Quote"அறிவு, கடமை மற்றும் சத்தியத்தின் பொக்கிஷமாக காசி அறியப்படுகிறது, இது உண்மையில் இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரம்"
Quote"இந்தியாவில் உள்ள நாங்கள் எங்கள் நித்திய மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நமது புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் நாங்கள் மிகுந்த மதிப்பு கொடுக்கிறோம்.
Quote'யுகே யுகீன் பாரத்' தேசிய அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டால், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக நிற்கும்.
Quote"உறுதியான பாரம்பரியம் என்பது பொருள் மதிப்பு மட்டுமல்ல, அது ஒரு தேசத்தின் வரலாறும் அடையாளமும் கூட"
Quote"பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகப்படுத்தலுக்கு பாரம்பரியம் ஒரு முக்கிய சொத்தாகும், மேலும் இது இந்தியாவின் மந்திரமான 'விகாஸ் பி விராசத் பீ'யில் எதிரொலிக்கிறது.
Quote"இந்தியாவின் தேசிய டிஜிட்டல் மாவட்ட களஞ்சியம் சுதந்திரப் போராட்டக் கதைகளை மீண்டும் கண்டுபிடிக்க உதவுகிறது"
Quote"கலாச்சாரம், படைப்பாற்றல், வணிகம் மற்றும்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கு முக்கியப் பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், இந்த நகரம் தனது நாடாளுமன்றத் தொகுதி என்பதால் ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் இங்கு நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். காசியை வாழும் பழமையான நகரங்களில் ஒன்றாகக் குறிப்பிட்ட பிரதமர், புத்தர் தனது முதல் சொற்பொழிவை நிகழ்த்திய அருகிலுள்ள சாரநாத் நகரத்தைக் குறிப்பிட்டார். "அறிவு, கடமை மற்றும் சத்தியத்தின் பொக்கிஷமாக காசி அறியப்படுகிறது, இது உண்மையில் இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரம்" என்று குறிப்பிட்டப் பிரதமர், கங்கா ஆரத்தி நிகழ்ச்சியைக் காணவும், சாரநாத்திற்கு விஜயம் செய்யவும், காசியின் சுவையான உணவுகளை முயற்சிக்கவும் விருந்தினர்களுக்கு அறிவுறுத்தினார்.

