ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு மேற்பார்வையின் கீழ் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஈடுபடுவதை அவர் உறுதி செய்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் நடந்த விபத்து மனதை உலுக்குகிறது. அப்பாவி குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். அத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நான் வாழ்த்துகிறேன். மாநில அரசு மேற்பார்வையின் கீழ் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஈடுபட்டுள்ளது: பிரதமர்"
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத்தொகையைத் திரு மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத்தொகையைப் பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
राजस्थान के धौलपुर में हुआ हादसा हृदयविदारक है। इसमें मासूम बच्चों सहित जान गंवाने वालों के शोकाकुल परिजनों के प्रति मेरी संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहने की शक्ति प्रदान करे। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की निगरानी में…
— PMO India (@PMOIndia) October 20, 2024
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Dholpur, Rajasthan. The injured would be given Rs. 50,000. https://t.co/NDdsTGKiEN
— PMO India (@PMOIndia) October 20, 2024