Quote"இந்தியாவில், இயற்கையும் அதன் வழிகளும் வழக்கமான கற்றல் ஆதாரங்களாக உள்ளன"
Quote"பருவநிலை நடவடிக்கை 'அந்தியோதயா'வைப் பின்பற்ற வேண்டும். அதாவது சமூகத்தில் கடைசி நபரின் எழுச்சி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்"
Quote2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் என்ற இலக்கை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது
Quote"உலகின் 70 சதவீத புலிகள் இன்று இந்தியாவில் காணப்படுகின்றன, இது புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் விளைவாகும்"
Quote"இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்கேற்பால் இயக்கப்படுகின்றன"
Quote"சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை (மிஷன் லைப்) ஒரு உலகளாவிய வெகுஜன இயக்கமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பேணவும் தனிப்பட்ட மற்றும் கூட்டு நடவடிக்கைக்கு ஊக்குவிக்கும்"
Quoteஇயற்கை அன்னை 'வசுதைவ குடும்பகத்தை' விரும்புகிறாள். ஒரே குடும்பம், ஒரே பூமி. ஒரே எதிர்காலம்

சென்னையில் நடைபெற்ற ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

சென்னை வந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், சென்னை நகரம் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு நிறைந்தது என்று குறிப்பிட்டார். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் சின்னமான மாமல்லபுரம் 'கட்டாயம் பார்க்க வேண்டிய' இடம் என்பதைக் கண்டுகளித்து மனம்கவரும் கற்சிற்பங்களையும் அதன் மகத்தான அழகையும் அனுபவிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மகாகவி திருவள்ளுவரை மேற்கோள் காட்டிய பிரதமர், "தண்ணீரை மேலே ஈர்த்த மேகம் அதை மழை வடிவில் திருப்பித் தராவிட்டால், பெருங்கடல்கள் கூட சுருங்கிவிடும்" என்று கூறினார். இந்தியாவில் இயற்கை மற்றும் அது வழக்கமான கற்றல் ஆதாரமாக மாறும் வழிகள் குறித்து பேசிய பிரதமர், மற்றொரு சமஸ்கிருத ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி விளக்கினார், "நதிகள் தங்கள் சொந்த தண்ணீரைக் குடிப்பதில்லை அல்லது மரங்கள் அவற்றின் சொந்த பழங்களை சாப்பிடுவதில்லை. மேகங்கள் அவற்றின் நீரினால் உற்பத்தி செய்யப்படும் தானியங்களையும் உட்கொள்வதில்லை". இயற்கை நமக்கு வழங்குவது போல இயற்கைக்கு நாமும் வழங்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பூமித் தாயைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படைப் பொறுப்பு என்றும், இந்தக் கடமை நீண்ட காலமாக பலராலும் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அது 'பருவநிலை நடவடிக்கை' என்ற வடிவம் எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் பாரம்பரிய அறிவின் அடிப்படையில், பருவநிலை நடவடிக்கை 'அந்தியோதயா'வைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் கூறினார், அதாவது சமூகத்தில் கடைசி நபரின் எழுச்சியையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதாகும். பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் வளரும் நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், 'ஐ.நா பருவநிலை மாநாடு' மற்றும் 'பாரிஸ் ஒப்பந்தம்' ஆகியவற்றின் கீழ் உறுதிமொழிகள் மீதான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், ஏனெனில் இது, வளரும் நாடுகளின் விருப்பங்களை பருவநிலை நட்பு வழியில் நிறைவேற்ற உதவுவதில் முக்கியமானதாக இருக்கும்.

