இந்தியா தான் முதலில்,” என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் நோக்கம், உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. வர்த்தக வாய்ப்புகளுக்கான உடன்பாட்டை (Trade Facilitation Agreement - TFA) எட்டுவதற்காக உலக வர்த்தக அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையின்போது, அதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த உடன்பாட்டால், உணவுப் பாதுகாப்பு என்ற இந்தியாவின் வாக்குறுதியை விட்டுக்கொடுப்பது போல இருப்பதாக தெரிவித்தது. இந்தியாவைப் பொருத்தவரை, ஏழைகளுக்கான உணவு பாதுகாப்பு என்பது உறுதியானது, தனிப்பட்ட முறையில் பிரதமரும் இதனை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளார்.

உணவு தானியங்களை பொதுமக்களுக்காக சேமித்து வைப்பதற்கு நீண்டகால தீர்வு தேவை என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு உலக அரங்கில் ஆதரவு கிடைத்தது. இந்தியாவின் நிலைப்பாட்டை பல்வேறு நாடுகளும் ஆதரித்தன. மேலும், உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த விட்டுக் கொடுத்தலுக்கும் இடமில்லை என்பதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், உலக சமுதாயத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
JD Vance meets Modi in Delhi: Hails PM as ‘great leader’, commits to ‘relationship with India’

Media Coverage

JD Vance meets Modi in Delhi: Hails PM as ‘great leader’, commits to ‘relationship with India’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

செளத் ஏசியன் கோப்பரேஷன் வலுவான தாக்கத்தை பெற்ற தினமான 5 மே 2017 அன்று வரலாற்றில் பதிவானது. அன்றைய தினம் தான், இந்தியா இரண்டு வருடங்களுக்கு முன்பு உறுதி செய்த அர்ப்பணிப்பை, செளத் ஏசியா சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

செளத் ஏசியா சாட்டிலைட் உடன், செளத் ஏசியன் தேசங்கள் தங்கள் ஒத்துழைப்பை விண்வெளியிலும் நீட்டித்தன!

|

வரலாற்றின் உருவாக்கத்தை காண, இந்தியா, அஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாள் மற்றும் ஸ்ரீ லங்கா நாடுகளை சேர்ந்த தலைவர்கள், வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செளத் ஆசியன் சாட்டிலைட் ஆற்றலின் முழு செயல்திறனை அடையமுடியும் என்றார்.

|

சாட்டிலைட் உடைய மேலான ஆளுமை, கிராமப்புறங்களில், திறனுள்ள தகவல் தொடர்பு, மேலான வங்கி சேவை மற்றும் கல்வியை வழங்குவதை உறுதி செய்யும். மேலான சிகிச்சைக்கு, துல்லியமான பருவ நிலை கணிப்பு மற்றும் மக்களை தொலைதூர மருத்துவத்துடன் இணைப்பது போன்றவற்றிற்கு உதவும்.

நாம் கைகளை இணைத்து, பரஸ்பரம் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சியை, பகிர்ந்து கொண்டால், நாம் மேம்பாடு மற்றும் செழிப்பை வேகமெடுக்க வைக்க முடியும்,’ என்று ஸ்ரீ மோடி குறிப்பிட்டார்