Quoteநிறைவடைந்த சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteஉள்நாட்டுச் சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புனரமைப்பு, ஆன்மீக வளர்ச்சி இயக்கத்தின் கீழ் ரூ.1400 கோடிக்கும் அதிகமான 52 சுற்றுலாத் துறைத் திட்டங்களை அர்ப்பணித்து தொடங்கி வைத்தார்
Quoteஸ்ரீநகரின் ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteசவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட சுற்றுலாத் தலங்களை அறிவித்தார்
Quote'உங்கள் நாட்டைக் காணுங்கள் மக்களின் விருப்பம் 2024' மற்றும் இந்திய வம்சாவளியினர் இந்தியாவுக்குச் செல்லுங்கள் பிரச்சாரம்' ஆகியவற்றைத் தொடங்கிவைத்தார்.
Quoteஜம்மு காஷ்மீரில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்
Quoteஇந்த பாசக் கடனை திருப்பிச் செலுத்த மோடி எந்த வாய்ப்பையும் விடமாட்டார். உங்கள் மனங்களை வெல்வதற்காக நான் இந்த கடின உழைப்பைச் செய்கிறேன், நான் சரியான பாதையில் செல்வதாக நம்புகிறேன்"
Quote"வளர்ச்சியின் சக்தி, சுற்றுலாவின் திறன், விவசாயிகளி
Quoteமேலும், பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளான பெண் சாதனையாளர்கள், லட்சாதிபதி சகோதரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
Quoteஅவரது வணிகத்தை சுமார் 2000 தேனீ வளர்ப்பு பெட்டிகளாக வளர்ச்சியடைய செய்ததுடன் அப்பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்களைப் பணியில் ஈடுபடுத்தியதாக அவர் கூறினார்.
Quoteதிரு நசீம் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி உத்வேகம் அளிக்கும் நபராக மாறி வருகிறார் என்று அவர் கூறினார்.
Quoteஏழை மகள்களை கவனித்துக் கொள்வதாக அவர்களை அவர் பாராட்டினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுமார் ரூ. 5000 கோடி மதிப்புள்ள முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரில் உள்ள 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' திட்டம் உட்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புனரமைப்பு, ஆன்மீக வளர்ச்சி இயக்கத்தின் கீழ் ரூ. 1400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சுற்றுலாத் துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.  உங்கள் நாட்டைக் காணுங்கள் மக்களின் விருப்பம்' மற்றும் இந்திய வம்சாவளியினர் பிரச்சாரம்' ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி  வைத்து, சுற்றுலாத் தலங்களை அறிவித்தார். இது சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடுத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த சுமார் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளான பெண் சாதனையாளர்கள், லட்சாதிபதி சகோதரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருடனும்  பிரதமர் கலந்துரையாடினார்.

 

|

தேனீ வளர்ப்பாளரான புல்வாமாவைச் சேர்ந்த நசீம் நசீர், தேனீ வளர்ப்புக்காக 50 சதவீத மானியத்தில் 25 பெட்டிகளை வாங்கியதன்  மூலம் அரசிடமிருந்து பலன்களைப் பெறுவதன் மூலம் தனது வணிகத்தை விரிவுபடுத்துவது குறித்து பிரதமரிடம் தனது பயணத்தை விவரித்தார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் பெற்று தேனீ வளர்ப்புக்காக 200 பெட்டிகளாக படிப்படியாக விரிவுபடுத்தினார். இது திரு நசீர் தனக்கென ஒரு பிராண்டை உருவாக்கி, நாடு முழுவதும் சுமார் 5000 கிலோகிராம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான விற்பனை வாய்ப்புகளை உருவாக்கிய ஒரு வலைத்தளத்தை உருவாக்க வழிவகுத்தது. அவரது வணிகத்தை சுமார் 2000 தேனீ வளர்ப்பு பெட்டிகளாக வளர்ச்சியடைய செய்ததுடன் அப்பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்களைப் பணியில் ஈடுபடுத்தியதாக அவர் கூறினார்.