இந்தியா தனது லட்சியமான 'தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்' மூலம் தன்னை வழிநடத்தி கொள்கிறது என்பதை தெரிவிப்பதில் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து நிறுவப்பட்ட மின் திறனை 2030 ஆம் ஆண்டின் இலக்கை விட 9 ஆண்டுகளுக்கு முன்பே அடைவதாகவும், இப்போது புதுப்பிக்கப்பட்ட இலக்குகள் மூலம் நிர்ணய அளவை இன்னும் அதிகமாக அமைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், 2070-ம் ஆண்டுக்குள் 'நிகர பூஜ்ஜியத்தை' அடைய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் சமாளிப்பு உள்கட்டமைப்பு கூட்டணி மற்றும் 'தொழில் மாற்றத்திற்கான தலைமைத்துவ குழு' உள்ளிட்ட கூட்டணிகள் மூலம் இந்தியா தனது கூட்டாளிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று திரு. மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பல்லுயிர் பாதுகாப்பு, பேணுதல், மறுசீரமைப்பு, செறிவூட்டல் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமர், "இந்தியா மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு" என்று குறிப்பிட்டார். காட்டுத் தீ மற்றும் சுரங்கத் தொழிலால் பாதிக்கப்பட்ட முன்னுரிமை நிலப்பரப்புகளை மீட்டெடுப்பது 'காந்திநகர் செயலாக்க வரைபடம் மற்றும் தளம்' மூலம் அங்கீகரிக்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பூமியில் உள்ள ஏழு வகை புலிகளைப் பாதுகாப்பதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட 'சர்வதேச புலிகள் கூட்டணி' பற்றி அவர் குறிப்பிட்டார், மேலும் ஒரு முன்னோடி பாதுகாப்பு முயற்சியான புலிகள் பாதுகாப்பு இயக்கத்தின் கற்றல்களைப் பாராட்டினார். உலகின் 70 சதவீத புலிகள் இன்று இந்தியாவில் இருப்பது புலிகள் திட்டத்தின் விளைவாகும் என்று அவர் தெரிவித்தார். சிங்க பாதுகாப்பு இயக்கம் மற்றும் டால்பிஃன் பாதுகாப்பு இயக்கம் சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்களிப்பால் இயக்கப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர்,
'அம்ரித் சரோவர்' இயக்கத்தின் ஒரு தனித்துவமான நீர் பாதுகாப்பு முன்முயற்சியாகும், இது ஒரு வருடத்தில் 63,000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மேம்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த இயக்கம் முற்றிலும் சமூக பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். தண்ணீரை சேமிக்க 280,000 க்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பதற்கும், ஏறத்தாழ 250,000 மறுபயன்பாடு மற்றும் நீரை மீண்டும் நிரப்புவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வழிவகுத்த இயக்கத்தை அவர் குறிப்பிட்டார். "இவை அனைத்தும் மக்களின் பங்கேற்பு மற்றும் உள்ளூர் மண் மற்றும் நீர் நிலைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் சாதிக்கப்பட்டன" என்று பிரதமர் மேலும் கூறினார். கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான 'நமாமி கங்கை இயக்கத்தில்' சமூகத்தின் பங்களிப்பை திறம்பட பயன்படுத்துவதை திரு. மோடி சுட்டிக்காட்டினார், இதன் விளைவாக கங்கை நதியின் பல பகுதிகளில் கங்கை டால்பிஃன் மீண்டும் தோன்றியது முக்கிய சாதனையாகும். சதுப்பு நிலப் பாதுகாப்பில் ராம்சர் தளங்களாக நியமிக்கப்பட்டுள்ள 75 சதுப்பு நிலங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ஆசியாவிலேயே மிகப் பெரிய ராம்சார் தளங்களின் வலையமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்றார்.

'சிறிய தீவு நாடுகளை' 'பெரிய பெருங்கடல் நாடுகள்' என்று குறிப்பிட்ட பிரதமர், பெருங்கடல்கள் அவர்களுக்கு ஒரு முக்கியமான பொருளாதார வளம் என்றும், உலகெங்கிலும் உள்ள மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவுவதாகவும் கூறினார். இது விரிவான பல்லுயிர் பெருக்கத்தின் தாயகம் என்று கூறிய அவர், கடல் வளங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் மேலாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 'நிலையான மற்றும் நெகிழ்வான நீலம் மற்றும் கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கான ஜி 20 உயர் மட்டக் கொள்கைகளை' ஏற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர ஒரு பயனுள்ள சர்வதேச சட்டரீதியான பிணைப்பு கருவிக்காக ஆக்கப்பூர்வமாக பணியாற்றுமாறு ஜி 20-ஐ கேட்டுக்கொண்டார்.

 

கடந்த ஆண்டு ஐ.நா. தலைமைச் செயலாளருடன் இணைந்து - மிஷன் லைஃப் – சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை திட்டத்தைத் தொடங்கியதை நினைவுகூர்ந்த பிரதமர், உலகளாவிய வெகுஜன இயக்கமான மிஷன் லைஃப், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேணவும் தனிப்பட்ட மற்றும் கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் என்று கூறினார். இந்தியாவில், எந்தவொரு நபரும், நிறுவனமும் அல்லது உள்ளாட்சி அமைப்பும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை கவனிக்காமல் இருக்கமுடியாது என்று பிரதமர் கூறினார். அண்மையில் அறிவிக்கப்பட்ட 'பசுமை கடன் திட்டத்தின்' கீழ் இப்போது அவர்கள் பசுமைக் கடன்களைப் பெற  இயலும் என்று அவர் தெரிவித்தார். மரம் நடுதல், நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயம் போன்ற நடவடிக்கைகள் மூலம் இப்போது தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிறர் வருவாயை ஈட்ட முடியும் என்று அவர் விளக்கினார்.

