'வசுதைவ குடும்பகம்' என்ற இந்த இரண்டு சொற்களும் ஆழமான தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 'உலகம் ஒரே குடும்பம்' என்பது இதன் பொருளாகும். இது, எல்லைகள், மொழிகள் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து, ஒரு உலகளாவிய குடும்பமாக முன்னேற நம்மை ஊக்குவிக்கும் அனைத்தையும் தழுவிய கண்ணோட்டமாகும். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் போது, இது மனிதகுலத்தை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்கான அழைப்பாக மாறியுள்ளது. ஒரே பூமியாக, நமது கிரகத்தை மேம்படுத்த நாம் ஒன்றிணைகிறோம். ஒரே குடும்பமாக, வளர்ச்சியைத் தேடுவதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறோம். ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்தை நோக்கி நாம் ஒன்றாக நகர்கிறோம் - ஒரே எதிர்காலம் என்பது இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தருணத்தில் மறுக்க முடியாத உண்மையாகும்.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலக நிலை அதற்கு முந்தைய உலகத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. இதில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

முதலாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட உலகைப் பற்றிய கண்ணோட்டத்திலிருந்து, மனிதகுலத்தை மையமாகக் கொண்ட கண்ணோட்டத்திற்கு மாறுவது அவசியம் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது.

இரண்டாவதாக, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் மீள்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை உலகம் அங்கீகரித்துள்ளது.

மூன்றாவதாக, உலகளாவிய நிறுவனங்களை சீர்திருத்துவதன் மூலம் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கான கூட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களில் நமது ஜி20 தலைமைத்துவம் ஒரு வினையூக்கியின் பங்கைக் கொண்டுள்ளது.

2022 டிசம்பரில், இந்தோனேசியாவில் இருந்து நாம் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, ஜி20 அமைப்பால் ஒரு மனநிலை மாற்றம் தூண்டப்பட வேண்டும் என்று நான் எழுதியிருந்தேன். வளரும் நாடுகள், உலகளாவிய தெற்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் விளிம்புநிலை விருப்பங்களை முதன்மைப்படுத்தும் சூழலில் இது முக்கியமாகத் தேவைப்பட்டது.

125 நாடுகளைச் சேர்ந்த உலகளாவிய தெற்கின் குரல் என்னும் உச்சிமாநாடு, நமது தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதன்மையான முன்முயற்சிகளில் ஒன்றாகும். உலகளாவிய தெற்கிலிருந்து உள்ளீடுகளையும், யோசனைகளையும் சேகரிப்பதற்கான ஒரு முக்கியமான பயிற்சியாக இது இருந்தது. மேலும், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பங்களிப்பை நமது தலைமைத்துவம் கண்டதோடு மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20-யின் நிரந்தர உறுப்பினராக சேர்க்கவும் வலியுறுத்தியுள்ளது

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகம் என்பது களங்களில் உள்ள நமது சவால்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதாகும். இது 2030 இலக்கின் நடுப்பகுதியாகும், மேலும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம் தடம் புரண்டுள்ளது என்று பலர் மிகுந்த கவலையுடன் குறிப்பிடுகின்றனர். நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஜி-20 2023 செயல் திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதை நோக்கிய ஜி-20 இன் எதிர்கால திசையை வழிநடத்தும்.

இந்தியாவில் பண்டைக்காலத்தில் இருந்தே இயற்கையுடன் இயைந்து வாழ்வது ஒரு நடைமுறையாக உள்ளது. நவீன காலத்திலும் கூட, பருவ நிலை செயல் திட்டத்திற்கு நமது பங்களிப்பை நாம் செய்து வருகிறோம்.

வளரும் நாடுகளில் பல வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவை பருவ நிலை செயல்திட்டத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். பருவ நிலை செயல்திட்டத்திற்கான விருப்பங்களை நிறைவேற்ற பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் இருக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எதை செய்யக்கூடாது என்பதில் கடுமையாக இருப்பதைவிட, எதை செய்ய வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான அணுகு முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

நீடிக்கவல்ல உறுதியான நீலப் பொருளாதாரத்திற்கு ஏற்ப நமது கடல்களின் தூய்மைத் தன்மையை பராமரிப்பதில் சென்னை உயர்நிலைக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன.