 

|

நாட்டில் ஃபின்டெக் நிலப்பரப்பை மாற்றியமைத்த டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியதற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் இனிப்புப் புரட்சிக்கு வழிவகுத்த திரு நசீமின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், அவரது வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். வணிகத்தை நிறுவுவதற்கு அரசின் தொடக்கக் கால ஆதரவைப் பெறுவது குறித்து பிரதமர் விசாரித்தபோது, திரு நசீம், ஆரம்பத்தில் சிரமங்களை எதிர்கொண்டாலும், வேளாண் துறை முன்வந்து தனது நோக்கத்தை ஆதரித்ததாகக் கூறினார். தேனீ வளர்ப்பு தொழில் மிகவும் புதிய துறை என்று குறிப்பிட்ட பிரதமர், தேனீக்கள் விவசாயத் தொழிலாளர்களைப் போல செயல்படுவதால் பயிர்களுக்கு நன்மை பயக்கும் என்றார். தேனீ வளர்ப்புக்கு நிலத்தை இலவசமாக வழங்க நில உரிமையாளர்கள் தயாராக உள்ளனர். ஏனெனில், இந்த செயல்முறை விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் என்று திரு நஜிம் கூறினார். இந்து குஷ் மலைகளைச் சுற்றியுள்ள மத்திய ஆசியாவில் உற்பத்தி செய்யப்படும் தேன் குறித்து ஆராய்ச்சி செய்ய திரு நசீமுக்கு பிரதமர் பரிந்துரைத்தார். மேலும் தேன் ஒரு முக்கிய சந்தை என்பதால் பெட்டிகளைச் சுற்றி குறிப்பிட்ட பூக்களை வளர்ப்பதன் மூலம் தேனுக்கு புதிய சுவையை உருவாக்க முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டார். உத்தராகண்டில் இதேபோன்ற வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். உலகெங்கிலும் அதிக தேவை இருப்பதால் அகாசியா தேனின் விலை கிலோ ரூ.4௦௦ லிருந்து ரூ.1௦௦௦ ஆக அதிகரித்தது  குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். தெளிவான சிந்தனை, தொலைநோக்குப் பார்வைக்காகவும், தனது தொழிலை நடத்துவதில் திரு நசீம் காட்டிய தைரியத்திற்காகவும் பிரதமர் பாராட்டு தெரிவித்ததுடன், அவரது பெற்றோரையும் பாராட்டினார். திரு நசீம் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி உத்வேகம் அளிக்கும் நபராக மாறி வருகிறார் என்று அவர் கூறினார். 

 

|

ஸ்ரீநகரைச் சேர்ந்த அஹ்தேஷாம் மஜித் பட் ஒரு பேக்கரி தொழில்முனைவோர். அவர் உணவு தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பேக்கரியில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வந்தார். அரசு பாலிடெக்னிக்கில் உள்ள பெண்கள் திறன் மேம்பாட்டு மையம் அவருக்கு ஆதரவளித்தது. அரசு ஒற்றைச் சாளர முறை அவருக்கும், அவரது குழுவினருக்கும் பல்வேறு துறைகளிலிருந்து அனைத்து தடையில்லாச் சான்றிதழ்களையும் பெற உதவியது. கடந்த 10 ஆண்டுகளாக, கோடிக்கணக்கான இளைஞர்களின் புத்தொழில் கனவுகளை நனவாக்க அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாக பிரதமர் அவரிடம் கூறினார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நண்பர்களை தனது தொழில்முனைவு முயற்சிகளில் ஈடுபடுத்தியதற்காக பிரதமர் அவரைப் பாராட்டினார். ஜம்மு- காஷ்மீரின் இந்தப் பெண்கள் நாட்டின் இளைஞர்களுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் உதாரணங்களை உருவாக்கி வருகின்றனர்" என்று பிரதமர் கூறியுள்ளார். ஏழை மகள்களை கவனித்துக் கொள்வதாக அவர்களை அவர் பாராட்டினார்.