 

இயற்கை அன்னைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை நாம் மறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் மாநாடு ஆக்கப்பூர்வமானதாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். "இயற்கை அன்னை பிளவுபட்ட அணுகுமுறையை விரும்பவில்லை. "வசுதைவ குடும்பகம்" - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்பதே இயற்கை அன்னையின் விருப்பம் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • Jitendra Kumar June 02, 2025

    🙏🙏🙏🙏
  • padmanaban July 29, 2023

    Jai Modi je namaskar Modi je super pm only 👍 👏 u
  • Rajashekharayya Hiremath July 29, 2023

    Jai hoo Shri Narendra modiji PM.India Aatma Nirbhara Bharat,🇮🇳🇮🇳
  • Kuldeep Yadav July 29, 2023

    આદરણીય પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારા નમસ્કાર મારુ નામ કુલદીપ અરવિંદભાઈ યાદવ છે. મારી ઉંમર ૨૪ વર્ષ ની છે. એક યુવા તરીકે તમને થોડી નાની બાબત વિશે જણાવવા માંગુ છું. ઓબીસી કેટેગરી માંથી આવતા કડીયા કુંભાર જ્ઞાતિના આગેવાન અરવિંદભાઈ બી. યાદવ વિશે. અમારી જ્ઞાતિ પ્યોર બીજેપી છે. છતાં અમારી જ્ઞાતિ ના કાર્યકર્તાને પાર્ટીમાં સ્થાન નથી મળતું. એવા એક કાર્યકર્તા વિશે જણાવું. ગુજરાત રાજ્ય ના અમરેલી જિલ્લામાં આવેલ સાવરકુંડલા શહેર ના દેવળાના ગેઈટે રહેતા અરવિંદભાઈ યાદવ(એ.બી.યાદવ). જન સંઘ વખત ના કાર્યકર્તા છેલ્લાં ૪૦ વર્ષ થી સંગઠનની જવાબદારી સંભાળતા હતા. ગઈ ૩ ટર્મ થી શહેર ભાજપના મહામંત્રી તરીકે જવાબદારી કરેલી. ૪૦ વર્ષ માં ૧ પણ રૂપિયાનો ભ્રષ્ટાચાર નથી કરેલો અને જે કરતા હોય એનો વિરોધ પણ કરેલો. આવા પાયાના કાર્યકર્તાને અહીંના ભ્રષ્ટાચારી નેતાઓ એ ઘરે બેસાડી દીધા છે. કોઈ પણ પાર્ટીના કાર્યકમ હોય કે મિટિંગ એમાં જાણ પણ કરવામાં નથી આવતી. એવા ભ્રષ્ટાચારી નેતા ને શું ખબર હોય કે નરેન્દ્રભાઇ મોદી દિલ્હી સુધી આમ નમ નથી પોચિયા એની પાછળ આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તાઓ નો હાથ છે. આવા પાયાના કાર્યકર્તા જો પાર્ટી માંથી નીકળતા જાશે તો ભવિષ્યમાં કોંગ્રેસ જેવો હાલ ભાજપ નો થાશે જ. કારણ કે જો નીચે થી સાચા પાયા ના કાર્યકર્તા નીકળતા જાશે તો ભવિષ્યમાં ભાજપને મત મળવા બોવ મુશ્કેલ છે. આવા ભ્રષ્ટાચારી નેતાને લીધે પાર્ટીને ભવિષ્યમાં બોવ મોટું નુકશાન વેઠવું પડશે. એટલે પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારી નમ્ર અપીલ છે કે આવા પાયા ના અને બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ મૂકો બાકી ભવિષ્યમાં ભાજપ પાર્ટી નો નાશ થઈ જાશે. એક યુવા તરીકે તમને મારી નમ્ર અપીલ છે. આવા કાર્યકર્તાને દિલ્હી સુધી પોચડો. આવા કાર્યકર્તા કોઈ દિવસ ભ્રષ્ટાચાર નઈ કરે અને લોકો ના કામો કરશે. સાથે અતિયારે અમરેલી જિલ્લામાં બેફામ ભ્રષ્ટાચાર થઈ રહીયો છે. રોડ રસ્તા ના કામો સાવ નબળા થઈ રહિયા છે. પ્રજાના પરસેવાના પૈસા પાણીમાં જાય છે. એટલા માટે આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ લાવો. અમરેલી જિલ્લામાં નમો એપ માં સોવ થી વધારે પોઇન્ટ અરવિંદભાઈ બી. યાદવ(એ. બી.યાદવ) ના છે. ૭૩ હજાર પોઇન્ટ સાથે અમરેલી જિલ્લામાં પ્રથમ છે. એટલા એક્ટિવ હોવા છતાં પાર્ટીના નેતાઓ એ અતિયારે ઝીરો કરી દીધા છે. આવા કાર્યકર્તા ને દિલ્હી સુધી લાવો અને પાર્ટીમાં થતો ભ્રષ્ટાચારને અટકાવો. જો ખાલી ભ્રષ્ટાચાર માટે ૩૦ વર્ષ નું બિન ભ્રષ્ટાચારી રાજકારણ મૂકી દેતા હોય તો જો મોકો મળે તો દેશ માટે શું નો કરી શકે એ વિચારી ને મારી નમ્ર અપીલ છે કે રાજ્ય સભા માં આવા નેતા ને મોકો આપવા વિનંતી છે એક યુવા તરીકે. બાકી થોડા જ વર્ષો માં ભાજપ પાર્ટી નું વર્ચસ્વ ભાજપ ના જ ભ્રષ્ટ નેતા ને લીધે ઓછું થતું જાશે. - અરવિંદ બી. યાદવ (એ.બી યાદવ) પૂર્વ શહેર ભાજપ મહામંત્રી જય હિન્દ જય ભારત જય જય ગરવી ગુજરાત આપનો યુવા મિત્ર લી.. કુલદીપ અરવિંદભાઈ યાદવ
  • Kishore Sahoo July 29, 2023

