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று திரு மோடி பெருமிதம் கொண்டார். நமது தற்போதைய தலைமுறையினர் வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்தின் சாட்சியாக இருப்பதோடு, இலக்கை நோக்கி பங்களிப்பு செய்யும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் அவர் கூறினார்.

 

|

மக்களின் நலன் மற்றும் நாட்டுக்கான சேவையில் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் கூறிய பிரதமர், சாலை, ரயில் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு துறைகளை உள்ளடக்கிய தற்போதைய ரூ.12,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டார். மேலும், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க இன்று குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது பீகாரின் சுகாதாரத் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்றும் பிரதமர் கூறினார். மேற்கு வங்கத்தின் பகுதிகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் தவிர மிதிலா, கோசி, திர்ஹுத் பகுதிகள் இதன் மூலம் பயனடையும் என்றும், நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு சேவை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பல புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக மிதிலா, தர்பங்கா மற்றும் ஒட்டுமொத்த பீகார் மக்களையும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.  

நாட்டின் மக்கள் தொகையில் அதிக அளவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள்தான் நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் சிகிச்சைக்காக தங்கள் கையிலிருந்து பெருமளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். குடும்பத்தில் யாராவது ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த குடும்பமும் எவ்வாறு துயருற்றிருக்கும் என்பதை தாம் நன்கு அறிவேன் என்று திரு மோடி குறிப்பிட்டார். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை, அதிக விலை மருந்துகள் மற்றும் குறைந்த நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் காரணமாக மருத்துவ உள்கட்டமைப்பின் நிலைமை கடந்த காலங்களில் மிகவும் மோசமாக இருந்தது என்று அவர் கூறினார். மோசமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக நாட்டின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். எனவே, பழைய சிந்தனையும், அணுகுமுறையும் மாற்றப்பட்டன என்று அவர் கூறினார்.

 

|

சுகாதாரம் தொடர்பாக அரசு கடைப்பிடித்து வரும் முழுமையான அணுகுமுறையை பிரதமர் சுட்டிக் காட்டினார். அரசு கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைக் குறிப்பிட்ட காட்டிய அவர், நோய்களைத் தடுப்பதே முதல் கவனம் செலுத்தும் பகுதி என்று கூறினார். இரண்டாவதாக, சரியாக நோயறிதல், மூன்றாவதாக, இலவச அல்லது குறைந்த கட்டண சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைப்பது, நான்காவது, சிறிய நகரங்களை சிறந்த மருத்துவ வசதிகளுடன் அமைப்பது, ஐந்தாவதாக, சுகாதாரத் துறையில் தொழில்நுட்ப விரிவாக்கம் ஆகியவை குறித்து குறிப்பிட்டார்.

"யோகா, ஆயுர்வேதம், ஊட்டச்சத்து மதிப்பு, ஃபிட் இந்தியா இயக்கம் ஆகியவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதை திரு மோடி எடுத்துரைத்தார். பொதுவான நோய்களுக்கு துரித உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை முக்கிய காரணம் என்று  சுட்டிக்காட்டிய பிரதமர், அரசின் முயற்சிகளை பட்டியலிட்ட பிரதமர், தூய்மை இந்தியா, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள், குழாய் நீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் தூய்மையை ஊக்குவித்து நோய்களுக்கான வாய்ப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றார். கடந்த சில நாட்களாக தர்பங்காவில் தூய்மை பிரச்சாரங்களை மேற்கொள்ளவும், இயக்கத்தை வலுப்படுத்தவும் தலைமைச் செயலாளர், அவரது குழுவினர் மற்றும் மாநில மக்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார். பிரச்சாரத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால் பல நோய்களின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், நோயறிதல் மற்றும் ஆராய்ச்சியின் அதிக செலவால் மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "நாங்கள் நாட்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களைத் தொடங்கியுள்ளோம்" என்றும், இது நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் திரு மோடி கூறினார்.

 

|

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டம் இல்லாதிருந்தால் நோய்வாய்ப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைக் கூட தவிர்த்திருக்கும் என்று கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காரணமாக பல ஏழை மக்களின் கவலைகளை இந்தத் திட்டம் களைந்துள்ளது என்று திரு மோடி கூறினார். ஆயுஷ்மான் திட்டத்தின் காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்களால் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என்றும், நோயாளிகள் இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தேர்தலின் போது வெளியிடப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வரம்பில் 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களையும் சேர்ப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், "இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை வழங்கப்படும் என்று அவர் கூறினார். மிகக் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தக மையங்கள் குறித்தும் அவர் பேசினார்.