கந்தர்பாலைச் சேர்ந்த ஹமீதா பானு பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தாம் பயனடைந்ததாகவும், பால் பொருட்கள் பதப்படுத்தும் பிரிவை திறந்ததாகவும் பிரதமரிடம் தெரிவித்த அவர், வேறு சில பெண்களையும் வேலைக்கு அமர்த்தினார். பொருட்களின் தரச் சோதனை, கட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார். அவரது பால் பொருட்களில் பதப்படுத்திகள் இல்லாததால், எளிதில் அடையக்கூடிய தனது தயாரிப்பை சந்தைப்படுத்துவதற்கான விரிவான வழி குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். அவரது புத்திசாலித்தனம், ஊட்டச்சத்து பணியை மேற்கொள்வதற்காகப் பிரதமர் அவரைப் பாராட்டினார். தரத்தை கவனித்துக்கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தனது தொழிலைச் செய்ததற்காக அவர் பாராட்டினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பூமியில் சொர்க்கத்திற்கு வரும் உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று கூறினார். இயற்கையின் இந்த இணையற்ற வடிவம், காற்று, பள்ளத்தாக்கு, சுற்றுச்சூழல் மற்றும் காஷ்மீர் சகோதர, சகோதரிகளின் அன்பு, பாசம் என்று அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே 285 வட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காணொலிக் காட்சி மூலம் நிகழ்வுடன் இணைந்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார். பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட புதிய ஜம்மு - காஷ்மீர் திட்டம் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்த ஜம்மு - காஷ்மீருக்காக டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தியாகம் செய்துள்ளார் என்றார். புதிய ஜம்மு-காஷ்மீர் அதன் கண்களில் எதிர்காலத்திற்கான பிரகாசத்தையும், அனைத்து தடைகளையும் அகற்றுவதற்கான உறுதியையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் சிரித்த முகங்களைப் பார்க்கும்போது 140 கோடி குடிமக்கள் அமைதியை உணர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

 

|

ஜம்மு-காஷ்மீர் மக்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், "இந்த பாசக் கடனை திருப்பிச் செலுத்த மோடி எந்த வாய்ப்பையும் விடமாட்டார். உங்கள் இதயங்களை வெல்ல நான் இந்தக் கடின உழைப்பைச் செய்கிறேன், நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று நம்புகிறேன். உங்கள் இதயங்களை வெல்ல எனது முயற்சிகளைத் தொடர்வேன். இது மோடியின் உத்தரவாதம், மோடியின் உத்தரவாதம் என்பது உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்" என்றார்

ரூ.32,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைத்த தமது ஜம்மு பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இன்று விநியோகிக்கப்பட்ட நியமனக் கடிதங்களுடன் சுற்றுலா, மேம்பாடு மற்றும் வேளாண் தொடர்பான இன்றைய திட்டங்களையும் குறிப்பிட்டார். வளர்ச்சியின் சக்தி, சுற்றுலாவின் ஆற்றல், விவசாயிகளின் திறன்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களின் தலைமை ஆகியவை வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீருக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் ஒரு இடம் மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் தலைமையிடம் என்றும், தலை நிமிர்ந்து நிற்பது வளர்ச்சி மற்றும் மரியாதையின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீருக்கு வளர்ச்சியடைந்த பாரதம் முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மேலும் கூறினார்.