    Regards Sir, 👏 Indian people not using Ur UJALA, gas ⛽ Rather they're selling the same 👍🌹 to other people 👍 they're trying to Hoodwink the Indian Government. Withdrawal may solve many Problems of Reduction in Gas /Petrol price. Jai Bharat Mata Ki ❤️‍🩹 SUPUTRA Ko Pranam.
  • LalitNarayanTiwari July 29, 2023

    🌹🌹जय जय श्री राम🌹🌹
  • Umakant Mishra July 28, 2023

    namo namo
  • Sanjay Jain July 28, 2023

    With my self cheating in Ahmedabad
  • Amit Das July 28, 2023

    AMNESTY SCHEME 2023 UNDER LOCKDOWN PERIOD WE COULDN'T CONTRACT ANY CONSULTANT ABOUT G.S.TR3B RELATED PROBLEMS,DURING LOCKDOWN BUSINESS WAS CLOSED,NIL GSTR3B NOT FILED,GIVE US MEDICAL ISSUES UNDER AMNESTY SCHEME LOCKDOWN PERIOD SINCE"2020 MARCH"EXTEND,G.S.T HOLDERS GET BENEFIT.
  • Ram Pratap yadav July 28, 2023

    जलवायू परिवर्तन चिन्ता का विषय है इसके सुधार हेतु प्रदूषण नियंत्रण कार्यक्रमो पर निरन्तर निगाह रखना केवल आप के रहते हुये ही संभव है।
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
A windfall is coming for India's surging defence exports

Media Coverage

A windfall is coming for India's surging defence exports
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi extends greetings on the occasion of Lord Jagannath’s Rath Yatra
June 27, 2025

The Prime Minister Shri Narendra Modi today extended greetings on the auspicious occasion of Lord Jagannath’s Rath Yatra.

In separate posts on X, he wrote:

“भगवान जगन्नाथ की रथ यात्रा के पवित्र अवसर पर सभी देशवासियों को मेरी ढेरों शुभकामनाएं। श्रद्धा और भक्ति का यह पावन उत्सव हर किसी के जीवन में सुख, समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य लेकर आए, यही कामना है। जय जगन्नाथ!”

“ପବିତ୍ର ରଥଯାତ୍ରା ଉପଲକ୍ଷେ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା ।

ଜୟ ଜଗନ୍ନାଥ!”