 

|

நாட்டில் சிறந்த சுகாதார சேவையை நோக்கி சிறிய நகரங்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்களை வழங்கும் நான்காவது நடவடிக்கையை சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் நாடு முழுவதிலும் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்ததாகவும், முந்தைய அரசுகளின் போது புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவும் திட்டம் நிறைவடையவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசுதான் நோய்கள் குறித்து அறிந்ததோடு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவியுள்ளது என்றும் இதன் மூலம் அதன் மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாகவும், இதனால் அதிக மருத்துவர்கள் உருவாகியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனை பீகார் மற்றும் நாட்டின் சேவைக்காக பல புதிய மருத்துவர்களை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். தாய்மொழியில் உயர்கல்வியை சாத்தியமாக்குவது குறித்தும் குறிப்பிட்ட பிரதமர், கற்பூரி தாக்கூர் அவர்களின் கனவுகளுக்கு இதுவே தனது மிகப்பெரிய மரியாதை என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், 1 லட்சம் புதிய மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில் மருத்துவம் படிப்பதற்கான விருப்பமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 

புற்றுநோயை எதிர்த்துப் போராட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய திரு மோடி, முசாஃபர்பூரில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மையம் பீகாரில் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்றார். இந்த ஒற்றை வசதி பல்வேறு வகையான புற்றுநோய்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், நோயாளிகள் தில்லி அல்லது மும்பைக்கு பயணிக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். பீகாரில் புதிய கண் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். வாரணாசியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சங்கரா கண் மருத்துவமனை போன்று பீகாரில் ஒரு கண் மருத்துவமனை அமைக்க காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கராச்சார்யா அவர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

 

|

"நல்லாட்சிக்கான மாதிரியை உருவாக்கியதற்காக பீகார் முதலமைச்சரை பிரதமர் பாராட்டினார். மத்தியிலும் இந்த மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வதால் விரைவான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது என்றும், சிறு விவசாயிகள் மற்றும் தொழில்களை வலுப்படுத்துவதற்கான திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். உள்கட்டமைப்பு மேம்பாடு, விமான நிலையங்கள் மற்றும் விரைவுச் சாலைகள் மூலம் பீகாரின் அடையாளம் வலுப்பெற்று வருவதாக கூறிய அவர், தர்பங்காவில் புதிய விமான நிலையத்தை உருவாக்க உடான் திட்டத்தை பாராட்டினார். ரூ.5,500 கோடி மதிப்பிலான விரைவுச் சாலைகள், ரூ.3,400 கோடி மதிப்பிலான நகர எரிவாயு விநியோக கட்டமைப்பு உள்ளிட்ட தற்போதைய இதர வளர்ச்சித் திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். "பெருந்திட்ட வளர்ச்சிகள் பீகாரை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்கிறது" என்று கூறிய பிரதமர், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இந்தப் பிராந்தியத்தில் விவசாயிகள், தாமரை விதை உற்பத்தியாளர்கள் மற்றும் மீன்வளத் துறைகளின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். மிதிலாவைச் சேர்ந்த விவசாயிகள் உட்பட பீகார் விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதித்  திட்டத்தின்  கீழ் ரூ.25,000 கோடிக்கு மேல் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். தாமரை விதை உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி திட்டத்தை பாராட்டிய அவர், தாமரை விதை ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு தேசிய நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். "தாமரை விதைகளும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன" என்று அவர் மேலும் கூறினார். வேளாண் கடன் அட்டைகள் மற்றும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் பயன்களை, மீன் வளர்ப்பவர்கள் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார். உலகிலேயே மிகப்பெரிய மீன் ஏற்றுமதியாளராக இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

கோசி மற்றும் மிதிலாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மீண்டும் கூறினார். பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தை எதிர்கொள்ள இந்த ஆண்டு பட்ஜெட்டில் விரிவான திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நேபாளத்தின் ஒத்துழைப்புடன் வெள்ளப் பாதிப்பிற்கு தீர்வு காணப்படும் என்றும், இது தொடர்பாக ரூ.11,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

|

"இந்திய பாரம்பரியத்தின் மிகப்பெரிய மையமாக பீகார் திகழ்கிறது" என்று கூறிய திரு மோடி, இந்த பாரம்பரியத்தை போற்றுவது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று கூறினார். எனவே, "வளர்ச்சியும் பாரம்பரியமும் என்ற மந்திரத்தை அரசு பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார். நாளந்தா பல்கலைக்கழகம் நீண்ட காலமாக இழந்த தனது புகழை மீண்டும் பெற தற்போது முன்னேறி வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

மொழிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், புத்தரின் போதனைகளையும், பீகாரின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும் பிரதிபலிக்கும் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் மைதிலி மொழியை உள்ளடக்கியது தற்போதைய அரசு என்பதை அவர் நினைவூட்டினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மைதிலி மொழிக்கு இரண்டாவது மொழியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் தர்பங்கா நகரம் ராமாயண நிகழ்வுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் சுற்றுலாவுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். தர்பங்கா – சீதாமர்ஹி – அயோத்தி வழித்தடத்தில் இயக்கப்படும் அமிர்த பாரத் ரயில் குடிமக்களுக்கு பெருமளவில் பயனளித்துள்ளது என்று அவர் கூறினார்.

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தர்பங்கா எஸ்டேட் மகாராஜா திரு காமேஷ்வர் சிங் அவர்களுக்கு திரு மோடி அஞ்சலி செலுத்தினார். திரு காமேஷ்வர் சிங்கின்  சமூகப் பணி தர்பங்காவின் பெருமை மற்றும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார். காசியிலும் அவரது நற்பணிகள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு அதிகபட்சமான பயன்களை வழங்குவதில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் முயற்சிகளை சுட்டிக்காட்டியதுடன், அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.

 

|

இந்நிகழ்ச்சியில் பீகார் ஆளுநர் திரு. ராஜேந்திர அர்லேகர், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், மத்திய உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னணி

தர்பங்காவில் ரூ.1260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது ஒரு சிறப்பு மருத்துவமனை / ஆயுஷ் பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, இரவு தங்குமிடம் மற்றும் குடியிருப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். இது பீகார் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு துணை நிலை சுகாதார வசதிகளை வழங்கும்.

சாலை மற்றும் ரயில்வே துறைகளில் புதிய திட்டங்கள் மூலம் இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்தை  மேம்படுத்த திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பீகாரில் சுமார் ரூ.5,070 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

தேசிய நெடுஞ்சாலை 327இ-ல் கல்கலியா - அராரியா நான்கு வழிச்சாலையை அவர் தொடங்கி வைத்தார். இது கிழக்கு - மேற்கு வழித்தடத்தில் (என்.எச்-27) அராரியாவிலிருந்து அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தின் கல்கலியாவுக்கு மாற்று பாதையை ஏற்படுத்தும். தேசிய நெடுஞ்சாலை எண் 322 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 31 ஆகியவற்றில் இரண்டு ரயில்வே மேம்பாலங்களையும் அவர் திறந்து வைத்தார். ஜெஹனாபாத் மற்றும் பீகார்ஷரீப் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 110-ஐ பிரதமர் திறந்து வைத்தார். 

ராம்நகர் முதல் ரோசேரா வரை, பீகார் - மேற்கு வங்க எல்லை முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 131-ஏ-வில் மணிஹரி பிரிவு வரை, மஹ்னார், மொஹியுதீன் நகர் வழியாக ஹாஜிபூர் முதல் பச்வாரா வரை, சர்வான் – சக்காய் பிரிவு உள்ளிட்ட எட்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 327இ-யில் ராணிகஞ்ச் புறவழிச்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.   கட்டோரியா, லக்புரா, பாங்கா மற்றும் பஞ்ச்வாரா புறவழிச்சாலைகள் என்எச்-333ஏ; மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 82 முதல் தேசிய நெடுஞ்சாலை 33 வரை நான்கு வழி இணைப்பு சாலை அடங்கும்.

 

|

1740 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் சிரலபோத்து முதல் பாகா பிஷுன்பூர் வரையிலான சோன்நகர் புறவழி ரயில் பாதைக்கு ரூ.220 கோடி மதிப்பில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ரூ.1520 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜான்ஜார்பூர் – லௌகா பஜார் ரயில் பிரிவில் பாதை மாற்றம், தர்பங்கா சந்திப்பில் ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். தர்பங்கா புறவழி ரயில் பாதை, சிறந்த பிராந்திய இணைப்புக்கு உதவும் ரயில் பாதை திட்டங்களை இரட்டிப்பாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