நாட்டில் அமல்படுத்தப்பட்ட சட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்படாத காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், ஏழைகளின் நலனுக்கான திட்டங்களை அவர்கள் பெற முடியாததாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுள்ள மாற்றத்தை குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுமைக்குமான திட்டங்கள் இன்று ஸ்ரீநகரில் தொடங்கப்பட்டிருப்பதாகவும், ஜம்மு காஷ்மீர் நாட்டில் சுற்றுலாவுக்கு முன்னோடியாக உள்ளது என்றும் கூறினார். எனவே, இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். உள்நாட்டுச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ், இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ஆறு திட்டங்கள் மற்றும் அதன் அடுத்த கட்ட தொடக்கம் குறித்தும் அவர் பேசினார். நாட்டின் பல்வேறு நகரங்களில் சுமார் 30 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3 திட்டங்கள் ஸ்ரீ நகரில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், புனித யாத்திரை புனரமைப்பு, ஆன்மீக வளர்ச்சி இயக்கத்தின் கீழ் 14 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் வசதிக்காக புனித ஹஸ்ரத்பால் தர்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளும் நிறைவடைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார். அடுத்த 2 ஆண்டுகளில் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும் வகையில் 40 இடங்களை அரசு அடையாளம் கண்டுள்ள உங்கள் நாட்டைக் காணுங்கள் மக்களின் விருப்பம் பிரச்சாரம் குறித்து பிரதமர் தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின் கீழ், பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா தலங்களை அரசு உருவாக்கும் என்று பிரதமர் விளக்கினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு வருவதை ஊக்குவிக்கும் இந்தியாவுக்குச் செல்லுங்கள் பிரச்சாரம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். இன்றைய வளர்ச்சிப் பணிகளுக்காக ஜம்மு காஷ்மீர் மக்களை வாழ்த்திய பிரதமர், இப்பகுதியில் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவும் என்று கூறினார்.

 

|

நோக்கங்கள் உன்னதமானதாக இருக்கும்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியும் இருக்கும்போது, முடிவுகள் நிச்சயம் தொடரும் என்று பிரதமர் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் ஜி-20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதை அவர் எடுத்துரைத்தார்.

சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தக்க வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர், "சுற்றுலாவுக்காக ஜம்மு-காஷ்மீருக்கு யார் வருவார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பிய காலம் ஒன்று இருந்தது. தற்போது ஜம்மு-காஷ்மீர் அனைத்து சுற்றுலா சாதனைகளையும் முறியடித்து வருகிறது என்று பிரதமர தெரிவித்தார். 2023 -ம் ஆண்டில் மட்டும், ஜம்மு-காஷ்மீர் 2 கோடிக்கும் அதிக சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது, இது முந்தைய சாதனைகளை முறியடித்தது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், அமர்நாத் யாத்திரையில் அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் பங்கேற்றுள்ளதுடன்,  வைஷ்ணோ தேவி கோயிலிலும் பக்தர்களின் வருகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதையும், பிரபலங்கள், சர்வதேச விருந்தினர்களுக்கான ஆர்வம் அதிகரித்து வருவதையும் எடுத்துரைத்த பிரதமர், இப்போது, முக்கிய பிரபலங்கள், வெளிநாட்டு விருந்தினர்கள் கூட ஜம்மு-காஷ்மீரின் பள்ளத்தாக்குகளை ஆராய்ந்து வீடியோக்கள் மற்றும் காட்சிகளை உருவாக்க வருகிறார்கள் என்று கூறினார்.

வேளாண்மை குறித்து பேசிய பிரதமர், குங்குமப்பூ, ஆப்பிள், உலர்ந்த பழங்கள், செர்ரி உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் வேளாண் பொருட்களின் வலிமையைக் கூறி, அப்பகுதியை ஒரு குறிப்பிடத்தக்க வேளாண் மையமாக குறிப்பிட்டார். ரூ.5,000 கோடி வேளாண் மேம்பாட்டுத் திட்டம் ஜம்மு-காஷ்மீரின் வேளாண் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார். இந்த முயற்சி குறிப்பாக தோட்டக்கலை மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகளில் ஆயிரக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

 

|

கூடுதலாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் சுமார் 3,000 கோடி ரூபாய் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். பழங்கள், காய்கறிகளுக்கான சேமிப்புத் திறனை அதிகரிக்கவும், அவற்றின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஜம்மு-காஷ்மீரில் சேமிப்பு வசதிகளை அதிகரிக்க குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ஏராளமான கிடங்குகளை நிர்மாணிக்க உலகின் மிகப்பெரிய கிடங்கு திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் விரைவான வளர்ச்சியைக் குறிப்பிட்ட பிரதமர், ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீரில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். 7 புதிய மருத்துவக் கல்லூரிகள், 2 புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் குறித்து அவர் பேசினார். ஜம்மு-காஷ்மீரில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், ஸ்ரீநகரிலிருந்து சங்கல்தான் வரையிலும், சங்கல்தான் முதல் பாரமுல்லா வரையிலும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த இணைப்பின் விரிவாக்கம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தைக் அளித்துள்ளதாக தெரிவித்தார். ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை பொலிவுறு நகரங்களாக மாற்றுவதற்கான புதிய திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், வரும் காலங்களில், ஜம்மு-காஷ்மீரின் வெற்றிக் கதை முழு உலகிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக மாறும் என்று கூறினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்தப் பகுதியின் தூய்மை, கைவினைப் பொருட்கள் குறித்து தாம் குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், தாமரையுடன் ஜம்மு & காஷ்மீருக்கு உள்ள தொடர்பைக் சுட்டிக் காட்டினார்.