பசுமை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையத்துடன் நமது தலைமைத்துவத்தில் இருந்து, தூய்மையான பசுமை ஹைட்ரஜனுக்கான உலகளாவிய சூழல் அமைப்பு உருவாகும்.

2015-ல், நாம் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியைத் தொடங்கினோம். தற்போது உலகளாவிய உயிரி எரிபொருள்கள் கூட்டணி மூலம், சுழற்சிப் பொருளாதாரப் பயன்களுடன் உலக எரிசக்தி மாற்றத்திற்கு உலகளவில் நாம் ஆதரவாக இருப்போம்.

பருவ நிலை செயல்திட்டத்தை ஜனநாயப்படுத்துவது இந்த இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். தனிநபர்கள் தங்களின் நீண்ட கால ஆரோக்கியத்தின் அடிப்படையில் அன்றாட முடிவுகளை மேற்கொள்வது போல, இந்தப் புவிக் கோளின் ஆரோக்கிய அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை முறை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு உலகளாவிய மக்கள் திரள் இயக்கமாக யோகா மாறியிருப்பது போல், நீடிக்கவல்ல சூற்றுச்சூழலுக்கான வாழ்க்கை (லைஃப்) முறையுடனும் உலகத்தை நாம் உத்வேகப்படுத்தி வருகிறோம்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக உணவுப் மற்றும் சத்துணவு பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானதாக இருக்கும். இதற்கு சிறுதானியங்கள் அல்லது ஸ்ரீ அன்னா உதவியாக இருப்பதோடு பருவநிலைக்கு உகந்த வேளாண்மையையும் ஊக்கப்படுத்தும். சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டில் சிறுதானியங்களை நாம் உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்த இசை வடிவில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த உயர் நிலைக் கோட்பாடுகள் உதவிகரமாக உள்ளன.

தொழில்நுட்பம் மாற்றத்திற்கானதாக மட்டுமின்றி, அனைவரையும் உள்படுத்துவதற்கான தேவையாகவும் இருக்கிறது. கடந்த காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சமமான பயனை அளிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலையை அதிகப்படுத்துவதற்கு மாறாக, தொழில்நுட்பம் சமத்துவமின்மையை எவ்வாறு குறைக்கும் என்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

உதாரணமாக, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் வங்கிக் கணக்கு பெற்றிடாத நிலையில் அல்லது டிஜிட்டல் அடையாளங்கள் இல்லாத நிலையில், இந்தியாவில் டிஜிட்டலுக்கான பொதுக் கட்டமைப்பு மூலம் பொருளாதார ரீதியாக அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜி20 மூலம் அனைவரையும் உட்படுத்திய வளர்ச்சியின் அதிகாரத்தை அளிப்பதற்கு டிபிஐ முறையை வளரும் நாடுகளுக்கு நாம் வழங்கி உதவலாம்.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் என்பது தற்செயலானது அல்ல. நமது எளிய, அதிகப்படியான, நீடிக்கவல்ல தீர்வுகள் சாமானிய மக்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளன. நமது வளர்ச்சிக்கு நலிவடைந்த பிரிவு மக்கள் தலைமை தாங்குகிறார்கள். விண்வெளியில் இருந்து விளையாட்டுகள் வரை, பொருளாதாரத்தில் இருந்து தொழில் முனைவு வரை, இந்தியப் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள். பெண்களின் மேம்பாடு என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்பதற்கு மாறியிருக்கின்றனர். பாலின ரீதியிலான டிஜிட்டல் பாகுபாடுகளைக் குறைப்பதற்கும் தலைமைத்துவத்திலும் முடிவுகள் எடுப்பதிலும் பெண்களுக்கான பங்கினை அதிகரிப்பதற்கும் நமது ஜி20 தலைமைத்துவம் பாடுபட்டு வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜி20 தலைமைத்துவம் என்பது வெறும் உயர்நிலை ராஜ்ஜிய பதவி அல்ல. ஐனநாயகத்தின் அன்னை பன்முகத்தன்மையின் முன்மாதிரி என்ற நிலையில், இந்த அனுபவத்தின் கதவுகளை உலகத்திற்கு நாம் திறந்து வைத்துள்ளோம்.