 

|

ஜான்ஜார்பூர் – லவ்கா பஜார் பிரிவில் ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பிரிவில் மின்சார ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், அருகிலுள்ள நகரங்களில் வேலைகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை எளிதாக அணுக உதவும்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் 18 பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களை பிரதமர் அர்ப்பணித்தார். இவை பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும். பொதுவான மருந்துகளை வாங்குதல் மற்றும் விழிப்புணர்வை இது ஊக்குவிக்கும், இதன் மூலம் சுகாதாரப் பராமரிப்புக்கான ஒட்டுமொத்த செலவினம் குறைக்கப்படும்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் ரூ.4,020 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டு வருவது மற்றும் வணிக மற்றும் தொழில்துறை துறைகளுக்கு தூய்மையான எரிசக்தி வாய்ப்புகளை வழங்குவது என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பீகாரின் ஐந்து முக்கிய மாவட்டங்களான தர்பங்கா, மதுபானி, சுபால், சீதாமர்ஹி மற்றும் ஷியோகர் ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நகர எரிவாயு விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பரவுனி சுத்திகரிப்பு ஆலையின் தார்கட்டி உற்பத்திப் பிரிவுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைத்து உள்நாட்டில் தார்கட்டியை உற்பத்தி செய்யும்.

 

 

Click here to read full text speech

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Namo Drone Didi, Kisan Drones & More: How India Is Changing The Agri-Tech Game

Media Coverage

Namo Drone Didi, Kisan Drones & More: How India Is Changing The Agri-Tech Game
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
In future leadership, SOUL's objective should be to instill both the Steel and Spirit in every sector to build Viksit Bharat: PM
February 21, 2025
QuoteThe School of Ultimate Leadership (SOUL) will shape leaders who excel nationally and globally: PM
QuoteToday, India is emerging as a global powerhouse: PM
QuoteLeaders must set trends: PM
QuoteIn future leadership, SOUL's objective should be to instill both the Steel and Spirit in every sector to build Viksit Bharat: PM
QuoteIndia needs leaders who can develop new institutions of global excellence: PM
QuoteThe bond forged by a shared purpose is stronger than blood: PM

His Excellency,

भूटान के प्रधानमंत्री, मेरे Brother दाशो शेरिंग तोबगे जी, सोल बोर्ड के चेयरमैन सुधीर मेहता, वाइस चेयरमैन हंसमुख अढ़िया, उद्योग जगत के दिग्गज, जो अपने जीवन में, अपने-अपने क्षेत्र में लीडरशिप देने में सफल रहे हैं, ऐसे अनेक महानुभावों को मैं यहां देख रहा हूं, और भविष्य जिनका इंतजार कर रहा है, ऐसे मेरे युवा साथियों को भी यहां देख रहा हूं।

साथियों,

कुछ आयोजन ऐसे होते हैं, जो हृदय के बहुत करीब होते हैं, और आज का ये कार्यक्रम भी ऐसा ही है। नेशन बिल्डिंग के लिए, बेहतर सिटिजन्स का डेवलपमेंट ज़रूरी है। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण, जन से जगत, जन से जग, ये किसी भी ऊंचाई को प्राप्त करना है, विशालता को पाना है, तो आरंभ जन से ही शुरू होता है। हर क्षेत्र में बेहतरीन लीडर्स का डेवलपमेंट बहुत जरूरी है, और समय की मांग है। और इसलिए The School of Ultimate Leadership की स्थापना, विकसित भारत की विकास यात्रा में एक बहुत महत्वपूर्ण और बहुत बड़ा कदम है। इस संस्थान के नाम में ही ‘सोल’ है, ऐसा नहीं है, ये भारत की सोशल लाइफ की soul बनने वाला है, और हम लोग जिससे भली-भांति परिचित हैं, बार-बार सुनने को मिलता है- आत्मा, अगर इस सोल को उस भाव से देखें, तो ये आत्मा की अनुभूति कराता है। मैं इस मिशन से जुड़े सभी साथियों का, इस संस्थान से जुड़े सभी महानुभावों का हृदय से बहुत-बहुत अभिनंदन करता हूं। बहुत जल्द ही गिफ्ट सिटी के पास The School of Ultimate Leadership का एक विशाल कैंपस भी बनकर तैयार होने वाला है। और अभी जब मैं आपके बीच आ रहा था, तो चेयरमैन श्री ने मुझे उसका पूरा मॉडल दिखाया, प्लान दिखाया, वाकई मुझे लगता है कि आर्किटेक्चर की दृष्टि से भी ये लीडरशिप लेगा।