 

|

ஒவ்வொரு துறையிலும் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், திறன் மேம்பாடு முதல் விளையாட்டு வரை புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டு வரும் நவீன விளையாட்டு வசதிகள் குறித்தும் குறிப்பிட்டார். 17 மாவட்டங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்குகள் பல தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதை உதாரணமாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஜம்மு காஷ்மீர் குளிர்கால விளையாட்டு தலைநகராக உருவெடுத்து வருகிறது என்றும், அண்மையில் நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 1000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் தற்போது சுதந்திரமாக சுவாசிக்கிறது, எனவே புதிய உயரங்களை எட்டியுள்ளது என்று கூறிய பிரதமர், 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைக் குறிப்பிட்டார். இது இளைஞர்களின் திறமைக்கு மரியாதை, சம உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளுக்கு வழிவகுத்ததாகத் தெரிவித்தார். பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகள், வால்மீகி சமூகத்தினர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவது, வால்மீகி சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றுவது, பட்டியல் பழங்குடியினர், பட்டாரி பழங்குடியினருக்கு சட்டப்பேரவையில் இட  ஒதுக்கீடு, பட்டாரி பழங்குடியினர், பஹாரி இனத்தவர், கடா பிராமணர் மற்றும் கோலி சமூகங்களை பட்டியல் பழங்குடியினரில் சேர்ப்பது குறித்து அவர் பேசினார். ஜம்மு-காஷ்மீரில் வாரிசு அரசியல் பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பெறும் உரிமையைப் பறிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். தற்போது அனைத்து வகுப்பினருக்கும் அதன் உரிமைகள் திருப்பித் தரப்படுவதாக பிரதமர் மோடி மேலும் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் வங்கியின் மாற்றம் குறித்துப் பேசிய பிரதமர், கடந்த காலத்தின் தவறான நிர்வாகத்தை நினைவு கூர்ந்து, அது வாரிசு அரசியல், ஊழலால் பாதிக்கப்பட்டது என்று கூறினார். வங்கியின் சிறந்த செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சீர்திருத்தங்களைப் பிரதமர் பட்டியலிட்டார். வங்கிக்கு 1000 கோடி ரூபாய் உதவி அளிக்கப்படும் என்றும், தவறான நியமனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற ஆயிரக்கணக்கான நியமனங்கள் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு இன்னும் விசாரணை நடத்தி வருவதாக  கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் வெளிப்படைத்தன்மை வாய்ந்த நியமனங்களை அவர் எடுத்துரைத்தார். இதன் விளைவாக, ஜே & கே வங்கியின் லாபம் ரூ.1700 கோடியை எட்டியுள்ளது மற்றும்  அதன் வணிகம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.25 கோடி ரூபாயிலிருந்து தற்போது ரூ.2.25 லட்சம் கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகையும் ரூ. 80,000 கோடியிலிருந்து ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு 11 சதவீதத்தைக் கடந்த வாராக்கடன் தற்போது 5 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கியின் பங்கு மதிப்பு 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.12-ஆக இருந்த நிலையில் தற்போது 12 மடங்கு அதிகரித்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். ஒரு நேர்மையான அரசு இருக்கும்போது, மக்களின் நலனுக்கான நோக்கம் இருக்கும்போது, மக்களை அனைத்து சிரமத்திலிருந்தும் வெளியே கொண்டு வர முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

 

|

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து வாரிசு அரசியலால் ஜம்மு & காஷ்மீர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஜம்மு-காஷ்மீருக்கான வளர்ச்சி இயக்கம் எந்த நிலையிலும் நிற்காது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தப் பிராந்தியம் மிக விரைவாக வளர்ச்சி அடையும் என்றும் மக்களுக்கு உறுதியளித்தார்.