பல்வேறு பின்னணிகள் மற்றும் முன்னோக்குகளை ஒன்றிணைப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் கலாச்சாரத்தின் உள்ளார்ந்த திறனை எடுத்துரைத்த பிரதமர்,ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் குழுவின் பணிகள்முழு மனிதகுலத்திற்கும் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்றார். "இந்தியாவில் உள்ள நாங்கள் எங்கள் நித்திய மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நமது புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் நாங்கள் மிகுந்த மதிப்பு கொடுக்கிறோம்", என்று திரு. மோடி கூறினார், இந்தியா அதன் பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்கவும் புதுப்பிக்கவும் கடுமையாக உழைத்து வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். தேசிய அளவிலும், கிராம அளவிலும் நாட்டின் கலாச்சார சொத்துக்கள் மற்றும் கலைஞர்களை வரைபடமாக்குவது குறித்து அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச்சாரத்தைக் கொண்டாட பல மையங்களை உருவாக்குவதையும் அவர் குறிப்பிட்டார், மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பழங்குடி அருங்காட்சியகங்களை எடுத்துக்காட்டாகக் கூறினார், அவை இந்தியாவின் பழங்குடிச் சமூகங்களின் துடிப்பானக் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. புதுதில்லியில் உள்ள பிரதமரின் அருங்காட்சியகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி என்று கூறினார். 'யுகே யுகீன் பாரத்' தேசிய அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதாகவும், இது கட்டி முடிக்கப்பட்டால், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்பாட்டுச் சொத்துக்களை மீட்பது குறித்த முக்கியமான பிரச்சனைக் குறித்துப் பேசிய பிரதமர், பணிக்குழுவின் முயற்சிகளை வரவேற்ற பிரதமர், உறுதியான பாரம்பரியம் என்பது பொருள் மதிப்புடையது மட்டுமல்ல, அது ஒரு தேசத்தின் வரலாறு மற்றும் அடையாளமும் கூட என்றார். ஒவ்வொருவருக்கும் தங்கள் கலாச்சாரப் பாரம்பரியத்தை அணுகவும் அனுபவிக்கவும் உரிமை உள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். 2014 முதல், இந்தியா தனது பண்டைய நாகரிகத்தின் பெருமையை வெளிப்படுத்தும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான கலைப்பொருட்களை மீண்டும் கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மேலும், வாழும் பாரம்பரியத்தை நோக்கிய முயற்சிகளையும், 'லிஃபேவுக்கான கலாச்சாரம்' க்கான பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக, கலாச்சாரப் பாரம்பரியம் என்பது கல்லில் போடப்படுவது மட்டுமல்ல, பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் திருவிழாக்கள் ஆகியவை தலைமுறைகளுக்கு வழங்கப்படுகின்றன என்று பிரதமர் கூறினார். பணிக்குழுவின் முயற்சிகள் நிலையான நடைமுறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வகைப்படுத்தலுக்கு பாரம்பரியம் ஒரு முக்கிய சொத்து என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் இது இந்தியாவின் மந்திரமான 'விகாஸ் பி விராசத் பீ' இல் எதிரொலிக்கிறது, அதாவது வளர்ச்சி மற்றும் பாரம்பரியம். "சுமார் 3,000 தனித்துவமான கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களைக் கொண்ட 2,000 ஆண்டுகள் பழமையான கைவினை பாரம்பரியத்தில் இந்தியா பெருமிதம் கொள்கிறது" என்று கூறிய பிரதமர், அதே நேரத்தில் தற்சார்பை வளர்க்கும் அதே நேரத்தில் இந்திய கைவினைப் பொருட்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் 'ஒரு மாவட்டம், ஒரே தயாரிப்பு' முன்முயற்சியை எடுத்துரைத்தார். கலாச்சார மற்றும் ஆக்கபூர்வமான தொழில்களை ஊக்குவிப்பதற்கான ஜி 20 நாடுகளின் முயற்சிகள் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன, ஏனெனில் அவை அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை எளிதாக்கும் மற்றும் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதரிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். வரும் மாதத்தில், 1.8 பில்லியன் டாலர் ஆரம்ப ஒதுக்கீட்டில் பிரதமர் விஸ்வகர்மா யோஜனாவை இந்தியா செயல்படுத்தப் போகிறது என்று பிரதமர் தெரிவித்தார். இது பாரம்பரிய கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை உருவாக்கும் என்றும், அவர்கள் தங்கள் கைவினைகளில் செழிக்கவும், இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாக்க பங்களிக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.

கலாச்சாரத்தைக் கொண்டாடுவதில் தொழில்நுட்பம் ஒரு முக்கியக் கூட்டாளி என்று குறிப்பிட்டப் பிரதமர், சுதந்திரப் போராட்டக் கதைகளை மீண்டும் கண்டுபிடிக்க உதவும் இந்தியாவின் தேசிய டிஜிட்டல் மாவட்ட களஞ்சியத்தையும் குறிப்பிட்டார். கலாச்சார அடையாளங்களை சிறப்பாகப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்ததாக மாற்றுவதையும் அவர் வலியுறுத்தினார்.

உரையை நிறைவு செய்த பிரதமர், 'வசுதைவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற உணர்வை உள்ளடக்கிய கலாச்சாரம், 'அனைவரையும் ஒன்றிணைக்கும் கலாச்சாரம்' என்ற பிரச்சாரத்தை ஜி 20 கலாச்சார அமைச்சர்களின் பணிக்குழு தொடங்கியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். உறுதியான முடிவுகளுடன் ஜி 20 செயல் திட்டத்தை வடிவமைப்பதில் அவர்களின் முக்கியப் பங்கையும் அவர் பாராட்டினார். "கலாச்சாரம், படைப்பாற்றல், வணிகம் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய நான்கு சிக்களின் முக்கியத்துவத்தை உங்கள் பணி பிரதிபலிக்கிறது. இரக்கமுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க கலாச்சாரத்தின் சக்தியைப் பயன்படுத்த இது எங்களுக்கு உதவும்" என்று பிரதமர் முடித்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • Guru Mathapati September 08, 2023