|

साथियों,

आज जब The School of Ultimate Leadership- सोल, अपने सफर का पहला बड़ा कदम उठा रहा है, तब आपको ये याद रखना है कि आपकी दिशा क्या है, आपका लक्ष्य क्या है? स्वामी विवेकानंद ने कहा था- “Give me a hundred energetic young men and women and I shall transform India.” स्वामी विवेकानंद जी, भारत को गुलामी से बाहर निकालकर भारत को ट्रांसफॉर्म करना चाहते थे। और उनका विश्वास था कि अगर 100 लीडर्स उनके पास हों, तो वो भारत को आज़ाद ही नहीं बल्कि दुनिया का नंबर वन देश बना सकते हैं। इसी इच्छा-शक्ति के साथ, इसी मंत्र को लेकर हम सबको और विशेषकर आपको आगे बढ़ना है। आज हर भारतीय 21वीं सदी के विकसित भारत के लिए दिन-रात काम कर रहा है। ऐसे में 140 करोड़ के देश में भी हर सेक्टर में, हर वर्टिकल में, जीवन के हर पहलू में, हमें उत्तम से उत्तम लीडरशिप की जरूरत है। सिर्फ पॉलीटिकल लीडरशिप नहीं, जीवन के हर क्षेत्र में School of Ultimate Leadership के पास भी 21st सेंचुरी की लीडरशिप तैयार करने का बहुत बड़ा स्कोप है। मुझे विश्वास है, School of Ultimate Leadership से ऐसे लीडर निकलेंगे, जो देश ही नहीं बल्कि दुनिया की संस्थाओं में, हर क्षेत्र में अपना परचम लहराएंगे। और हो सकता है, यहां से ट्रेनिंग लेकर निकला कोई युवा, शायद पॉलिटिक्स में नया मुकाम हासिल करे।

साथियों,

कोई भी देश जब तरक्की करता है, तो नेचुरल रिसोर्सेज की अपनी भूमिका होती ही है, लेकिन उससे भी ज्यादा ह्यूमेन रिसोर्स की बहुत बड़ी भूमिका है। मुझे याद है, जब महाराष्ट्र और गुजरात के अलग होने का आंदोलन चल रहा था, तब तो हम बहुत बच्चे थे, लेकिन उस समय एक चर्चा ये भी होती थी, कि गुजरात अलग होकर के क्या करेगा? उसके पास कोई प्राकृतिक संसाधन नहीं है, कोई खदान नहीं है, ना कोयला है, कुछ नहीं है, ये करेगा क्या? पानी भी नहीं है, रेगिस्तान है और उधर पाकिस्तान है, ये करेगा क्या? और ज्यादा से ज्यादा इन गुजरात वालों के पास नमक है, और है क्या? लेकिन लीडरशिप की ताकत देखिए, आज वही गुजरात सब कुछ है। वहां के जन सामान्य में ये जो सामर्थ्य था, रोते नहीं बैठें, कि ये नहीं है, वो नहीं है, ढ़िकना नहीं, फलाना नहीं, अरे जो है सो वो। गुजरात में डायमंड की एक भी खदान नहीं है, लेकिन दुनिया में 10 में से 9 डायमंड वो है, जो किसी न किसी गुजराती का हाथ लगा हुआ होता है। मेरे कहने का तात्पर्य ये है कि सिर्फ संसाधन ही नहीं, सबसे बड़ा सामर्थ्य होता है- ह्यूमन रिसोर्स में, मानवीय सामर्थ्य में, जनशक्ति में और जिसको आपकी भाषा में लीडरशिप कहा जाता है।

21st सेंचुरी में तो ऐसे रिसोर्स की ज़रूरत है, जो इनोवेशन को लीड कर सकें, जो स्किल को चैनेलाइज कर सकें। आज हम देखते हैं कि हर क्षेत्र में स्किल का कितना बड़ा महत्व है। इसलिए जो लीडरशिप डेवलपमेंट का क्षेत्र है, उसे भी नई स्किल्स चाहिए। हमें बहुत साइंटिफिक तरीके से लीडरशिप डेवलपमेंट के इस काम को तेज गति से आगे बढ़ाना है। इस दिशा में सोल की, आपके संस्थान की बहुत बड़ी भूमिका है। मुझे ये जानकर अच्छा लगा कि आपने इसके लिए काम भी शुरु कर दिया है। विधिवत भले आज आपका ये पहला कार्यक्रम दिखता हो, मुझे बताया गया कि नेशनल एजुकेशन पॉलिसी के effective implementation के लिए, State Education Secretaries, State Project Directors और अन्य अधिकारियों के लिए वर्क-शॉप्स हुई हैं। गुजरात के चीफ मिनिस्टर ऑफिस के स्टाफ में लीडरशिप डेवलपमेंट के लिए चिंतन शिविर लगाया गया है। और मैं कह सकता हूं, ये तो अभी शुरुआत है। अभी तो सोल को दुनिया का सबसे बेहतरीन लीडरशिप डेवलपमेंट संस्थान बनते देखना है। और इसके लिए परिश्रम करके दिखाना भी है।