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். ரமலான் மாதத்தில் இருந்து அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கத்தின் செய்தி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நாளை மஹாசிவராத்திரியையொட்டி, அனைவருக்கும் இந்த புனித பண்டிகை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னணி

ஜம்மு-காஷ்மீரின் வேளாண் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் ஒரு நடவடிக்கையாக, 'முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது ஜம்மு காஷ்மீரில் தோட்டக்கலை, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய வேளாண் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய களங்களில் முழு அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய புனித யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதே பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். இதற்கு ஏற்ப, பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணித்து, உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புனரமைப்பு, ஆன்மீக வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ரூ .1400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல முயற்சிகளைத் தொடங்கினார். பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மேம்பாடு, மேகாலயாவில் வடகிழக்கு சுற்றுப்புறத்தில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பீகார், ராஜஸ்தானில் ஆன்மீக சுற்றுலா, பீகாரில் கிராமப்புற மற்றும் தீர்த்தங்கர் சுற்றுலா, தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா தேவி கோயில் மேம்பாடு மற்றும் மத்தியப் பிரதேசத்தின் அன்னுபூர் மாவட்டத்தில் உள்ள அமர்கந்தக் கோயிலின் மேம்பாடு ஆகியவை அடங்கும்.

 

|

ஹஸ்ரத்பால் ஆலயத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்கவும், அவர்களின் முழுமையான ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்தவும், ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் முக்கிய கூறுகளில் சன்னதியின் எல்லைச் சுவர் கட்டுமானம் உட்பட முழு பகுதியின் தள மேம்பாடு, ஹஸ்ரத்பால் ஆலய வளாகத்தின் வெளிச்சம், ஆலயத்தைச் சுற்றியுள்ள படித்துறைகள், சூஃபி விளக்க மையம் அமைத்தல், சுற்றுலா உதவி மையம் கட்டுதல், அடையாளங்களை நிறுவுதல், பல அடுக்கு மாடி கார் நிறுத்தம், பொதுக் கழிப்பறை கட்டடம் கட்டுதல், ஆலயத்தின் நுழைவு வாயில் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தளங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள அன்னாவரம் கோயில் போன்ற முக்கியமான மதத் தலங்களும் இதில் அடங்கும். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் , மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோயில்கள் கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தில் அருள்மிகு சாமுண்டீஸ்வரி தேவி திருக்கோயில் ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் கர்ணி மாதா கோயில், இமாச்சல பிரதேசம் உனா மாவட்டத்தில் மா சிந்த்பூர்ணி கோயில் கோவாவில் பசிலிக்கா ஆஃப் போம் ஜீசஸ் சர்ச், போன்றவையும் அடங்கும்.

 இந்தத் திட்டங்களில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மெச்சுகா சாகச பூங்கா போன்ற பல்வேறு தளங்கள், அனுபவ மையங்களின் வளர்ச்சியும் அடங்கும். உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகர்  மாவட்டம் கஞ்சில் உள்ள கிராமப்புற சுற்றுலா தொகுப்பு அனுபவம், தெலங்கானா மாநிலம் அனந்தகிரி வனப்பகுதியில் சூழல் சுற்றுலா மண்டலம், மேகாலயாவின் சோஹ்ராவில் உள்ள மேகாலயா பழங்கால குகை அனுபவம் மற்றும் நீர்வீழ்ச்சி பாதைகள் அனுபவம் அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள சின்னமாரா தேயிலைத் தோட்டத்தின் மறு வடிவமைப்பு, பஞ்சாபின் கபுர்தலாவில் உள்ள கஞ்ச்லி ஈரநிலத்தில் சூழல் சுற்றுலா அனுபவம்,  லே பகுதியில்  ஜூல்லி லே பல்லுயிர் பூங்கா, போன்றவை அடங்கும்.