இன்று அதிகளவிலான பொருட்களின் தரம் என்பது இந்தியாவோடு இணைந்ததாக இருக்கிறது. ஜி20 தலைமைத்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இது மக்கள் பங்கேற்புள்ள இயக்கமாக மாறியிருக்கிறது. நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 60 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நமது தலைமைப் பொறுப்பு நிறைவடையும் காலத்திற்குள் நடத்தப்பட்ட கூட்டங்களில் 125 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். எந்தவொரு தலைமைத்துவமும் இவ்வளவு பெரிய அளவில், பலதரப்பட்ட புவியியல் சூழலில் கூட்டங்களை நடத்தியதில்லை.

இந்தியாவின் மக்கள் தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் வளர்ச்சி குறித்து பலரும் பேசுவதைக் கேட்கமுடிகிறது. இவற்றை முதன் முறையாக அவர்கள் பேசுவது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கிறது. நமது ஜி20 பிரதிநிதிகள் இதற்கு சான்று என நான் உறுதியாக நம்புகிறேன்.

நமது ஜி20 தலைமைத்துவம் பாகுபாடுகளை இணைக்கவும், தடைகளை உடைக்கவும் பாடுபட்டுள்ளது. முரண்பாடுகளை நீக்கி ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், ஒத்துழைப்புக்கான விதைகளை நாம் விதைத்துள்ளோம். அனைவரின் குரலைக் கேட்பதையும், அனைத்து நாடுகளும் பங்களிப்பு செய்வதையும் உறுதிப்படுத்த ஜி20 தலைமைத்துவம் என்ற முறையில் உலகளாவிய பங்கேற்பை அதிகப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் வழியாக நமது உறுதிமொழியை நாம் இணைத்திருப்பதாக நான் நம்புகிறேன்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India’s services sector maintains strong momentum in May; job creation hits record high

Media Coverage

India’s services sector maintains strong momentum in May; job creation hits record high
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
ஒற்றுமையின் மகா கும்பமேளா – புதிய சகாப்தத்தின் விடியல்
February 27, 2025

புனித நகரமான பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் பிரம்மாண்டமான மகா யக்ஞம் நிறைவடைந்துள்ளது. ஒரு தேசத்தின் மனசாட்சி விழிப்படையும் போது, பல நூற்றாண்டு கால அடிமை மனோபாவ தழைகளை தகர்த்து சுதந்திரம் பெறும்போது அது புதுப்பிக்கப்பட்ட சக்தியின் தூய காற்றை சுதந்திரமாக சுவாசிக்கிறது. இதன் பயன் ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெற்ற ஒற்றுமையின் மகா கும்பமேளா கண் கூடாக தெரிந்தது.

|

அயோத்தியில் 2024 ஜனவரி 22 அன்று ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்தபோது, தெய்வ பக்தி மற்றும் தேசபக்தி பற்றி நான் பேசினேன். பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின்போது கடவுள்கள், பெண் தெய்வங்கள், துறவிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என வாழ்க்கையின் அனைத்துத் தரப்பினரும் ஒன்று கூடினர். இதில் தேசத்தின் மனசாட்சி விழிப்புற்றதை நாம் கண்டோம். இதுதான் ஒற்றுமையின் மகா கும்பமேளா. இந்த புனிதமான விழாவின் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் ஒன்று சேர்ந்தன.

இந்தப் புனிதமான பிரயாக்ராஜ் அருகே உள்ளது ஒற்றுமை, நல்லிணக்கம், அன்பு ஆகியவற்றின் புனித பூமியான ஷ்ரிங்வெர்பூர். இது பிரபு ஸ்ரீராமரும், நிஷாத்ராஜூம் சந்தித்த இடமாகும். இவர்களின் சந்திப்பு பக்தி, நல்லெண்ணம் ஆகியவற்றின் சங்கமத்தை அடையாளப்படுத்துகிறது. இன்றும் கூட அதே உணர்வுடன் பிரயாக்ராஜ் நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

|

45 நாட்களாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வருவதை நான் கண்ணுற்றேன். இந்த சங்கமத்தில் உணர்வலைகள் எழுந்தன. அனைத்து பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது என்ற ஒரே நோக்கத்துடன் வந்தனர். அனைத்து யாத்ரீகர்களின் ஆர்வம், சக்தி, நம்பிக்கை ஆகியவற்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் புனித சங்கமம் நிறைந்திருந்தது.

|

நவீன நிர்வாக தொழில்முறையாளர்கள், திட்டமிடுவோர், கொள்கை வகுக்கும் நிபுணர்கள் ஆகியோருக்கு ஆய்வுப் பொருளாக பிரயாக்ராஜின் மகா கும்பமேளா உள்ளது. இதற்கு நிகரானது அல்லது உதாரணம் உலகில் வேறெங்கும் இல்லை.

