மக்களவையில் இன்று (20.09.2023) அரசியலமைப்பின் நூற்றி இருபத்தெட்டாவது சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் எக்ஸ் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"அரசியலமைப்பு (நூற்றி இருபத்தெட்டாவது திருத்தம்) மசோதா- 2023 மக்களவையில் மகத்தான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாரி சக்தி வந்தன் அதினியம் (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமாகும். இது பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேலும் அதிகரிக்கும். அத்துடன் நமது அரசியல் செயல்பாட்டில் பெண்களின் அதிக பங்கேற்பை அதிகரிக்கும்” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
Delighted at the passage of The Constitution (One Hundred and Twenty-Eighth Amendment) Bill, 2023 in the Lok Sabha with such phenomenal support. I thank MPs across Party lines who voted in support of this Bill.
— Narendra Modi (@narendramodi) September 20, 2023
The Nari Shakti Vandan Adhiniyam is a historic legislation which…