1980-லும், 1990 தொடக்கத்திலும், திரு.நரேந்திர மோடி, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தினிரிடையே(ஆர்.எஸ்.எஸ்.)  உயர்ந்து, பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) இணைந்த தருணம், சுதந்திர இந்தியா வரலாற்றின் மிக கடினமான காலகட்டமாகவும் இருந்தது. நாடு முழுதும் மோதல்கள் நிகழ்ந்து வந்த வேளையில், மத்திய அரசு இந்த ஒற்றுமையின்மையை ஒன்றும் செய்ய இயலாமல் கண்ணுற்றுவந்தது.  பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் மோதல்கள் ஏற்பட்டு, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பிற்கு சவாலாக அமைந்தது. உள்நாட்டிலும், பிரித்தாளும் அரசியல் நடைபெற்று வந்தது. குஜராத்தில், “ஊரடங்கு உத்தரவு’ என்பது பொதுவான வார்த்தையாக வீட்டு அகராதியில் மாறியது. வாக்கு-வங்கி அரசியல் என்பது நடைமுறையானதால், சகோதர், சகோதரருக்கு எதிராகவும், சமூகங்கள் சமூகங்களுக்கு எதிராகவும் மோதல் உண்டாக்கப்பட்டது,

ஜனநாயகம் மற்றும் சுதந்திர பேச்சுரிமை போன்ற பண்புகளுக்கு உறுதிகொண்ட ஒன்றுபட்ட மற்றும் வலிமையான பாரதம் என்ற பார்வை கொண்ட திரு.சர்தார் பட்டேலின் கனவிற்கேற்ப, இந்த தருணத்தில் எழுந்த மனிதர் தான் திரு. நரேந்திர மோடி. இந்த மாண்புகளுக்கு எதிரான போரில், நாட்டில் நிலவிய இருண்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.விற்காக சிறந்தமுறையிலும், கடுமையாகவும் உழைத்த திரு.நரேந்திர மோடியிடம் இருந்த நாட்டுப்பற்றை வெளிக்கொண்டு வந்தது. அது போன்று, இளவயதிலேயே அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்பான செயல்வீரர் என்பதையும், மிகச் சிறந்த ஏற்பாட்டாளர் என்பதையும் நிருபித்தார். இத்தருணத்தில் உயர்ந்து வந்த அவர், ஆரோக்கியமற்ற நிலைக்கு சவலாகவும் விளங்கினார்.

அகமாதபாத்தில் ஒற்றுமை யாத்திரையின்போது திரு.நரேந்திர மோடி 

1980-களின் முடிவில், ஒரு காலத்தில் ‘பூமியின் சொர்க்கம்’ என்றழைக்கப்பட்ட நாட்டின் வட மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீர், முழுமையான யுத்தகளமாக மாறியது. மத்திய அரசின் சந்தர்ப்பவாத அரசியலுடன், ஜனநாயகத்திற்கு மாறாக 1987-களில் நடைபெற்ற மாநில தேர்தல்களும் சேர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கான எளியதளமாக மாறியது. ஒரு காலத்தில் பூமியின் மிக அழகிய இடம் என்றழைக்கப்பட்ட பள்ளத்தாக்கு, தெருக்களில் சிந்திய ரத்தத்துளிகளால் யுத்த களமாக விரைவாக மாறிபோனது. காஷ்மீரில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றுவது கூட  தடை செய்யப்படும் அளவிற்கு நிலைமை கீழுக்கு போனது. தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசு ஒன்றும் செய்ய இயலாது கைகட்டி வேடிக்கை பார்த்தது.

1989-ல், மத்திய உள்துறை அமைச்சர் திரு.முப்தி முகமது சையத்தின் மகள், செல்வி.ரூபையா சையத் சில தேசத்திற்கு எதிரான சக்திகளால் கடத்தப்பட்டார். ஆனால், உறுதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக, புதுதில்லியில் இருந்த அரசு, இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகளை விடுவிக்கும் எளிதான முயற்சியை மேற்கொண்டதன் மூலம் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு ஊக்கத்தை அளிப்பதாக அமைந்தது.

இவ்வாறு இந்தியாவின் சுதந்திரத்தை படிப்படியாக குறைத்து வருவதை கண்டு பா.ஜ.க. மவுனமான பார்வையாளராக இருக்க முடியாது. இதை கூறிய திரு.ஷியாமா பிரசாத் முகர்ஜி காஷ்மீருக்கு சென்றபோது தான் தனது உயிரை இழந்தார். அதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு பிறகு, நாட்டின் ஒற்றுமை குறித்து பேசும் பொறுப்பு பா.ஜ.க.வின் மீது விழுந்தது. எதிர்பாராத சூழலுக்கு தீர்வாக, அப்போதைய கட்சித் தலைவர் டாக்டர்.முரளி மனோகர் ஜோஷி, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் ‘ஒற்றுமை யாத்திரை’ நடத்திட முடிவு செய்தார். இந்த யாத்திரை, சுவாமி விவேகானந்தர் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்த கன்னியாகுமரியில் துவங்கி, ஸ்ரீநகரில் மூவர்ண கொடியை ஏற்றுவதோடு நிறைவு பெறுவதாக இருந்தது.