साथियों,

आज भारत एक ग्लोबल पावर हाउस के रूप में Emerge हो रहा है। ये Momentum, ये Speed और तेज हो, हर क्षेत्र में हो, इसके लिए हमें वर्ल्ड क्लास लीडर्स की, इंटरनेशनल लीडरशिप की जरूरत है। SOUL जैसे Leadership Institutions, इसमें Game Changer साबित हो सकते हैं। ऐसे International Institutions हमारी Choice ही नहीं, हमारी Necessity हैं। आज भारत को हर सेक्टर में Energetic Leaders की भी जरूरत है, जो Global Complexities का, Global Needs का Solution ढूंढ पाएं। जो Problems को Solve करते समय, देश के Interest को Global Stage पर सबसे आगे रखें। जिनकी अप्रोच ग्लोबल हो, लेकिन सोच का एक महत्वपूर्ण हिस्सा Local भी हो। हमें ऐसे Individuals तैयार करने होंगे, जो Indian Mind के साथ, International Mind-set को समझते हुए आगे बढ़ें। जो Strategic Decision Making, Crisis Management और Futuristic Thinking के लिए हर पल तैयार हों। अगर हमें International Markets में, Global Institutions में Compete करना है, तो हमें ऐसे Leaders चाहिए जो International Business Dynamics की समझ रखते हों। SOUL का काम यही है, आपकी स्केल बड़ी है, स्कोप बड़ा है, और आपसे उम्मीद भी उतनी ही ज्यादा हैं।

|

साथियों,

आप सभी को एक बात हमेशा- हमेशा उपयोगी होगी, आने वाले समय में Leadership सिर्फ Power तक सीमित नहीं होगी। Leadership के Roles में वही होगा, जिसमें Innovation और Impact की Capabilities हों। देश के Individuals को इस Need के हिसाब से Emerge होना पड़ेगा। SOUL इन Individuals में Critical Thinking, Risk Taking और Solution Driven Mindset develop करने वाला Institution होगा। आने वाले समय में, इस संस्थान से ऐसे लीडर्स निकलेंगे, जो Disruptive Changes के बीच काम करने को तैयार होंगे।

साथियों,

हमें ऐसे लीडर्स बनाने होंगे, जो ट्रेंड बनाने में नहीं, ट्रेंड सेट करने के लिए काम करने वाले हों। आने वाले समय में जब हम Diplomacy से Tech Innovation तक, एक नई लीडरशिप को आगे बढ़ाएंगे। तो इन सारे Sectors में भारत का Influence और impact, दोनों कई गुणा बढ़ेंगे। यानि एक तरह से भारत का पूरा विजन, पूरा फ्यूचर एक Strong Leadership Generation पर निर्भर होगा। इसलिए हमें Global Thinking और Local Upbringing के साथ आगे बढ़ना है। हमारी Governance को, हमारी Policy Making को हमने World Class बनाना होगा। ये तभी हो पाएगा, जब हमारे Policy Makers, Bureaucrats, Entrepreneurs, अपनी पॉलिसीज़ को Global Best Practices के साथ जोड़कर Frame कर पाएंगे। और इसमें सोल जैसे संस्थान की बहुत बड़ी भूमिका होगी।

साथियों,

मैंने पहले भी कहा कि अगर हमें विकसित भारत बनाना है, तो हमें हर क्षेत्र में तेज गति से आगे बढ़ना होगा। हमारे यहां शास्त्रों में कहा गया है-

