புனித வெள்ளியை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் மகத்தான தியாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்துள்ளார். நம் வாழ்வில் அன்பு, இரக்கம், தாராள மனப்பான்மை ஆகியவற்றை பின்பற்றி கடைபிடிப்பதற்கான நினைவூட்டலாக இந்த நாள் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"புனித வெள்ளி நாளில், இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்வோம். இந்த நாள் அன்பு, இரக்கம், எப்போதும் பரந்த மனதுடன் இருப்பது ஆகியவற்றிற்காக நம்மை ஊக்குவிக்கிறது. அமைதியும், ஒற்றுமையின் உணர்வும் எப்போதும் மேலோங்கட்டும்".
On Good Friday, we remember the sacrifice of Jesus Christ. This day inspires us to cherish kindness, compassion and always be large hearted. May the spirit of peace and togetherness always prevail.
— Narendra Modi (@narendramodi) April 18, 2025