நிகழ்ச்சியின் போது, சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 42 சுற்றுலாத் தலங்களை பிரதமர் அறிவித்தார். மத்திய பட்ஜெட் 2023-24-ன் போது அறிவிக்கப்பட்ட இந்தப் புதுமையான திட்டம், சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் அனைத்து சுற்றுலா அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் நீடித்தத்தன்மையை ஊக்குவித்தல், சுற்றுலாத் துறையில் போட்டித்தன்மையைப் பயன்படுத்துதல். 16 கலாச்சார, பாரம்பரிய இடங்கள், 11 ஆன்மீக தலங்கள், 10 சூழல் சுற்றுலா மற்றும் அமிர்த பாரம்பரியம் மற்றும் துடிப்பான கிராமத்தில் 5 என நான்கு பிரிவுகளில் 42  இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.     

உங்கள் நாட்டைக் காணுங்கள் மக்கள் விருப்பம் 2024 என்ற வடிவத்தில், சுற்றுலாவில் நாட்டின் துடிப்பை அடையாளம் காணும் நாடு தழுவிய முன்முயற்சியை பிரதமர் தொடங்கி வைத்தார். ஆன்மீகம், கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, வனவிலங்குகள், சாகசம் மற்றும் பிற பிரிவுகளில் மிகவும் விருப்பமான சுற்றுலா இடங்களை அடையாளம் காணவும், சுற்றுலா உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் குடிமக்களுடன் ஈடுபடுவதை நாடு தழுவிய வாக்கெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. நான்கு முக்கிய பிரிவுகளைத் தவிர, 'மற்றவை' பிரிவில் ஒருவர் தங்கள் தனிப்பட்ட பிடித்தவைகளுக்கு வாக்களிக்கலாம் மற்றும் ஆராயப்படாத சுற்றுலா ஈர்ப்புகள் மற்றும் துடிப்பான எல்லை கிராமங்கள், ஆரோக்கிய சுற்றுலா, திருமண சுற்றுலா போன்ற இடங்களின் வடிவத்தில் இதுவரை காணாத சுற்றுலா ரத்தினங்களை வெளிக்கொணர உதவலாம். இந்தக் கருத்துக்கணிப்பு நிகழ்ச்சி மத்திய அரசின் குடிமக்கள் பங்கேற்கும் இணையதளமான மைகவ் தளத்தில் நடைபெறுகிறது.

இந்திய வம்சாவளியினர் வியத்தகு இந்தியாவின் தூதர்களாக மாறுவதை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவுக்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியாவுக்குச் செல்லவும் பிரச்சாரத்தை பிரதமர் தொடங்கினார். இந்தியரல்லாத குறைந்தது 5 நண்பர்களையாவது இந்தியாவுக்கு வர ஊக்குவிக்க வேண்டும் என்று வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கேட்டுக்கொண்ட பிரதமரின் அறைகூவலின் அடிப்படையில் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்படுகிறது. 3  கோடிக்கும் அதிக  வெளிநாடு வாழ்  இந்தியர்களைக் கொண்டு,   இந்திய வம்சாவளியினர் இந்திய சுற்றுலாவுக்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கியாக செயல்பட முடியும், கலாச்சார தூதர்களாக செயல்பட முடியும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • krishangopal sharma Bjp January 14, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
  • krishangopal sharma Bjp January 14, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹
  • krishangopal sharma Bjp January 14, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷
  • ASHISHKUMAR PATEL November 14, 2024

    WHY CENTRAL GOVERNMENT GIVES LINK ?
  • रीना चौरसिया October 11, 2024

    मोदी
  • Reena chaurasia August 26, 2024

    जय श्री राम
  • Jayanta Kumar Bhadra May 05, 2024

    call me once
  • Jayanta Kumar Bhadra May 05, 2024

    very nice looking
  • Jayanta Kumar Bhadra May 05, 2024

    Kalyani Simanta
  • Jayanta Kumar Bhadra May 05, 2024

    namaste sir
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India: The unsung hero of global health security in a world of rising costs