    Bharat mata ki Jai
  • Mintu Kumar September 01, 2023

    नमस्कार सर, मैं कुलदीप पिता का नाम स्वर्गीय श्री शेरसिंह हरियाणा जिला महेंद्रगढ़ का रहने वाला हूं। मैं जून 2023 में मुम्बई बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर लिनेन (LILEN) में काम करने के लिए गया था। मेरी ज्वाइनिंग 19 को बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर हुई थी, मेरा काम ट्रेन में चदर और कंबल देने का था। वहां पर हमारे ग्रुप 10 लोग थे। वहां पर हमारे लिए रहने की भी कोई व्यवस्था नहीं थी, हम बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर ही प्लेटफार्म पर ही सोते थे। वहां पर मैं 8 हजार रूपए लेकर गया था। परंतु दोनों समय का खुद के पैसों से खाना पड़ता था इसलिए सभी पैसै खत्म हो गऍ और फिर मैं 19 जुलाई को बांद्रा टर्मिनस से घर पर आ गया। लेकिन मेरी सैलरी उन्होंने अभी तक नहीं दी है। जब मैं मेरी सैलरी के लिए उनको फोन करता हूं तो बोलते हैं 2 दिन बाद आयेगी 5 दिन बाद आयेगी। ऐसा बोलते हुए उनको दो महीने हो गए हैं। लेकिन मेरी सैलरी अभी तक नहीं दी गई है। मैंने वहां पर 19 जून से 19 जुलाई तक काम किया है। मेरे साथ में जो लोग थे मेरे ग्रुप के उन सभी की सैलरी आ गई है। जो मेरे से पहले छोड़ कर चले गए थे उनकी भी सैलरी आ गई है लेकिन मेरी सैलरी अभी तक नहीं आई है। सर घर में कमाने वाला सिर्फ मैं ही हूं मेरे मम्मी बीमार रहती है जैसे तैसे घर का खर्च चला रहा हूं। सर मैंने मेरे UAN नम्बर से EPFO की साइट पर अपनी डिटेल्स भी चैक की थी। वहां पर मेरी ज्वाइनिंग 1 जून से दिखा रखी है। सर आपसे निवेदन है कि मुझे मेरी सैलरी दिलवा दीजिए। सर मैं बहुत गरीब हूं। मेरे पास घर का खर्च चलाने के लिए भी पैसे नहीं हैं। वहां के accountant का नम्बर (8291027127) भी है मेरे पास लेकिन वह मेरी सैलरी नहीं भेज रहे हैं। वहां पर LILEN में कंपनी का नाम THARU AND SONS है। मैंने अपने सारे कागज - आधार कार्ड, पैन कार्ड, बैंक की कॉपी भी दी हुई है। सर 2 महीने हो गए हैं मेरी सैलरी अभी तक नहीं आई है। सर आपसे हाथ जोड़कर विनती है कि मुझे मेरी सैलरी दिलवा दीजिए आपकी बहुत मेहरबानी होगी नाम - कुलदीप पिता - स्वर्गीय श्री शेरसिंह तहसील - कनीना जिला - महेंद्रगढ़ राज्य - हरियाणा पिनकोड - 123027
  • RatishTiwari Advocate August 28, 2023

    भारत माता की जय जय जय
  • अनिल गौड August 28, 2023

    श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में भारतीय संस्कृति पर गर्व महसूस होता है जो आपके ओजस्वीवाणी मार्गदर्शन सें करोड़ों लोगों को ऊर्जावान बनाया है |
  • Reena Chaurasia August 28, 2023

    जय हो मोदी जी की
  • Mayank Maheshwari August 27, 2023

    jai hind
  • Narayan Singh August 27, 2023

    जब धर्म के नाम पर बंटवारा हो गया था। तो अब हिन्दू राष्ट्र घोषित किया जाय।जो दुसरे इस देश में नहीं रहना चाहते तो।चले जायें।
  • Narayan Singh August 27, 2023

    हिन्दू राष्ट्र घोषित किया जाय।
  • Ambikesh Pandey August 26, 2023

    👌
  • Sukhdev Rai Sharma Kharar Punjab August 26, 2023

    यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥ परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् । धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Global aerospace firms turn to India amid Western supply chain crisis

Media Coverage

Global aerospace firms turn to India amid Western supply chain crisis
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Former UK PM, Mr. Rishi Sunak and his family meets Prime Minister, Shri Narendra Modi
February 18, 2025

Former UK PM, Mr. Rishi Sunak and his family meets Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

Both dignitaries had a wonderful conversation on many subjects.

Shri Modi said that Mr. Sunak is a great friend of India and is passionate about even stronger India-UK ties.

The Prime Minister posted on X;

“It was a delight to meet former UK PM, Mr. Rishi Sunak and his family! We had a wonderful conversation on many subjects.

Mr. Sunak is a great friend of India and is passionate about even stronger India-UK ties.

@RishiSunak @SmtSudhaMurty”