பிரயாக்ராஜில் உள்ள சங்கமித்த நதிகளின் கரைகளில் கோடிக்கணக்கான மக்கள் எவ்வாறு திரண்டனர் என்பதை உலகம் வியப்புடன் பார்த்தது. இவர்களுக்கு முறைபடியான அழைப்புகள் இல்லை, எப்போது செல்ல வேண்டும் என்பதற்கு முன்கூட்டிய தகவல் இல்லை. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த விருப்பத்துடன் மகா கும்பமேளாவுக்கு புறப்பட்டனர். புனித நதிகளில் நீராடுவதில் பேரின்பத்தை உணர்ந்தனர்.

|

புனித நீராடலுக்குப் பின் அவர்களின் முகங்களில் வெளிப்பட்ட ஆனந்தத்தையும், திருப்தியையும் என்னால் மறக்க இயலாது. பெண்கள், முதியவர்கள், நமது மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவரும் திரிவேணி சங்கமத்தை அடைவதற்கான வழியை கண்டறிந்தனர்.

|

குறிப்பாக, இந்தியாவின் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றதை காண்பது எனக்கு மனநெகிழ்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் இளைஞர்கள் நமது புகழ் பெற்ற கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற ஆழமான செய்தியை மகா கும்பமேளாவில் இளம் தலைமுறையினரின் பங்கேற்பு கொண்டு சென்றது. இதனை பாதுகாப்பது தங்களின் பொறுப்பு என புரிந்து கொண்டுள்ள அவர்கள், அதனை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளனர்.

மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் வருகை தந்த எண்ணற்ற மக்கள் ஐயத்திற்கு இடமின்றி புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். நேரடியாக வருகை தந்தவர்கள் தவிர பிரயாக்ராஜூக்கு வர இயலாத கோடிக்கணக்கான மக்களும் உணர்வுபூர்வமாக இதில் இணைந்துள்ளனர். யாத்ரீகர்களால் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட புனித நீர் லட்சக்கணக்கானவர்களின் ஆன்மீக இன்பத்தின் ஆதாரமாக மாறியுள்ளது. மகா கும்பமேளாவிலிருந்து வீடு திரும்பிய பலர், அவர்களின் கிராமங்களில் பெருமதிப்பைப் பெற்றனர். சமூகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

|

கடந்த சில வாரங்களாக நடைபெற்றவை முன்னெப்போதும் காணப்படாதவை என்பதோடு வரவிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளன.

பிரயாக்ராஜூக்கு இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்பதை எவரும் கற்பனை செய்யவில்லை. கும்பமேளாவின் முந்தைய அனுபவங்கள் அடிப்படையில் பக்தர்கள் வருகையை நிர்வாகம் மதிப்பீடு செய்தது.

ஒற்றுமையின் மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆர்வமிக்க பங்களிப்பை ஆன்மீக அறிஞர்கள் பகுப்பாய்வு செய்தால், இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொண்டிருப்பதையும் புதிய சக்தியுடன் இப்போது முன்னேறி வருவதையும் அறிவார்கள். இது புதிய சகாப்தத்தின் விடியல் என்று நான் நம்புகிறேன். இது புதிய இந்தியாவின் எதிர்காலத்தை பதிவு செய்யும்.

|

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய மனசாட்சியை மகா கும்பமேளா வலுப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பூர்ண கும்பமேளாவும் சமூகத்தில் அவர்களின் காலகட்டத்தில் திரண்ட ஞானிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பற்றி அறிந்துள்ளனர். அவர்களின் கருத்துக்கள் தேசத்திற்கும், சமூகத்திற்கும் புதிய திசை வழியை காட்டியுள்ளது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளிலும் அர்த் கும்பமேளாவின்போது இந்த சிந்தனைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 144 ஆண்டுகளில் 12 பூர்ண கும்பமேளாக்கள் வந்தபின் வழக்கொழிந்த பாரம்பரியங்கள் கைவிடப்படுகின்றன. புதிய சிந்தனைகள் ஏற்கப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப புதிய பாரம்பரியங்கள் உருவாக்கப்படுகின்றன.