Media Coverage

India: The unsung hero of global health security in a world of rising costs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM chairs a High-Level Meeting to review Ayush Sector
February 27, 2025
QuotePM undertakes comprehensive review of the Ayush sector and emphasizes the need for strategic interventions to harness its full potential
QuotePM discusses increasing acceptance of Ayush worldwide and its potential to drive sustainable development
QuotePM reiterates government’s commitment to strengthen the Ayush sector through policy support, research, and innovation
QuotePM emphasises the need to promote holistic and integrated health and standard protocols on Yoga, Naturopathy and Pharmacy Sector

Prime Minister Shri Narendra Modi chaired a high-level meeting at 7 Lok Kalyan Marg to review the Ayush sector, underscoring its vital role in holistic wellbeing and healthcare, preserving traditional knowledge, and contributing to the nation’s wellness ecosystem.

Since the creation of the Ministry of Ayush in 2014, Prime Minister has envisioned a clear roadmap for its growth, recognizing its vast potential. In a comprehensive review of the sector’s progress, the Prime Minister emphasized the need for strategic interventions to harness its full potential. The review focused on streamlining initiatives, optimizing resources, and charting a visionary path to elevate Ayush’s global presence.

During the review, the Prime Minister emphasized the sector’s significant contributions, including its role in promoting preventive healthcare, boosting rural economies through medicinal plant cultivation, and enhancing India’s global standing as a leader in traditional medicine. He highlighted the sector’s resilience and growth, noting its increasing acceptance worldwide and its potential to drive sustainable development and employment generation.

Prime Minister reiterated that the government is committed to strengthening the Ayush sector through policy support, research, and innovation. He also emphasised the need to promote holistic and integrated health and standard protocols on Yoga, Naturopathy and Pharmacy Sector.

Prime Minister emphasized that transparency must remain the bedrock of all operations within the Government across sectors. He directed all stakeholders to uphold the highest standards of integrity, ensuring that their work is guided solely by the rule of law and for the public good.

The Ayush sector has rapidly evolved into a driving force in India's healthcare landscape, achieving significant milestones in education, research, public health, international collaboration, trade, digitalization, and global expansion. Through the efforts of the government, the sector has witnessed several key achievements, about which the Prime Minister was briefed during the meeting.

• Ayush sector demonstrated exponential economic growth, with the manufacturing market size surging from USD 2.85 billion in 2014 to USD 23 billion in 2023.

•India has established itself as a global leader in evidence-based traditional medicine, with the Ayush Research Portal now hosting over 43,000 studies.

• Research publications in the last 10 years exceed the publications of the previous 60 years.

• Ayush Visa to further boost medical tourism, attracting international patients seeking holistic healthcare solutions.

• The Ayush sector has witnessed significant breakthroughs through collaborations with premier institutions at national and international levels.

• The strengthening of infrastructure and a renewed focus on the integration of artificial intelligence under Ayush Grid.

• Digital technologies to be leveraged for promotion of Yoga.

• iGot platform to host more holistic Y-Break Yoga like content

• Establishing the WHO Global Traditional Medicine Centre in Jamnagar, Gujarat is a landmark achievement, reinforcing India's leadership in traditional medicine.

• Inclusion of traditional medicine in the World Health Organization’s International Classification of Diseases (ICD)-11.

• National Ayush Mission has been pivotal in expanding the sector’s infrastructure and accessibility.

• More than 24.52 Cr people participated in 2024, International Day of Yoga (IDY) which has now become a global phenomenon.

• 10th Year of International Day of Yoga (IDY) 2025 to be a significant milestone with more participation of people across the globe.

The meeting was attended by Union Health Minister Shri Jagat Prakash Nadda, Minister of State (IC), Ministry of Ayush and Minister of State, Ministry of Health & Family Welfare, Shri Prataprao Jadhav, Principal Secretary to PM Dr. P. K. Mishra, Principal Secretary-2 to PM Shri Shaktikanta Das, Advisor to PM Shri Amit Khare and senior officials.