பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
திரு அரவிந்த் ஸ்ரீனிவாஸின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உங்களுடனான சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு, அதன் பயன்பாடுகள், அதன் பரிணாம வளர்ச்சி பற்றி விவாதித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நீங்கள் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (@perplexity_ai) நிறுவனத்தின் மூலம் சிறந்த பணிகளைச் செய்வதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
Was great to meet you and discuss AI, its uses and its evolution.
— Narendra Modi (@narendramodi) December 28, 2024
Good to see you doing great work with @perplexity_ai. Wish you all the best for your future endeavors. https://t.co/kD8d9LMorC