QuoteCompetition brings qualitative change, says PM Modi
QuoteE-governance, M-governance, Social Media - these are good means to reach out to the people and for their benefits: PM
QuoteCivil servants must ensure that every decision is taken keeping national interest in mind: PM
QuoteEvery policy must be outcome centric: PM Modi

பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குடிமைப்பணி சேவை அலுவலர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார்.

|

இந்த தினத்தை மறு அர்ப்பணிப்பு தினம் என்று குறிப்பிட்ட பிரதமர் குடிமைப்பணி சேவை அலுவலர்கள் தங்களது பலம், திறன், சவால்கள் மற்றும் பொறுப்புகள் என்னவென்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளனர் என்று கூறினார்.

|

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையும் இப்போது உள்ள நிலைமையும் மிகவும் வேறுபட்டவை ஆகும், வரும் சில ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் மாறும். இது குறித்து விவரமாகப் பேசிய பிரதமர் முன்பு அரசு மட்டுமே பொருட்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு வழங்கும் நிறுவனமாக இருந்தது. இதனால் சிலர் நலத்திட்டங்களில் இருந்து விடுபட்டும் சிலர் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டும் சில குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் இன்று அரசு நிறுவனத்தைவிட தனியார் நிறுவனங்கள் சிறந்த சேவைகளை வழங்குவதாக மக்கள் உணர்கிறார்கள் என்று கூறினார். பல்வேறு துறைகளில் மாற்று வாய்ப்புகள் இருப்பதால் அரசு அலுவலர்களின் பொறுப்புகள் அதிகரித்துள்ளது என்பதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இதனால் அதிகரித்தது அரசு ஊழியர்களின் வேலை வாய்ப்பல்ல, அதிகரித்தது வேலையில் உள்ள சவால்கள் என்றும் அவர் கூறினார்.

|

நல்ல தரமான மாற்றம் உருவாவதற்கு போட்டிகள் முக்கியம் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். வெகுவிரைவில் அரசின் அணுகுமுறை கட்டுப்பாட்டாளராக இல்லாமல் உதவியாளராக மாறும். போட்டிகள் மூலம் ஏற்படும் சவால்கள் விரைவில் சந்தர்ப்ப வாய்ப்புகளாக மாறும்.

|

திட்ட நடவடிக்கை அல்லது துறைகளில் அரசின் தலையீடு இல்லாதது உணரக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும். அதே சமயம் ஒரு துறையில் அரசின் பங்களிப்பு சுமையாக மாறிவிடக் கூடாது என்று கூறிய பிரதமர் இத்தகைய நிலமையைக் கொண்டுவர குடிமைப் பணியாளர்கள் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குடிமைப்பணிகள் சேவை தின விருதுகளுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 100 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 500 ஆக அதிகரித்திருப்பதை எடுத்துக் காட்டிய பிரதமர் தற்போது தரம் மேம்பாடு மற்றும் சிறப்பான பழக்கங்களை உருவாக்குவதில் நமது கவனம் இருக்க வேண்டும் என்று கூறினார்.

தனது அனுபவம் இளம் அதிகாரிகளின் புதுமையான அணுகுமுறைக்கு ஒரு சுமையாக மாறாமல் மூத்த அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

|

தான் யார் என்று அடையாளம் தெரியாமல் இருப்பதுதான் குடிமைப்பணியின் அதிக பலமாகும் என்று பிரதமர் கூறினார். சமூக ஊடகம் மற்றும் கைபேசி அரசாட்சிமுறை ஆகியவை மக்களை அரசில் திட்டங்களுடன் இணைத்து அதிகப் பயன்பாடுகளை கொடுத்தாலும் சமூக ஊடகங்களின் பயன்பாடு குடிமைப்பணி வலிமையை ஒருபோதும் குறைத்துவிடக் கூடாது என்று அலுவலர்களை பிரதமர் எச்சரிக்கை செய்தார்.