यत् यत् आचरति श्रेष्ठः, तत् तत् एव इतरः जनः।।

यानि श्रेष्ठ मनुष्य जैसा आचरण करता है, सामान्य लोग उसे ही फॉलो करते हैं। इसलिए, ऐसी लीडरशिप ज़रूरी है, जो हर aspect में वैसी हो, जो भारत के नेशनल विजन को रिफ्लेक्ट करे, उसके हिसाब से conduct करे। फ्यूचर लीडरशिप में, विकसित भारत के निर्माण के लिए ज़रूरी स्टील और ज़रूरी स्पिरिट, दोनों पैदा करना है, SOUL का उद्देश्य वही होना चाहिए। उसके बाद जरूरी change और रिफॉर्म अपने आप आते रहेंगे।

|

साथियों,

ये स्टील और स्पिरिट, हमें पब्लिक पॉलिसी और सोशल सेक्टर्स में भी पैदा करनी है। हमें Deep-Tech, Space, Biotech, Renewable Energy जैसे अनेक Emerging Sectors के लिए लीडरशिप तैयार करनी है। Sports, Agriculture, Manufacturing और Social Service जैसे Conventional Sectors के लिए भी नेतृत्व बनाना है। हमें हर सेक्टर्स में excellence को aspire ही नहीं, अचीव भी करना है। इसलिए, भारत को ऐसे लीडर्स की जरूरत होगी, जो Global Excellence के नए Institutions को डेवलप करें। हमारा इतिहास तो ऐसे Institutions की Glorious Stories से भरा पड़ा है। हमें उस Spirit को revive करना है और ये मुश्किल भी नहीं है। दुनिया में ऐसे अनेक देशों के उदाहरण हैं, जिन्होंने ये करके दिखाया है। मैं समझता हूं, यहां इस हॉल में बैठे साथी और बाहर जो हमें सुन रहे हैं, देख रहे हैं, ऐसे लाखों-लाख साथी हैं, सब के सब सामर्थ्यवान हैं। ये इंस्टीट्यूट, आपके सपनों, आपके विजन की भी प्रयोगशाला होनी चाहिए। ताकि आज से 25-50 साल बाद की पीढ़ी आपको गर्व के साथ याद करें। आप आज जो ये नींव रख रहे हैं, उसका गौरवगान कर सके।

साथियों,

एक institute के रूप में आपके सामने करोड़ों भारतीयों का संकल्प और सपना, दोनों एकदम स्पष्ट होना चाहिए। आपके सामने वो सेक्टर्स और फैक्टर्स भी स्पष्ट होने चाहिए, जो हमारे लिए चैलेंज भी हैं और opportunity भी हैं। जब हम एक लक्ष्य के साथ आगे बढ़ते हैं, मिलकर प्रयास करते हैं, तो नतीजे भी अद्भुत मिलते हैं। The bond forged by a shared purpose is stronger than blood. ये माइंड्स को unite करता है, ये passion को fuel करता है और ये समय की कसौटी पर खरा उतरता है। जब Common goal बड़ा होता है, जब आपका purpose बड़ा होता है, ऐसे में leadership भी विकसित होती है, Team spirit भी विकसित होती है, लोग खुद को अपने Goals के लिए dedicate कर देते हैं। जब Common goal होता है, एक shared purpose होता है, तो हर individual की best capacity भी बाहर आती है। और इतना ही नहीं, वो बड़े संकल्प के अनुसार अपनी capabilities बढ़ाता भी है। और इस process में एक लीडर डेवलप होता है। उसमें जो क्षमता नहीं है, उसे वो acquire करने की कोशिश करता है, ताकि औऱ ऊपर पहुंच सकें।

साथियों,

जब shared purpose होता है तो team spirit की अभूतपूर्व भावना हमें गाइड करती है। जब सारे लोग एक shared purpose के co-traveller के तौर पर एक साथ चलते हैं, तो एक bonding विकसित होती है। ये team building का प्रोसेस भी leadership को जन्म देता है। हमारी आज़ादी की लड़ाई से बेहतर Shared purpose का क्या उदाहरण हो सकता है? हमारे freedom struggle से सिर्फ पॉलिटिक्स ही नहीं, दूसरे सेक्टर्स में भी लीडर्स बने। आज हमें आज़ादी के आंदोलन के उसी भाव को वापस जीना है। उसी से प्रेरणा लेते हुए, आगे बढ़ना है।

साथियों,

संस्कृत में एक बहुत ही सुंदर सुभाषित है:

अमन्त्रं अक्षरं नास्ति, नास्ति मूलं अनौषधम्। अयोग्यः पुरुषो नास्ति, योजकाः तत्र दुर्लभः।।