144 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளாவில் நமது ஞானிகள் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் என்ற புதிய செய்தியை நமக்கு தந்துள்ளனர். அந்த செய்தி வளர்ச்சியடைந்த இந்தியா – விக்சித் பாரத்.

இந்த ஒற்றுமையின் மகா கும்பமேளாவில், ஏழை அல்லது பணக்காரர், இளையோர் அல்லது முதியோர், கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லது நகரத்தைச் சேர்ந்தவர், இந்தியாவை சேர்ந்தவர் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர், கிழக்கை சேர்ந்தவர் அல்லது மேற்கை சேர்ந்தவர், வடக்கை சேர்ந்தவர் அல்லது தெற்கை சேர்ந்தவர் என்ற பாகுபாடும் சாதி, மதம், சித்தாந்தம் என்ற பாகுபாடும் இல்லாமல் அனைத்து யாத்ரீகர்களும் ஒன்று சேர்ந்தனர். கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை நிறைத்துள்ள ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற தொலைநோக்கின் உருவகமாக இது இருந்தது. இப்போது இதே உணர்வுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும்.

|

ஒரு சம்பவத்தை நான் நினைவுகூர்கிறேன். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சிறுவனாக தனது தாய் யசோதாவுக்கு ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் தனது வாயில் காண்பித்தார். அதே போல் இந்த மகா கும்பமேளாவில் இந்தியாவின் கூட்டு பலத்தின் மொத்த ஆற்றலை இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள மக்கள் கண்டனர். இந்த தன்னம்பிக்கையுடனும், வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய அர்ப்பணிப்புடனும் இப்போது நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

முன்னதாக பக்தி இயக்கத்தின் ஞானிகள் நாடு முழுவதும் உள்ள நமது கூட்டு தீர்மானத்தின் பலத்தை கண்டறிந்து ஊக்கப்படுத்தினர். சுவாமி விவேகானந்தரில் இருந்து ஸ்ரீ அரவிந்தர் வரை ஒவ்வொரு மகா சிந்தனையாளரும் நமது கூட்டு தீர்மானத்தின் சக்தியை நமக்கு நினைவுபடுத்தியுள்ளனர். மகாத்மா காந்தியும் கூட, விடுதலை இயக்கத்தின் போது இதனை பரீட்சித்து பார்த்தார். சுதந்திரத்திற்குப் பின் இந்த கூட்டு பலம் சரியாக அங்கீகரிக்கப்பட்டு அனைவரின் நல்வாழ்வை அதிகரிப்பதை நோக்கி பயன்படுத்தப்பட்டிருந்தால் புதிய சுதந்திர தேசத்திற்கான மகத்தான சக்தியாக அது மாறியிருக்கும். துரதிருஷ்டவசமாக ஏற்கனவே இது செய்யப்படவில்லை. ஆனால் இப்போது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு மக்களின் கூட்டு சக்தி ஒன்று திரண்டு வருவதைக் காண நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

|

வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை, தொன்மையான நூல்கள் முதல் நவீன செயற்கைக்கோள்கள் வரை இந்தியாவின் மகத்தான பாரம்பரியங்கள் இந்த தேசத்தை வடிவமைத்துள்ளன. ஒரு குடிமகனாக, நமது மூதாதையர்கள் மற்றும் ஞானிகளின் நினைவுகளிலிருந்து புதிய ஊக்கம் பெற நான் பிரார்த்திக்கிறேன். இந்த ஒற்றுமையின் மகா கும்பமேளா புதிய தீர்மானங்களுடன் முன்னோக்கிச் செல்ல நமக்கு உதவட்டும். ஒற்றுமை என்பதை நமது வழிகாட்டும் கோட்பாடாக மாற்றுவோம். தேசத்திற்கான சேவை, தெய்வத்திற்கான சேவை என்ற புரிதலுடன் நாம் பணியாற்றுவோம்.

