வணக்கம் நண்பர்களே,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது ஆகும். பொது முக்கியத்துவம் மற்றும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அவசியமான பெரும்பாலான நலத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறோம் என நம்புகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதே உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என நான் நம்புகிறேன். பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடத்த அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த விவாதங்கள் வெளிப்படையானதாகவும், அனல் பறப்பதாக இருந்தாலும், அவை நடைபெறவேண்டும். விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்; அதே வேளையில் முக்கியமான அம்சங்கள் மீது விவாதம் நடத்தி அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், அவையின் வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என அவையை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். விவாதங்கள் அர்த்தமுள்ளவையாகவும் பயனுள்ளவையாகவும் அமைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலை சந்திக்கவுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இந்தக் கூட்டத்தொடரை, அவரவர் கட்சிகளின் நலனுக்காக அல்லாமல், மக்களின் நலனை மனதிற்கொண்டு பயன்படுத்திக் கொள்வார்கள் என நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.11416300_1544508277_684-1-pm-modi.jpg)
The Winter Session of Parliament is important.
— PMO India (@PMOIndia) December 11, 2018
Key legislative bills are pending, which are in the interest of the people of the India.
I hope the proceedings will be smooth, and there will be frank as well as extensive debates among members: PM @narendramodi
I hope the productivity of the Winter Session is high. Let us strive to work hard and complete the legislative agenda pending. May national interest always prevail over party considerations: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 11, 2018