1960, மே, 1 அன்று குஜராத் உருவாக்கப்பட துவக்கத்தில் இருந்த உற்சாகம் மற்றும் நம்பிக்கை பத்தாண்டுகளின் முடிவின்போது தணிந்துபோனது. விரைவான சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றம் ஆகிய கனவுகளை கொண்டிருந்த குஜராத்தில் உள்ள சாதாரண மக்களிடையே ஏமாற்றமே ஏற்பட்டது. இந்துலால் யாக்னிக், ஜிவ்ராஜ் மேத்தா மற்றும் பல்வந்த் ராய் மேத்தா போன்ற அரசியல் புள்ளிகளின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள், அரசியலில் பணம் மற்றும் அதிகாரத்தின் மீதான மோகத்தால் மறைந்து போனது. 1960-களின் முடிவு மற்றும் 1970-களின் துவக்கதில், குஜராத்தில் இருந்த காங்கிரஸ் அரசின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் புதிய உச்சத்தை எட்டியது. 1971-ல் இந்தியா பாகிஸ்தானை போரில் வென்று, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக உறுதியளித்தன்பேரில் காங்கிரஸ் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வாக்குறுதி, ‘வறுமை ஒழிப்பு” என்பதிலிருந்து ‘ஏழை ஒழிப்பு”-ஆக மெல்ல மாறியது. குஜராத்தில், ஏழைகளின் வாழ்க்கை மிகவும் மோசமானதுடன், கடும் வறட்சி மற்றும் கடும் விலையேற்றம் ஆகியவையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாநிலத்தில் அடிப்படை பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி பொதுவாகி போனது. பொது மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை

.

தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாத காங்கிரஸ் அரசு, கோஷ்டி பூசல்களில் மூழ்கி போய், இந்நிலையை மாற்றிட எந்த விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக, திரு.கியான் ஷியாம் ஓசாவின் அரசு கவிழ்க்கப்பட்டு, குழப்பமான சூழ்நிலையில் திரு.சிமன்பாய் பட்டேல் அரசு பதவியேற்றது. எனினும், இந்த அரசும் நிகரான திறமையற்றதாக நிருபிக்கப்பட்டதால், குஜராத் மக்களிடையே அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி, 1973, டிசம்பரில், மோர்பி பொறியியல் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் தங்களது உணவு கட்டணம் உயர்ந்ததை எதிர்த்து போராட்டம் நடத்தியதன் மூலம் பொதுவான கோபமாக மாறியது. இந்த போராட்டங்கள் பெருத்த ஆதரவை பெற்று, அரசிற்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக மாற தூண்டியது.   மாநில மற்றும் மத்திய அரசுகள், தாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளாலும் இந்த அதிருப்தியை போக்க இயலவில்லை. ஊழல் மற்றும் விலை உயர்விற்கு எதிரான பெரும் போராட்டமாக இருந்த நிலையில், குஜராத் கல்வி அமைச்சர் இதற்காக ஜன் சங்கத்தை குற்றம் சாட்டியதால், நிலைமை மிகவும் மோசமடைந்தது. 1973-ல் திரு. நரேந்திர மோடி, சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்தை காட்டியதுடன், பொதுமக்களை பாதிக்கக்கூடிய விலையேற்றம், பணவீக்கம் மற்றும் இதர பிரச்சினைகளுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். இளம் பிரசாரகர் மற்றும் அகில பாரதிய மாணவர் அமைப்பின் உறுப்பினரான திரு.நரேந்திரர் புனரமைப்பு இயக்கத்தில் இணைத்து தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றினார். சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் ஒரே குரலில் பங்கேற்றதன் மூலம் புனரமைப்பு இயக்கம் எல்லா விதத்திலும் மிகப் பெரிய இயக்கமாக இருந்தது. இந்த இயக்கம், பொதுமக்களின் நன் மதிப்பிற்கு உரியவரும், ஊழலுக்கு எதிராக போராடுபவருமான திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் ஆதரவை பெற்றதன் மூலம் மேலும் வலுப்பெற்றது. அகமாதாபாத்தில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருந்ததால், திரு.நரேந்திரர் அப்புகழ்பெற்ற தலைவருடன் நெருங்கி பழகும் உயரிய வாய்ப்பை பெற்றார். அந்த முதுபெரும் தலைவருடன் நடத்திய பேச்சுக்கள் இளம் நரேந்திரரிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புனரமைப்பு இயக்கம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு திரு. சிமன்பாய் பட்டேல் பதவியேற்ற ஆறு மாத காலத்திலேயே ராஜினாமா செய்தார். புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ் அரசு அகற்றப்பட்டது. முரண்பாடாக, 1975, ஜுன், 12 அன்று குஜராத் தேர்தல் வெளிவந்த அன்றை தினத்திலேயே, அலகாபாத் உயர்நீதி மன்றம், பிரதமர் இந்திரா காந்தியை தேர்தல் ஊழல் குற்றவாளி என அறிவித்ததன் மூலம் பிரதம மந்திரியான அவரது எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியது. ஒரு வாரத்திற்கு பின்பு, திரு.பாபுபாய் ஜஷ்பாய் பட்டேல் தலைமையில் குஜராத்தில் புதிய அரசு அமைக்கப்பட்டது. திரு.நரேந்திரருக்கு முதல் மிகப் பெரிய போராட்டமாக புனரமைப்பு இயக்கமானதுடன், அவருக்கு சமூக பிரச்சினைகள் குறித்த உலகப் பார்வைக்கு வழிவகுத்தது. இது, திரு.நரேந்திரருக்கு, அரசியல் வரலாற்றில், 1975-ம் ஆண்டு குஜராத்தில், லோக் சங்கர்ஷ் சமித்தியின் பொது செயலாளராக பதவியையும் அளித்தது. இயக்கத்தின்போது, குறிப்பாக, மாணவர்களின் பிரச்சினையை அருகிலிருந்து உணரும் வாய்ப்பை பெற்றது, அவர் முதலமைச்சர் ஆனபோது அவருக்கு மிகப் பெரிய சொத்தாக அது அமைந்ததை நிருபித்தது. 2001 முதல், அவர் கல்வி சீர்திருத்தத்தில் தனது முக்கிய கவனத்தை செலுத்தி, குஜராத் இளைஞர்கள் உலகத்தரமான கல்வியை பெற வைத்தது. குஜராத்தில், புனரமைப்பு இயக்கத்திற்கு பின்பான நம்பிக்கை குறுகிய காலம் மட்டுமே இருந்தது. 1975, ஜுன் 25 நடுஇரவில், பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி பொது உரிமைகளை ரத்து செய்யும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும் அவசர சட்டத்தை அறிவித்தார். திரு.நரேந்திர மோடியின் வாழ்க்கையில் முக்கிய அத்தியாயம் துவங்கியது

  • krishangopal sharma Bjp January 06, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷
  • krishangopal sharma Bjp January 06, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
  • krishangopal sharma Bjp January 06, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
  • Rahul Naik December 07, 2024

    🙏🙏
  • Chhedilal Mishra December 01, 2024

    Jai shrikrishna
  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • Devendra Kunwar October 08, 2024

    BJP
  • manvendra singh September 27, 2024

    जय हो
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • Pawan Sharma September 19, 2024

    ji
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Global aerospace firms turn to India amid Western supply chain crisis

Media Coverage

Global aerospace firms turn to India amid Western supply chain crisis
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.