यानि ऐसा कोई शब्द नहीं, जिसमें मंत्र ना बन सके। ऐसी कोई जड़ी-बूटी नहीं, जिससे औषधि ना बन सके। कोई भी ऐसा व्यक्ति नहीं, जो अयोग्य हो। लेकिन सभी को जरूरत सिर्फ ऐसे योजनाकार की है, जो उनका सही जगह इस्तेमाल करे, उन्हें सही दिशा दे। SOUL का रोल भी उस योजनाकार का ही है। आपको भी शब्दों को मंत्र में बदलना है, जड़ी-बूटी को औषधि में बदलना है। यहां भी कई लीडर्स बैठे हैं। आपने लीडरशिप के ये गुर सीखे हैं, तराशे हैं। मैंने कहीं पढ़ा था- If you develop yourself, you can experience personal success. If you develop a team, your organization can experience growth. If you develop leaders, your organization can achieve explosive growth. इन तीन वाक्यों से हमें हमेशा याद रहेगा कि हमें करना क्या है, हमें contribute करना है।

|

साथियों,

आज देश में एक नई सामाजिक व्यवस्था बन रही है, जिसको वो युवा पीढी गढ़ रही है, जो 21वीं सदी में पैदा हुई है, जो बीते दशक में पैदा हुई है। ये सही मायने में विकसित भारत की पहली पीढ़ी होने जा रही है, अमृत पीढ़ी होने जा रही है। मुझे विश्वास है कि ये नया संस्थान, ऐसी इस अमृत पीढ़ी की लीडरशिप तैयार करने में एक बहुत ही महत्वपूर्ण भूमिका निभाएगा। एक बार फिर से आप सभी को मैं बहुत-बहुत शुभकामनाएं देता हूं।

भूटान के राजा का आज जन्मदिन होना, और हमारे यहां यह अवसर होना, ये अपने आप में बहुत ही सुखद संयोग है। और भूटान के प्रधानमंत्री जी का इतने महत्वपूर्ण दिवस में यहां आना और भूटान के राजा का उनको यहां भेजने में बहुत बड़ा रोल है, तो मैं उनका भी हृदय से बहुत-बहुत आभार व्यक्त करता हूं।

|

साथियों,

ये दो दिन, अगर मेरे पास समय होता तो मैं ये दो दिन यहीं रह जाता, क्योंकि मैं कुछ समय पहले विकसित भारत का एक कार्यक्रम था आप में से कई नौजवान थे उसमें, तो लगभग पूरा दिन यहां रहा था, सबसे मिला, गप्पे मार रहा था, मुझे बहुत कुछ सीखने को मिला, बहुत कुछ जानने को मिला, और आज तो मेरा सौभाग्य है, मैं देख रहा हूं कि फर्स्ट रो में सारे लीडर्स वो बैठे हैं जो अपने जीवन में सफलता की नई-नई ऊंचाइयां प्राप्त कर चुके हैं। ये आपके लिए बड़ा अवसर है, इन सबके साथ मिलना, बैठना, बातें करना। मुझे ये सौभाग्य नहीं मिलता है, क्योंकि मुझे जब ये मिलते हैं तब वो कुछ ना कुछ काम लेकर आते हैं। लेकिन आपको उनके अनुभवों से बहुत कुछ सीखने को मिलेगा, जानने को मिलेगा। ये स्वयं में, अपने-अपने क्षेत्र में, बड़े अचीवर्स हैं। और उन्होंने इतना समय आप लोगों के लिए दिया है, इसी में मन लगता है कि इस सोल नाम की इंस्टीट्यूशन का मैं एक बहुत उज्ज्वल भविष्य देख रहा हूं, जब ऐसे सफल लोग बीज बोते हैं तो वो वट वृक्ष भी सफलता की नई ऊंचाइयों को प्राप्त करने वाले लीडर्स को पैदा करके रहेगा, ये पूरे विश्वास के साथ मैं फिर एक बार इस समय देने वाले, सामर्थ्य बढ़ाने वाले, शक्ति देने वाले हर किसी का आभार व्यक्त करते हुए, मेरे नौजवानों के लिए मेरे बहुत सपने हैं, मेरी बहुत उम्मीदें हैं और मैं हर पल, मैं मेरे देश के नौजवानों के लिए कुछ ना कुछ करता रहूं, ये भाव मेरे भीतर हमेशा पड़ा रहता है, मौका ढूंढता रहता हूँ और आज फिर एक बार वो अवसर मिला है, मेरी तरफ से नौजवानों को बहुत-बहुत शुभकामनाएं।

बहुत-बहुत धन्यवाद।