PM Modi meets the JP Morgan International Council in New Delhi
Development of world class infrastructure, healthcare and providing quality education are policy priorities for the Govt: PM

ஜேபி மோர்கன் சர்வதேசக் கவுன்சில் உறுப்பினர்களைப் பிரதமர் இன்று (22.10.2019) புதுதில்லியில் சந்தித்தார். 2007-க்குப்பின், முதன்முறையாக இந்த சர்வதேசக் கவுன்சில் இந்தியாவில் சந்தித்துள்ளது.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்ட், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் ஹென்றி கிசிங்கர், காண்டோலிசா ரைஸ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் போன்ற உலக அரசியல் தலைவர்கள், அதேபோல், ஜேமி டைமன் (ஜேபி மோர்கன் குழுமம்) ரத்தன் டாடா (டாடா குழுமம்) போன்ற உலக வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களின் முன்னணித் தலைவர்கள், நெஸ்லே, அலிபாபா, ஆல்ஃபா, ஐபர்டோலா, கிராஃப்ட் ஹீன்ஸ் போன்ற உலக நிறுவனங்களின் முன்னணிப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்டது இந்த சர்வதேசக் கவுன்சில்.

இந்தக் குழுவை வரவேற்ற போது, 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவது பற்றிய தமது தொலைநோக்குத் திட்டம் குறித்து பிரதமர் விவாதித்தார். உலகத்தரத்திலான அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கும் சுகாதார வசதிகள் மேம்பாடு, தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை தமது அரசின் இதர முன்னுரிமைக் கொள்கைகள் என்றும் பிரதமர் கூறினார்.

அரசின் கொள்கை உருவாக்கத்தில் மக்களின் பங்களிப்பு வழிகாட்டியாக உள்ளது. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை இந்தியா தனது ராணுவ கூட்டாளிகளுடனும், நெருக்கமான அண்டை நாடுகளுடனும் நியாயமான, சமத்துவமான, பலதுருவ உலக நிலையைக் கட்டமைக்க ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடர்கிறது.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'

Media Coverage

'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi condoles loss of lives due to stampede at New Delhi Railway Station
February 16, 2025

The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to stampede at New Delhi Railway Station. Shri Modi also wished a speedy recovery for the injured.

In a X post, the Prime Minister said;

“Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.”