Quoteஇந்துஸ்தான் டைம்ஸின் 100-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் தலையை வெளியிட்டார்
Quoteசாமானிய மக்களின் ஞானம், திறன் ஆகியவையே இந்தியாவின் தலைவிதியை வடிவமைத்து, ஒரு திசைகாட்டிய சக்தியாகும் : பிரதமர்
Quoteமக்களின் முன்னேற்றம், மக்களால், மக்களுக்கான முன்னேற்றம் என்பதே புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான நமது தாரக மந்திரம்: பிரதமர்
Quoteஇன்று, இந்தியா முன்னெப்போதும் இல்லாத அபிலாசைகளால் நிரம்பியுள்ளது. இவற்றை நமது கொள்கைகளின் மைல்கல்லாக நாங்கள் ஆக்கியிருக்கிறோம்: பிரதமர்
Quoteமுதலீட்டின் மூலம் வேலைவாய்ப்பு, வளர்ச்சியின் மூலம் கண்ணியம் என்ற தனித்துவமான கலவையை எங்கள் அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது: பிரதமர்
Quoteமக்களுக்காக பெரிய அளவில் செலவு செய்யுங்கள், மக்களுக்காக பெரிய அளவில் சேமிப்போம் என்பதே எங்கள் அரசின் அணுகுமுறையாக உள்ளது: பிரதமர்
Quoteஇந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும்: பிரதமர் மோடி

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.  100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 ஆண்டுகால பயணத்திற்காக மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். கண்காட்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட திரு மோடி, இது ஒரு அனுபவம் என்று கூறினார். இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தின் பழைய செய்தித்தாள்களை தாம் பார்த்ததாகவும் அவர் கூறினார். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற பல தலைவர்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு  கட்டுரைகள் எழுதியதை திரு மோடி சுட்டிக்காட்டினார்.  சுதந்திரப் போராட்டத்தைக் கண்ட நீண்ட பயணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபெற்றது தனித்துவமானது மற்றும் ஆச்சரியமானது என்று அவர் கூறினார். 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது குறித்த செய்தியைப் படிக்கும்போது மற்ற குடிமக்களைப் போலவே தாமும் அதே உற்சாகத்தை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். எவ்வாறாயினும், ஏழு தசாப்தங்களாக காஷ்மீரை எவ்வாறு முடிவெடுக்க முடியாத தன்மை வன்முறையில் மூழ்கடித்துள்ளது என்பதையும், அந்தத் தருணத்தில் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இப்போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். பிரபலமாக விளங்கும் மற்றொரு நாளிதழ், அதன் ஒரு பக்கத்தில் அசாம் கலவரப் பகுதி என்று அறிவிக்கப்பட்டதாகவும், மறுபுறம் அடல் ஜி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிக்கல் நாட்டினார் என்ற செய்தி வெளியிட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதில் இன்று பாஜக பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.

 

|

முதலாவது போடோலாந்து மகோத்சவம் நிகழ்ச்சியில் நேற்று தாம் பங்கேற்றதை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்த நிகழ்ச்சி குறித்து ஊடகங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிடாதது தமக்கு வியப்பளிப்பதாக குறிப்பிட்டார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களும் மக்களும் வன்முறையைக் கைவிட்டு, தில்லியில் ஒரு கலாச்சார நிகழ்வைக் கொண்டாடுவது ஒரு பெரிய சாதனை என்று அவர் கூறினார். 2020 போடோ அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கை மாறிவிட்டது என்று அவர் மேலும் கூறினார். இந்த உச்சிமாநாட்டு கண்காட்சியின் ஒரு பகுதியாக, மும்பையில் 26/11 பயங்கரவாத தாக்குதல்களின் படங்களைப் பார்த்த திரு மோடி, அண்டை நாடுகளின் பயங்கரவாதத்தால் மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலும் நகரங்களிலும் பாதுகாப்பற்றதாக உணர்ந்த காலம் இருந்தது என்றார். இருப்பினும், இப்போது காலம் மாறிவிட்டது, தங்கள் சொந்த வீடுகளில் உள்ள பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உணரவில்லை என்று அவர் கூறினார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தனது 100 ஆண்டுகளில் 25 ஆண்டுகால அடிமைத்தனத்தையும், 75 ஆண்டுகால சுதந்திரத்தையும் கண்டுள்ளது என்றும், இந்தியாவின் தலைவிதியை உருவாக்கிய இந்தியாவின் சாமானிய மனிதனின் திறன் மற்றும் விவேகம்  இந்தியாவுக்கு வழிகாட்டியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் சாதாரண குடிமகனின் இந்தத் திறனை அங்கீகரிப்பதில் நிபுணர்கள் அடிக்கடி தவறு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். வரலாற்றைத் தொட்டுக் குறிப்பிட்ட திரு. மோடி, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, நாடு சிதறுண்டு போகும் என்று கூறப்பட்டது என்றும், நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, சிலர் நெருக்கடி நிலை என்றென்றும் நீடிக்கும் என்று கருதினர், அதே நேரத்தில் சில நபர்களும் நிறுவனங்களும் அவசரநிலையை அமல்படுத்தியவர்களிடம் தஞ்சம் புகுந்தனர் என்றும் கூறினார். அந்த நேரத்திலும் கூட, இந்திய குடிமக்கள் எழுந்து நின்று நெருக்கடி நிலையை வேரோடு பிடுங்கி எறிந்தனர் என்று திரு மோடி கூறினார். சாமானிய மனிதனின் வலிமையை மேலும் விளக்கிய திரு மோடி, கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான வலுவான போரை எதிர்த்துப் போராடியதில் சாமானிய குடிமக்களின் உணர்வைப் பாராட்டினார்.

