ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிஷோர் ஜெனாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதள எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதலில் நம்முடைய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. வெள்ளிப்பதக்கம் இந்தியாவுக்கு கிடைக்கிறது. இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிஷோர் ஜெனாவுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியை தேசம் போற்றுகிறது.
Our accomplishments in Men's Javelin at Asian Games are remarkable. The Silver also comes to India. Congratulations to @Kishore78473748 for winning this splendid Silver in the event. The nation cherishes this victory. pic.twitter.com/3X257mE2ju
— Narendra Modi (@narendramodi) October 4, 2023