Quote"இது தீர்மானங்களை புதுப்பிக்கும் நாள்"
Quote"இந்தியாவில் ஆயுதங்கள் அபகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன"
Quote"ராமரின் 'மர்யதா' (எல்லைகள்) மற்றும் எங்கள் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்.
Quote"ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்தியர்களாகிய எங்கள் பொறுமைக்கு கிடைத்த வெற்றியின் சின்னமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
Quote"ராமரின் சிந்தனைகள் அடங்கிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்"
Quoteஇந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், மிகவும் நம்பகமான ஜனநாயக நாடாகவும் உருவெடுத்து வருகிறது.
Quote"சமூகத்தில் உள்ள தீமைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் உறுதியேற்க வேண்டும்"

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள துவாரகாவில் ராம் லீலாவில் பங்கேற்றார்.

விழாவில் பேசிய பிரதமர், அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, ஆணவத்திற்கு எதிராக பணிவு, கோபத்தின் மீது பொறுமை ஆகியவற்றின் வெற்றியின் திருவிழா விஜயதசிமி என்று கூறினார். உறுதிமொழிகளை புதுப்பிக்கும் நாள் இது என்றும் அவர் கூறினார்.

 

|

சந்திரயான் தரையிறங்கி சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த முறை நாம் விஜய தசமியைக் கொண்டாடுகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நாளில் சாஸ்திர பூஜை மரபைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஆயுதங்கள் அபகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன எனறார்.  சக்தி பூஜை என்பது முழு படைப்பின் மகிழ்ச்சி, நல்வாழ்வு, வெற்றி மற்றும் மகிமைக்காக வாழ்த்துவதாகும் என்று அவர் கூறினார். இந்தியத் தத்துவத்தின் நித்திய மற்றும் நவீன அம்சங்களை அவர் வலியுறுத்தினார். "ராமரின் 'மர்யதா' (எல்லைகள்) மற்றும் நமது எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

 

|

"ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்தியர்களாகிய நம் பொறுமைக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமாகும்" என்று பிரதமர் கூறினார். அடுத்த ராம நவமி, ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்வது உலகம் முழுவதும் மகிழ்ச்சியை பரப்பும் என்று அவர் கூறினார். "பகவான் ஸ்ரீ ராமர் விரைவில் வரவிருக்கும் தருணம்", பகவான் ராமரின் வருகை விரைவில் உள்ளது என்று பிரதமர் கூறினார். ராமசரித மானஸில் விவரிக்கப்பட்டுள்ள வருகையின் அறிகுறிகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் பொருளாதாரம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது, நிலவில் இறங்குவது, புதிய நாடாளுமன்ற கட்டிடம், நாரி சக்தி வந்தன் அதினியம் போன்ற இதே போன்ற இப்போது இருக்கும் அறிகுறிகளை குறிப்பிட்டார். "இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகவும், மிகவும் நம்பகமான ஜனநாயகமாகவும் உருவெடுத்து வருகிறது", என்று அவர் கூறினார். ராமர் இதுபோன்ற நல்ல அறிகுறிகளின் கீழ் வருவதால், "ஒரு வகையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் அதிர்ஷ்டம் இப்போது உயரப் போகிறது" என்று பிரதமர் கூறினார்.

 

|
|
|

சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகள், சாதியம் மற்றும் பிராந்தியவாதம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பதிலாக சுயநலம் பற்றிய சிந்தனை ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புடன்  இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். "சமூகத்தில் உள்ள தீமைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் உறுதியேற்க வேண்டும்", என்று அவர் கூறினார்.

 

|

இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். ராமரின் சிந்தனைகள் அடங்கிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். தற்சார்பு கொண்ட வளர்ந்த இந்தியா, உலக அமைதியின் செய்தியை வழங்கும் வளர்ந்த இந்தியா, அனைவருக்கும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற சம உரிமை உள்ள இந்தியா, மக்கள் செழிப்பு மற்றும் மன நிறைவை உணரும் வளர்ந்த இந்தியா. இதுதான் ராம் ராஜியத்தின் தொலைநோக்குப் பார்வை" என்றார்.

 

|

இந்த நிலையில், தண்ணீரை சேமித்தல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், தூய்மை, உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுத்தல், தரமான பொருட்களை தயாரித்தல், வெளிநாடு பற்றி சிந்திக்கும் முன் நாட்டைப் சுற்றிப்பார்த்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், சிறுதானியங்களை ஊக்குவித்தல் மற்றும் பின்பற்றுதல்,  உடற்தகுதி, இறுதியாக "ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூக அந்தஸ்தை அவர்களின் குடும்பத்தில் உறுப்பினராக்குவதன் மூலம் உயர்த்துவோம்" போன்ற 10 தீர்மானங்களை அனைவரும் எடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். "நாட்டில் அடிப்படை வசதிகள் இல்லாத, வீடு, மின்சாரம், எரிவாயு, தண்ணீர், சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத ஒரு ஏழை கூட நாட்டில் இருக்கும் வரை, நாங்கள் ஓயமாட்டோம் பணியும் தொடரும்" என்று பிரதமர் மோடி கூறி முடித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • Sukhdev Rai 2047 Sunny Enclave Kharar Punjab October 12, 2024

    🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟
  • P.Ramesh Kanthan Ex.Mc October 26, 2023

    excellent sir... salute you 💚🧡🪷🙏
  • Babaji Namdeo Palve October 26, 2023

    Jai Hind Jai Bharat Bharat Mata Kee Jai सर नमस्कार भारत देश हा एक कृषिप्रधान देश आहे आणि हे देशा तील शेतकऱ्यांन साठी जरूरी आहे सर जय हिंद जय भारत
  • Babaji Namdeo Palve October 26, 2023

    Good morning Sir Jai Hind Jai Bharat Bharat Mata Kee Jai
  • Mahendra singh Solanki Loksabha Sansad Dewas Shajapur mp October 26, 2023

    किसानों के लिए किफायती उर्वरक सुनिश्चित कर रही मोदी सरकार! रबी सीजन 2023-24 (1 अक्टूबर, 2023 से 31 मार्च, 2024 तक) के लिए P&K उर्वरकों हेतु NBS दरों को केंद्रीय कैबिनेट की स्वीकृति। #CabinetDecisions
  • 6264394274 October 26, 2023

    SamelNetam
  • Premlata Singh October 26, 2023

    विजय दशमी का पर्व देश वासियो को बहुत बहुत मुबारक
  • Premlata Singh October 26, 2023

    राम नाम पर पूजा नरेंद्र मोदी 2024मे फिर से प्रधानमंत्री बने इसके लिए महीला मोर्चा ने किया हवन ,और कन्या पूजन किया गया ।
  • Atul Kumar Mishra October 26, 2023

    नमो नमो 💐💐🙏🙏
  • Ranjitbhai taylor October 26, 2023

    हमारे प्रधानमंत्री श्री ने विजयादशमी पर देशवाशियो को देश आत्मनिर्भर बनें ईस लिए १० संकल्प दिये है यह सरकार का ही दायित्व है यह मानना नहीं है लेकिन हमें सब मिलकर सिद्ध करेंगे तो देश झड़प से विकसित देश बनेगा । अभिनंदन सर
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Rs 1,555 crore central aid for 5 states hit by calamities in 2024 gets government nod

Media Coverage

Rs 1,555 crore central aid for 5 states hit by calamities in 2024 gets government nod
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 19 பிப்ரவரி 2025
February 19, 2025

Appreciation for PM Modi's Efforts in Strengthening Economic Ties with Qatar and Beyond