QuoteIntra-BRICS trade and investment targets should be more ambitious: PM
QuoteIndia is the world's most open and investment friendly economy due to political stability, predictable policy and business friendly reforms: PM
QuotePrime Minister Shri Narendra Modi addresses BRICS Business Forum

பிரேசிலில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரிக்ஸ் வர்த்தக அமைப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் இதர தலைவர்களும், இந்த அமைப்பில் உரையாற்றினர்.

|

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உலகின் பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகள் 50 சதவீதத்தை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். உலகளவில் நிலவும் மந்த நிலைக்கு இடையே, பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்துள்ளன, வறுமையிலிருந்து கோடிக்கணக்கானோரை விடுவித்துள்ளதுடன், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் புதிய சாதனைகளையும் படைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

|

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு இலக்குகள் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த பிரதமர், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தக கட்டணத்தை மேலும் குறைப்பது பற்றிய ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, குறைந்தது ஐந்து பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகள் உருவாக்கப்படுவதுடன் கொடுக்கல்-வாங்கல் அடிப்படையில் பரஸ்பரம் பகிர்தலும் இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

|

புதுமையான பிரிக்ஸ் கட்டமைப்பு, எதிர்கால கட்டமைப்புக்கான பிரிக்ஸ் அமைப்பு ஆகிய முக்கிய முன்முயற்சிகள், பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் நடைபெறும் விவாதத்தில் கருத்தில் கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். மனித வளம் குறித்த முயற்சிகளில் தனியார் துறையினர் பங்கேற்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஐந்து நாடுகளும் பரஸ்பர சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.

|

அரசியல் நிலைத்தன்மை, யூகிக்கத்தக்க கொள்கை, வர்த்தகத்திற்கு உகந்த சீர்திருத்தங்கள் காரணமாக உலகிலேயே இந்தியா மிகவும் வெளிப்படையான, முதலீட்டுக்கு ஏற்ற இடமாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
In Mann Ki Baat, PM Stresses On Obesity, Urges People To Cut Oil Consumption

Media Coverage

In Mann Ki Baat, PM Stresses On Obesity, Urges People To Cut Oil Consumption
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
We are proud of our Annadatas and committed to improve their lives: PM Modi
February 24, 2025

The Prime Minister Shri Narendra Modi remarked that the Government was proud of India’s Annadatas and was commitment to improve their lives. Responding to a thread post by MyGovIndia on X, he said:

“We are proud of our Annadatas and our commitment to improve their lives is reflected in the efforts highlighted in the thread below. #PMKisan”