QuotePM holds meetings with leaders of ASEAN countries

இந்தியா ஆசியான் உறவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் மேதகு டா ஆங் சான் சூ சி, வியட்நாம் பிரதமர் மேதகு யூன் க்சுவான் ஃபூ, பிலிப்பைன்ஸ் பிரதமர் மேதகு திரு. ரோட்ரிகோ ரோ ட்யூடெர்ட் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.

ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வந்திருக்கும் அவர்களுக்கு பிரதமர் வரவேற்பு அளித்தார்.

|

மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ சி உடன் பிரதமர் மோடியின் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதுடன், இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 2017 செப்டம்பரில் பிரதமர் மோடியின் மியான்மர் பயணத்தின்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் தொடர் நடவடிக்கையும் இதில் அடங்கும்.

|

வியட்நாம் பிரதமர் ஃபூ உடன் நடைபெற்ற சந்திப்பில் இரு தலைவர்களும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் முழுமையான யுக்திபூர்வமான பங்களிப்புக்கான கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் வளர்ச்சி குறித்து திருப்தி தெரிவித்தனர். இந்தப் பயணத்தின் போது தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையிலும், தரவு கண்காணிப்பு மற்றும் தரவு வரவேற்பு நிலையம் மற்றும் தரவு நடைமுறைப்படுத்தும் வசதியை ஆசியான் இந்தியா விண்வெளி ஒத்துழைப்பு கீழ் வியட்நாமில் அமைப்பதற்கான இரு ஒப்பந்தங்களும் இந்திய வியட்நாம் உறவுக்கு ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும் என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். 100 மில்லியன் டாலர் கடன் திட்டத்தின் கீழ் எல் அண்ட் டி நிறுவனம் ஓ.பி.வி. எனப்படும் கரையோர ரோந்து வாகனங்களை தயாரிக்கும் திட்டம் குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். 500 பில்லியன் டாலர் கடன் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர்கள் முடிவு செய்தனர்.

|

அதிபர் ட்யூரெட் உடன் நடந்த சந்திப்பின் போது இருதலைவர்களும் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆய்வு செய்ததுடன் 2017 நவம்பரில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் உலகளாவிய மற்றும் பிராந்திய சூழ்நிலை குறித்தும் ஆய்வு செய்தனர். இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை குறிப்பாக உள்கட்டமைப்புத் துறையில் வேகம் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் பிலிப்பைன்ஸ்சின் பில்டு-பில்டு-பில்டு திட்டத்தின் கீழ் இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கு இடையே பல துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இன்வெஸ்ட் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ்சின் முதலீடுகள் வாரியத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருதலைவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த மூன்று சந்திப்புகளிலும் அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்திய பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் இந்தியா இடையே அமைதி, பாதுகாப்பு மற்றும் சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இது தொடர்பான ஆலோசனைகள் ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Most NE districts now ‘front runners’ in development goals: Niti report

Media Coverage

Most NE districts now ‘front runners’ in development goals: Niti report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
July 09, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது

 கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

நாடுகளால் வழங்கப்பட்ட விருதுகள்:

1. 2016, ஏப்ரலில் சௌதி அரேபியாவுக்கான அவரது பயணத்தின் போது, சௌதி அரேபியாவின் மிக உயரிய சிவில் விருது - மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.  கௌரவமிக்க இந்த விருது மன்னர்  சல்மான்வின் அப்துலாசிஸ் அவர்களால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

|

2. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய சிவில் விருதான ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காஸி அமீர் அமானுல்லா கான் விருது பிரதமர்  மோடிக்கு வழங்கப்பட்டது.

|

3. 2018- ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டபோது தி கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

|

4. 2019-ல், ஆர்டர் ஆஃப் சையது விருது  பிரதமருக்கு வழங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவில் விருதாகும்.

|

5. 2019-ல் ரஷ்யாவின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

6. வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் மிக உயரிய கௌரவமான ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குயிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இஸ்ஸூதின் விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

7. 2019-ல் கௌரவமிக்க மன்னர் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரினைசான்ஸ் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பஹ்ரைன் வழங்கியது.

|

8. ஒப்பற்ற சேவைகள் மற்றும் சாதனைகள் செய்தவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் விருதான லெஜியன் ஆஃப் மெரிட் அமெரிக்க அரசால் 2020-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

9. பூடானின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் ஜியால்போ விருது 2021 டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மிக உயரிய சிவில் விருதுகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் உள்ள கௌரவமிக்க அமைப்புகளால் பல விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.

1. சியோல் அமைதிப் பரிசு: மனித குலத்தின் நல்லிணக்கம், நாடுகளுக்கிடையே சமரசம் செய்தல், உலக சமாதானம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்ததன் மூலம் சிறப்பு பெறும் தனி நபர்களுக்கு சியோல் அமைதிப் பரிசு, கலாச்சார அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. கௌரவமிக்க இந்த விருது 2018-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

2. புவிக்கோளின் சாம்பியனுக்கான ஐநா விருது: இது ஐநா சபையின் மிக உயரிய சுற்றுச்சூழலுக்கான விருதாகும் உலகளாவிய அரங்கில் பிரதமர் மோடியின் துணிச்சலான சுற்றுச்சூழல் தலைமைத்துவத்தை அங்கீகரித்து . 2018-ல் ஐநா இதனை வழங்கியது.

|

3. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.

|

4. உலகளாவிய கோல்கீப்பர் விருது”: தூய்மை இந்தியா திட்டத்திற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால்  இந்த விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா பிரச்சாரத்தை “மக்கள் இயக்கமாக” மாற்றிய மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்த இந்தியர்களுக்கு இந்த விருதினைப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

|

5. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.