காசியில் எனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, “அன்னை கங்கை என்னை அழைத்தாள்” என்று நான் கூறியிருந்தேன். இது வெறும் உணர்ச்சிபூர்வமானதல்ல. நமது புனித நதிகளின் தூய்மையை நோக்கிய பொறுப்புக்கான அழைப்பாகும். பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமத்தில் நின்றபோது எனது தீர்மானம் மேலும் வலுவடைந்தது. நமது நதிகளின் தூய்மை, நமது சொந்த வாழ்க்கையோடு ஆழமான தொடர்புடையது. நமக்கு வாழ்க்கையை தரும் அன்னையர் என்ற முறையில் சிறியதோ, பெரியதோ நமது நதிகளை கொண்டாடுவது நமது பொறுப்பாகும். நமது நதிகளின் தூய்மைக்காக பணியாற்ற இந்த மகா கும்பமேளா நமக்கு ஊக்கமளித்துள்ளது.

|

இவ்வளவு பெரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வது எளிதான பணியல்ல என்பதை நான் அறிவேன். எங்களின் பக்தியில் ஏதாவது குறைபாடு இருந்தால் எங்களை மன்னியுங்கள் என்று அன்னை கங்கை, அன்னை யமுனை, அன்னை சரஸ்வதியிடம் நான் பிரார்த்திக்கிறேன். தெய்வீகத்தின் உருவமாக மக்களை நான் காண்கிறேன். அவர்களுக்கு சேவை செய்யும் எங்களின் முயற்சிகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் மக்களின் மன்னிப்பையும் நான் கோருகிறேன்.

பக்தி உணர்வோடு கோடிக்கணக்கான மக்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சேவை செய்வதும் ஒரு பொறுப்பாகும் என்ற பக்தி உணர்வோடு அது மேற்கொள்ளப்பட்டது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் யோகி அவர்களின் தலைமையின் கீழ், ஒற்றுமையின் மகா கும்பமேளாவை வெற்றிகரமாக்க நிர்வாகமும், மக்களும் ஒருங்கிணைந்து பாடுபட்டனர் என்று நான் பெருமிதத்துடன் கூற முடியும். மாநில அரசாக இருப்பினும், மத்திய அரசாக இருப்பினும் ஆட்சியாளர்களோ, நிர்வாகிகளோ அவற்றில் இல்லை. மாறாக ஒவ்வொருவரும் அர்ப்பணிக்கப்பட்ட சேவகர்கள். துப்புரவு தொழிலாளர்கள், காவல் துறையினர், படகோட்டுநர், ஓட்டுநர், மக்களுக்கு உணவு வழங்குவோர் என அனைவரும் ஓய்வின்றி உழைத்தனர். பல சிரமங்களை எதிர்கொண்ட போதும் திறந்த மனதுடன் யாத்ரீகர்கள் பிரயாக்ராஜ் மக்களால் வரவேற்கப்பட்டது ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர்களுக்கும், உத்தரப்பிரதேச மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

|

நமது நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தின் ஊசலாட்டமில்லாத நம்பிக்கையை நான் எப்போதும் கொண்டிருக்கிறேன். மகா கும்பமேளாவை காணும் போது எனது நம்பிக்கை பலமடங்கு வலுப்பட்டுள்ளது.

140 கோடி இந்தியர்கள் ஒற்றுமையின் மகா கும்பமேளாவை உலகளாவிய நிகழ்வாக மாற்றியிருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. நமது மக்களின் அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் முயற்சிகளால் நெகிழ்ந்துள்ள நான் விரைவில் 12 ஜோதிர் லிங்கங்களில் முதலாவதான ஸ்ரீ சோம்நாத் ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க உள்ளேன். அப்போது இந்த கூட்டான தேசிய முயற்சிகளின் பலன்களை அவருக்கு காணிக்கையாக்கி அனைத்து இந்தியர்களுக்கும் பிரார்த்தனை செய்ய உள்ளேன்.

நேரடி பங்கேற்பு வடிவத்தில் மகா கும்பமேளா மகா சிவராத்திரி அன்று வெற்றிகரமாக நிறைவடைந்த போதும், கங்கையின் நித்திய நீரோட்டம் போல் மகா கும்பமேளா ஏற்படுத்திய ஆன்மீக பலம், தேசிய மனசாட்சி, ஒற்றுமையின் விழிப்புணர்வு வரும் தலைமுறைகளுக்காக தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும்.