 

|

கடந்த காலத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், 1990-களில் இந்தியா 10 ஆண்டுகளில் 5 தேர்தல்களைக் கண்ட காலம் இருந்தது என்றும், இது நாட்டில் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியது என்றும் கூறினார். செய்தித்தாள்களில் எழுதும் வல்லுநர்கள் இதே பாணியில் விஷயங்கள் தொடரும் என்று கணித்திருந்தாலும், இந்திய குடிமக்கள் அவை தவறு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். இன்று உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிலையற்ற தன்மை பற்றி பேசப்படுகிறது என்று கூறிய திரு மோடி, உலகின் பல நாடுகள் புதிய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரும் என்று கூறியதாகவும், அதே நேரத்தில் இந்தியாவில் மக்கள் அதே அரசை மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் கூறினார்.

கடந்த காலக் கொள்கைகள் குறித்து பேசிய திரு மோடி, "நல்ல பொருளாதாரம் மோசமான அரசியல்" என்ற சொற்றொடர் நிபுணர்களால் ஊக்குவிக்கப்பட்டு அரசுகளால் ஆதரிக்கப்பட்டது என்றார் . மோசமான நிர்வாகம் மற்றும் திறமையின்மையை மூடிமறைக்க முந்தைய அரசுகளுக்கு இது ஒரு வழியாக மாறியது என்று அவர் கூறினார். இது நாட்டில் சமச்சீரற்ற வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மக்களின் முன்னேற்றம், மக்களுக்கான முன்னேற்றம், மக்களால் முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை உறுதி செய்ததன் மூலம் மக்களின் நம்பிக்கையை தமது அரசு மீண்டும் வென்றுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும், இந்திய மக்கள் தங்கள் நம்பிக்கையின் மூலதனத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார். சமூக ஊடக யுகத்தில்  தவறான தகவல்கள் இருந்தபோதிலும், இந்திய மக்கள் எங்கள் மீதும், எங்கள் அரசு மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

|

மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் போது, அரசின் நம்பிக்கை அதிகரிக்கிறது என்று திரு மோடி எடுத்துரைத்தார், இதன் விளைவாக நாட்டின் வளர்ச்சியில் மாறுபட்ட விளைவு ஏற்படுகிறது என்றார். ரிஸ்க் எடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, நமது முன்னோர்கள் ரிஸ்க் எடுத்தனர், இது வெளிநாடுகளில் இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்தவும், இந்தியாவை வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக மாற்றவும் உதவியது என்று கூறினார். இருப்பினும், இந்த ஆபத்தை எதிர்கொள்ளும் கலாச்சாரம் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் முந்தைய அரசுகளால் பின்பற்றப்படவில்லை  என்று அவர் மேலும் கூறினார். தமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியையும், மாற்றங்களையும் கண்டு வருவதாகவும், இந்திய மக்களிடையே ஆபத்தை எதிர்கொள்ளும் கலாச்சாரத்திற்கு புதிய சக்தியை அளித்துள்ளதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். நமது இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வாய்ப்புகளைக் கண்டறிந்து  ரிஸ்க் எடுக்கின்றனர் என்றும், இது இந்தியாவில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார். விளையாட்டை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்வது கூட ஆபத்தாக இருந்த ஒரு காலம் இருந்தது என்று பிரதமர் கூறினார். இருப்பினும், இன்று நமது சிறிய நகரங்களில் உள்ள இளைஞர்கள் கூட இந்த ஆபத்தை எதிர்கொண்டு உலகில் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்களை உதாரணமாகக் குறிப்பிட்ட திரு மோடி, இன்று சுமார் ஒரு கோடி லட்சாதிபதி சகோதரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் தொழில்முனைவோராக மாறி சொந்தமாக தொழில் நடத்தி வருவதாகக் கூறினார்.

