மிஷன் நெட் ஜீரோ (நிகர பூஜ்ய உமிழ்வு இயக்கம்) முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

 

கடந்த 9 ஆண்டுகளில் சூரிய சக்தித் திறன் 54 மடங்கு அதிகரித்துள்ளதாக ரயில்வேத்துறை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3.68 மெகாவாட் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், 2014-23-ம் ஆண்டு காலகட்டத்தில் 200.31 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே-யின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"பசுமையான எதிர்காலத்திற்கான நமது உறுதிப்பாட்டில் பாராட்டத்தக்க சிறந்த முன்னேற்றத்தை இது காட்டுகிறது. வெறும் 9 ஆண்டுகளில், பூஜ்ஜிய உமிழ்வை (#MissionNetZero) நோக்கி கணிசமான முன்னேற்றங்களை அடைந்து, நமது திறனைக் கணிசமாக அதிகரித்துள்ளோம். இந்தப் பயணத்தைத் தொடர்வோம். இந்தியாவுக்கு பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வோம்.”

 

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Economy delivers a strong start to the fiscal with GST, UPI touching new highs

Media Coverage

Economy delivers a strong start to the fiscal with GST, UPI touching new highs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 2, 2025
May 02, 2025

PM Modi’s Vision: Transforming India into a Global Economic and Cultural Hub