இந்த யாத்திரைக்கு தயார் செய்யும் பணி, ஏற்பாட்டு திறன்களுக்கு பெயர் பெற்ற திரு.நரேந்திர மோடியின் தோள்களில் விழுந்தது; தனது அறிவு, ஏற்பாட்டு வலிமை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மூலம், அவர் குறுகிய காலத்தில், பெரிய சவால்களையும் மீறி, மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்தார். அவர் துணிச்சலாக, யாத்திரை செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று, கட்சியினரை சந்தித்தார்.

அவர் கட்சியினருக்கு உணர்வூட்டி, அவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தியதன் மூலம் யாத்திரையின் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார். இதில், அவர் சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்பதை மட்டுமல்லாமல், இன்றைய பொதுவாழ்வில் மிக அரிதாக காணப்படும், எந்த சூழலிலும் விரைவாக செயல்படும் திறமையையும் வெளிப்படுத்தினார். கடினமான சூழ்நிலைகளிலும் விரைவான முடிவுகளை எடுக்கும் திறனை திரு.மோடி பெற்றதோடு, தாம் முடிவெடுத்ததை செயல்படுத்தும் திறன் கொண்ட ஒருவராகவும் விளங்கினார்

ஒற்றுமை யாத்திரையின்போது திரு.நரேந்திர மோடி 

சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள் மற்றும் குரு தேக் பகதூரின் ‘தியாக தினம்’  ஆன 1991, டிசம்பர், 11 அன்று ஒற்றுமை யாத்திரை துவங்கியது. பிரித்தாளும் மற்றும் வன்முறை அரசியலுக்கு எதிராகவும், காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது போன்ற முக்கிய பிரச்சினைகள் நாடு முழுவதிலும் எழுப்பப்பட்டது.

சென்ற இடங்களில் எல்லாம் திரு.மோடி அவர்கள், திரு.ஷியாமா பிரசாத் முகர்ஜியின் செய்தியை எதிரொலிக்கும் வண்ணம், அனைத்திற்கும் மேலாக நாட்டின் ஒற்றுமை மேலானது என்றும், சமூகத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு பல்வேறு நடைமுறைகள் என்பதில் நம்பிக்கையில்லை என்றும் தெரிவித்தார். தற்போது நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு தகுந்த பக்க அளிப்பதே தேவையாகும். அந்நேரம் வரும்போது திரு.மோடி அதற்கு தலைமையேற்பார்! ஒற்றுமை யாத்திரை சென்ற இடம் எங்கும் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர். ஜோஷி நாட்டின் மீள்உருவாக்கத்திற்கான தேவையை வலியுறுத்தியது, இந்திய மக்களிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தியது.

தில்லியில் கண்டு கொள்ளாமல் இருந்த காங்கிரஸ் அரசிற்கு ஒற்றுமை யாத்திரை போன்ற கண்ணை திறக்க வைத்ததாக வேறு ஏதும் இருந்திருக்க முடியாது. யாத்திரையின் முன்னேற்றம், ஒருங்கிணைப்பு திறனை வெளிப்படும் வகையில் அமைந்ததால், யாத்திரையின் வெற்றி திரு.நரேந்திர மோடிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்தது என்பதை கூறவே தேவையில்லை. திரு.மோடி அவர்கள், போலி-மதசார்பின்மை மற்றும் வாக்கு-வங்கி அரசியலுக்கு எதிராக இந்திய மக்கள் போராடுமாறு வலியுறுத்தினார். 1992, ஜனவரி, 26 அன்று ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதை உணர்ச்சியுற்ற திரு.நரேந்திர மோடி மகிழ்வுடன் கண்டுகளித்தார்! இந்த அரிய தேசிய இயக்கத்தை மிகுந்த சவாலான தருணங்களை எதிர்கொண்டு வெற்றிகரமான நிறைவேற்றியது திரு.மோடி அவர்கள் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக தன்னிகரற்ற வீரம், பார்வை, திறன் ஆகியவற்றுக்கு சான்றாக விளங்கியது, பாரத மாதாவிற்கு எதிரான சக்திகளை முயற்சிகளை அழிக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியது போல் அமைந்தது.

  • AmpiliJayaprakash February 13, 2025

    🙏👍
  • Govind Ram January 28, 2025

    जय हिंद
  • krishangopal sharma Bjp January 06, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷
  • krishangopal sharma Bjp January 06, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
  • krishangopal sharma Bjp January 06, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
  • Rahul Naik December 07, 2024

    🙏🙏
  • Chhedilal Mishra December 01, 2024

    Jai shrikrishna
  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • Devendra Kunwar October 08, 2024

    BJP
  • manvendra singh September 27, 2024

    जय हिन्द जय भारत वंदेमातरम
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's Q3 GDP grows at 6.2%, FY25 forecast revised to 6.5%: Govt

Media Coverage

India's Q3 GDP grows at 6.2%, FY25 forecast revised to 6.5%: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.