 

|

"இந்திய சமூகம், இன்று, முன்னெப்போதும் இல்லாத விருப்பங்களால் நிரம்பியுள்ளது, இந்த விருப்பங்களை நாங்கள் எங்கள் கொள்கைகளின் அடிப்படையாக மாற்றியுள்ளோம்" என்று திரு மோடி கூறினார். முதலீட்டின் மூலம் வேலைவாய்ப்பு, வளர்ச்சியின் மூலம் கண்ணியம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வளர்ச்சி மாதிரியை அரசு ஊக்குவித்துள்ளது என்றும் அவர் கூறினார். எங்கு முதலீடு இருக்கிறதோ, அங்கு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்றும், அந்த வளர்ச்சி இந்திய மக்களின் கண்ணியத்தை உயர்த்துகிறது என்றும் பிரதமர் கூறினார். நாட்டில் கழிவறைகளைக் கட்டுவதை உதாரணம் காட்டிய பிரதமர், இது வசதியுடன் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கான வழிமுறையாக உள்ளது. முதலீட்டின் மூலம் வேலைவாய்ப்பு, கள வளர்ச்சியின் மூலம் கண்ணியம், என்ற மந்திரத்தின் வெற்றியை இது தெளிவுபடுத்தியுள்ளது என்று திரு மோடி கூறினார். கடந்த காலத்தில் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்ட எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை உதாரணமாக அவர் மேற்கோள் காட்டினார். மக்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறித்து முந்தைய அரசுகள் விவாதித்து வந்தபோது, ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு தமது அரசு முன்னுரிமை அளித்ததாக திரு மோடி குறிப்பிட்டார். 2014-ல் 14 கோடிக்கு மேல் சமையல் எரிவாயு இணைப்புகள் இருந்த நிலையில், தற்போது 30 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார். எரிவாயு சிலிண்டர்களின் தேவையை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய ஆதரவு உள்கட்டமைப்பு இருப்பதாக திரு மோடி மேலும் எடுத்துரைத்தார். இது பல்வேறு இடங்களில் கேஸ் நிரப்பும் ஆலைகளை அமைப்பது முதல் விநியோக மையங்களை உருவாக்குவது முதல் சிலிண்டர்களை விநியோகிப்பது வரை வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். முதலீட்டிலிருந்து வேலைவாய்ப்பு, வளர்ச்சி முதல் கண்ணியம் வரையிலான வளர்ச்சி மாதிரியை அடிப்படையாகக் கொண்ட மொபைல் போன், ரூபே அட்டை, யுபிஐ போன்ற பிற உதாரணங்களையும் திரு மோடி பட்டியலிட்டார்.

இந்தியா தற்போது சென்று கொண்டிருக்கும் வளர்ச்சிப் பாதையைப் புரிந்து கொள்ள அரசின் மற்றொரு அணுகுமுறையைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். "மக்களுக்காக பெரிதாக செலவு செய்யுங்கள், மக்களுக்காக பெரிதாக சேமியுங்கள்" என்பதே அணுகுமுறை என்று அவர் மேலும் கூறினார். இது குறித்து விளக்கிய திரு மோடி, 2014-ல் ரூ.16 லட்சம் கோடியாக இருந்த  மத்திய பட்ஜெட், தற்போது ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார். 2013-14-ல் ரூ.2.25 லட்சம் கோடியாக  இருந்த மூலதனச் செலவு தற்போது ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். புதிய மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், ரயில்வே, ஆராய்ச்சி வசதிகள் மற்றும் இதுபோன்ற பல பொது உள்கட்டமைப்புகளுக்கு மூலதன செலவு செலவிடப்படுவதாக அவர் மேலும் கூறினார். பொதுமக்களுக்கான செலவினங்களை அதிகரிப்பதுடன், பொதுமக்களின் பணத்தையும் அரசு சேமிக்கிறது என்பதை பிரதமர் விளக்கினார். உண்மைகளையும், புள்ளி விவரங்களையும் எடுத்துரைத்த திரு மோடி, நேரடி மானியக் கசிவு மூலம் நாட்டிற்கு ரூ.3.5 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை மூலம் ஏழைகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடியில் மருந்துகள் கிடைப்பது மக்களுக்கு ரூ .30,00 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது என்றும், ஸ்டென்ட் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளின் விலையைக் கட்டுப்படுத்துவது மக்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். உஜாலா திட்டம் மக்களுக்கான மின்சாரக் கட்டணங்களில் ரூ .20 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தால் நோய்கள் குறைந்துள்ளன, இது கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ .50 ஆயிரம் சேமிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். யுனிசெப் அறிக்கையை மேற்கோள் காட்டிய திரு மோடி, சொந்தமாக கழிப்பறை வைத்திருக்கும் குடும்பம் சுமார் ரூ .70 ஆயிரம் சேமிக்கிறது என்றும், முதல் முறையாக குழாய் நீர் கொண்ட 12 கோடி மக்களிடம் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு  ஒவ்வொரு ஆண்டும் ரூ .80 ஆயிரத்திற்கும் அதிகமாக சேமிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

