QuotePM approves grant of Rs. 3 Lakh from PMNRF for the treatment of Doris Francis

திருமதி. டோரிஸ் பிரான்சிஸ் அவர்களின் சிகிச்சைக்கான பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். திருமதி. டோரிஸ் பிரான்சிஸ் ஆற்றிய சேவைகள் குறித்தும் அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட செய்தியையும் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவருக்கு உதவ பிரதமர் முன்வந்தார்.

திருமதி. டோரிஸ் பிரான்சிஸ் புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தேவையான சிகிச்சைகளை சிறந்த முறையில் அளிக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவருக்கு அளிக்கப்பட்ட இந்த நிதி உதவி குறித்து மருத்துவமனைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

காசியாபாத்தில் வசித்து வரும் திருமதி. டோரிஸ் பிரான்சிஸ், தன்னார்வத்தோடு மிகவும் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் தன்னார்வ தொண்டாற்றுவதில் பிரபலமானவர்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
FSSAI trained over 3 lakh street food vendors, and 405 hubs received certification

Media Coverage

FSSAI trained over 3 lakh street food vendors, and 405 hubs received certification
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 11, 2025
August 11, 2025

Appreciation by Citizens Celebrating PM Modi’s Vision for New India Powering Progress, Prosperity, and Pride