சீர்திருத்தம் செயல்திறன் மற்றும் மாற்றம் குறித்து பேசிய பிரதமர் சீர்திருத்தத்திற்கு அரசியல் விருப்பம் தேவை. ஆனால் செயல்திறன் குடிமைப் பணியாளர்களிடமிருந்தும் மாற்றம் மக்களின் பங்கேற்பிலும்தான் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

|

ஒவ்வொரு முடிவுகளும் தேசிய நலனை மனதில் கொண்டு எடுக்கப்படுகிறது என்பதை குடிமைப் பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒரு முடிவை எடுக்க இதுவே அளவு கோலாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

2022 – ம் ஆண்டு நாம் நாட்டின் 75 –ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம் என்பதை நினைவு கூர்ந்த பிரதமர் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்க குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் முக்கிய முகவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

Click here to read full text speech

  • krishangopal sharma Bjp January 12, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
  • krishangopal sharma Bjp January 12, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
  • krishangopal sharma Bjp January 12, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
  • Reena chaurasia August 28, 2024

    जय हो
  • Babla sengupta December 23, 2023

    Babla sengupta
  • बीरबल भाटी बीरबल भाटी August 16, 2022

    BIRBAL BHATI 🌹 M:+919784530857🙏🙏🙏🙏👏👏👏👏👈👈👈
  • Laxman singh Rana July 11, 2022

    नमो नमो 🇮🇳🌷
  • Laxman singh Rana July 11, 2022

    नमो नमो 🇮🇳
  • Manda krishna BJP Telangana Mahabubabad District mahabubabad June 23, 2022

    🇮🇳🌹🇮🇳🌹💐👌
  • Manda krishna BJP Telangana Mahabubabad District mahabubabad June 23, 2022

    💐🇮🇳💐🇮🇳🌹
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Most NE districts now ‘front runners’ in development goals: Niti report

Media Coverage

Most NE districts now ‘front runners’ in development goals: Niti report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
July 09, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது

 கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

நாடுகளால் வழங்கப்பட்ட விருதுகள்:

1. 2016, ஏப்ரலில் சௌதி அரேபியாவுக்கான அவரது பயணத்தின் போது, சௌதி அரேபியாவின் மிக உயரிய சிவில் விருது - மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.  கௌரவமிக்க இந்த விருது மன்னர்  சல்மான்வின் அப்துலாசிஸ் அவர்களால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

|

2. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய சிவில் விருதான ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காஸி அமீர் அமானுல்லா கான் விருது பிரதமர்  மோடிக்கு வழங்கப்பட்டது.

|

3. 2018- ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டபோது தி கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

|

4. 2019-ல், ஆர்டர் ஆஃப் சையது விருது  பிரதமருக்கு வழங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவில் விருதாகும்.

|

5. 2019-ல் ரஷ்யாவின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

6. வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் மிக உயரிய கௌரவமான ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குயிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இஸ்ஸூதின் விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

7. 2019-ல் கௌரவமிக்க மன்னர் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரினைசான்ஸ் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பஹ்ரைன் வழங்கியது.

|

8. ஒப்பற்ற சேவைகள் மற்றும் சாதனைகள் செய்தவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் விருதான லெஜியன் ஆஃப் மெரிட் அமெரிக்க அரசால் 2020-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

9. பூடானின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் ஜியால்போ விருது 2021 டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மிக உயரிய சிவில் விருதுகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் உள்ள கௌரவமிக்க அமைப்புகளால் பல விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.

1. சியோல் அமைதிப் பரிசு: மனித குலத்தின் நல்லிணக்கம், நாடுகளுக்கிடையே சமரசம் செய்தல், உலக சமாதானம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்ததன் மூலம் சிறப்பு பெறும் தனி நபர்களுக்கு சியோல் அமைதிப் பரிசு, கலாச்சார அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. கௌரவமிக்க இந்த விருது 2018-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

2. புவிக்கோளின் சாம்பியனுக்கான ஐநா விருது: இது ஐநா சபையின் மிக உயரிய சுற்றுச்சூழலுக்கான விருதாகும் உலகளாவிய அரங்கில் பிரதமர் மோடியின் துணிச்சலான சுற்றுச்சூழல் தலைமைத்துவத்தை அங்கீகரித்து . 2018-ல் ஐநா இதனை வழங்கியது.

|

3. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.

|

4. உலகளாவிய கோல்கீப்பர் விருது”: தூய்மை இந்தியா திட்டத்திற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால்  இந்த விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா பிரச்சாரத்தை “மக்கள் இயக்கமாக” மாற்றிய மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்த இந்தியர்களுக்கு இந்த விருதினைப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

|

5. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.