 

|

10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் இதுபோன்ற பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட திரு மோடி, "இந்தியாவின் வெற்றி பெரிய கனவு காணவும் அதை நிறைவேற்றவும் எங்களுக்கு ஊக்கமளித்தது" என்று கூறினார். இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்ற சிந்தனையை இது ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தத் திசையில் செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய திரு மோடி, ஒவ்வொரு துறையிலும் சிறந்ததைச் செய்ய அரசு விரைவாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். பொருட்கள் உற்பத்தி அல்லது கட்டுமானம், கல்வி அல்லது பொழுதுபோக்கு என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் தரம் 'உலகத் தரம்' என்று குறிப்பிடப்படும் வகையில் நமது நடைமுறைகளை உருவாக்க முயற்சிகள் தேவை என்று அவர் குறிப்பிட்டார். மக்களின் மனதில் இந்த அணுகுமுறையை மீண்டும் வலியுறுத்துவதில் இந்துஸ்தான் டைம்ஸுக்கும் மிகப் பெரிய பங்கு உள்ளது என்றும், அவர்களின் 100 ஆண்டு அனுபவம் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

இந்தியா வளர்ச்சியின் வேகத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்றும், விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்து, திரு மோடி தமதுஉரையை நிறைவு செய்தார். வேகமாக மாறிவரும் இந்தியாவின் புதிய நூற்றாண்டை இந்துஸ்தான் டைம்ஸ் காணும் என்றும் அவர் கூறினார்.

 

Click here to read full text speech

  • Vivek Kumar Gupta January 06, 2025

    नमो ..🙏🙏🙏🙏🙏
  • Vivek Kumar Gupta January 06, 2025

    नमो ..............................🙏🙏🙏🙏🙏
  • கார்த்திக் December 08, 2024

    🌺ஜெய் ஸ்ரீ ராம்🌺जय श्री राम🌺જય શ્રી રામ🌹 🌺ಜೈ ಶ್ರೀ ರಾಮ್🌺ଜୟ ଶ୍ରୀ ରାମ🌺Jai Shri Ram 🌹🌹 🌺জয় শ্ৰী ৰাম🌺ജയ് ശ്രീറാം 🌺 జై శ్రీ రామ్ 🌹🌸
  • JYOTI KUMAR SINGH December 08, 2024

    ❤🔥❤
  • Preetam Gupta Raja December 07, 2024

    जय श्री राम
  • Chandrabhushan Mishra Sonbhadra December 05, 2024

    🕉️🕉️
  • Chandrabhushan Mishra Sonbhadra December 05, 2024

    🕉️
  • கார்த்திக் December 04, 2024

    🌺ஜெய் ஸ்ரீ ராம்🌺जय श्री राम🌺જય શ્રી રામ🌺 🌺ಜೈ ಶ್ರೀ ರಾಮ್🌺ଜୟ ଶ୍ରୀ ରାମ🌺Jai Shri Ram 🌺🌺 🌺জয় শ্ৰী ৰাম🌺ജയ് ശ്രീറാം 🌺 జై శ్రీ రామ్ 🌺🌹
  • DEBASHIS ROY December 04, 2024

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
  • DEBASHIS ROY December 04, 2024

    joy hind joy bharat
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s fruit exports expand into western markets with GI tags driving growth

Media Coverage

India’s fruit exports expand into western markets with GI tags driving growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 22 பிப்ரவரி 2025
February 22, 2025

Citizens Appreciate PM Modi's Efforts to Support Global South Development