
Prime Minister meets with the President of Brazil
July 09th, 06:02 am
In Brasilia, PM Modi met the Brazilian President Lula and discussed all aspects of the multifaceted Strategic Partnership between India and Brazil. The leaders discussed cooperation in many areas and set a target to increase bilateral trade to USD 20 billion over the next five years. Both leaders also exchanged views on regional and global issues of mutual interest and signed six MoUs.
India–Brazil partnership stands as an important pillar of stability and balance: PM Modi
July 08th, 08:30 pm
In his remarks during the press meet, PM Modi thanked Brazilian President Lula for conferring Brazil's highest national award upon him. He wished India–Brazil relations to be as vibrant as Carnival, as passionate as football, and as heart-connecting as Samba. The PM affirmed that as two major democracies, India - Brazil cooperation is not only relevant to the Global South, but also to all of humanity.
PM Modi’s remarks during the BRICS session: ‘Peace and Security and Reform of Global Governance’
July 06th, 09:41 pm
PM Modi underscored how the Global South has long been sidelined—offered mere “token gestures” on crucial issues like climate finance, sustainable development, technology access, and security—while lacking genuine representation in key global institutions. He praised the expansion of BRICS under Brazil’s leadership, called for genuine reforms in bodies like the UN Security Council, WTO, and development banks, and emphasized the need for a modern, inclusive world order fit for the 21st century.The diversity and multipolarity of the BRICS Group is our greatest strength: PM Modi
July 06th, 09:40 pm
PM Modi participated in the 17th BRICS Summit held in Rio de Janeiro, Brazil and addressed two sessions. Highlighting that the global organizations of the 20th century lacked the capacity to deal with the challenges of the 21st century, the PM underscored the need for reforming them. He offered his suggestions on BRICS New Development Bank, Science and Research repository, critical minerals and AI.Prime Minister participates in the 17th BRICS Summit in Rio de Janeiro, Brazil
July 06th, 09:39 pm
PM Modi participated in the 17th BRICS Summit held in Rio de Janeiro, Brazil and addressed two sessions. Highlighting that the global organizations of the 20th century lacked the capacity to deal with the challenges of the 21st century, the PM underscored the need for reforming them. He offered his suggestions on BRICS New Development Bank, Science and Research repository, critical minerals and AI.டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
July 04th, 05:56 am
இந்த மாலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் திருமதி. கமலா அவர்களின் அற்புதமான உபசரிப்பு மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.பிரதமர் திரு. நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் உரையாற்றினார்
July 04th, 04:40 am
டிரினிடாட் - டொபாகோ நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டுக் குடியரசின் பிரதமர் திருமதி கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை இந்திய வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றதுடன், இந்தோ-டிரினிடாடியன் பாரம்பரிய முறைப்படி வண்ணமயமான வரவேற்பும் அளித்தனர்.கானா குடியரசின் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
July 03rd, 03:45 pm
ஜனநாயகம், கண்ணியம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு நிலமான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 1.4 பில்லியன் இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துகளையும் நான் என்னுடன் கொண்டு வருகிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
July 03rd, 03:40 pm
கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர் திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை இது பிரதிபலித்தது.சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
June 28th, 08:24 pm
இப்போது நீங்கள் தாய்நாடான, பாரத பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் பெயரில் மங்களம் இருக்கிறது. உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். இந்த நேரத்தில், நாம் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அனைத்து இந்தியர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என் குரல் பிரதிபலிக்கிறது. விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே முதலில் சொல்லுங்கள். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?பிரதமர் திரு நரேந்திர மோடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் உரையாடினார்
June 28th, 08:22 pm
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியரான இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். சுபன்ஷு சுக்லா தற்போது இந்திய தாய்நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், அவர் அனைத்து இந்தியர்களின் இதயங்களுக்கும் மிக நெருக்கமானவர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சுபன்ஷுவின் பெயரே மங்களகரமானது என்றும், அவரது பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான உரையாடலாக இருந்தாலும், அது 140 கோடி இந்தியர்களின் உணர்ச்சிகளையும் உற்சாகத்தையும் உள்ளடக்கியது என்று திரு. மோடி கூறினார். சுபன்ஷுவுடன் பேசிய குரல், முழு நாட்டின் கூட்டு ஆர்வத்தையும் பெருமையையும் சுமந்து சென்றதாகவும், விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக சுபன்ஷுவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சுபன்ஷுவின் நல்வாழ்வு குறித்தும், விண்வெளி நிலையத்தில் எல்லாம் சரியாக உள்ளதா என்றும் திரு. மோடி விசாரித்தார்.Prime Minister Narendra Modi to visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil, and Namibia
June 27th, 10:03 pm
PM Modi will visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil and Namibia from July 02-09, 2025. In Ghana, Trinidad & Tobago and Argentina, the PM will hold talks with their Presidents to review the strong bilateral partnership. In Brazil, the PM will attend the 17th BRICS Summit 2025 and also hold several bilateral meetings. In Namibia, PM Modi will hold talks with the President of Namibia and deliver an address at the Parliament of Namibia.இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் வரவேற்றுள்ளார்
June 25th, 01:30 pm
இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதலாவது இந்திய விண்வெளி வீரரான குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஸ்ரீ நாராயண குருவுக்கும் காந்திஜிக்கும் இடையிலான உரையாடல் பற்றிய நூற்றாண்டு விழா கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 24th, 11:30 am
பிரம்மரிஷி சுவாமி சச்சிதானந்தா அவர்களே, ஸ்ரீமத் ஸ்வாமி சுபங்கா-நந்தா அவர்களே சுவாமி சாரதானந்தா அவர்களே, அனைத்து மரியாதைக்குரிய துறவிகளே, மத்திய அரசில் எனது நண்பர் திரு ஜார்ஜ் குரியன் அவர்களே, பாராளுமன்றத்தில் எனது நண்பர் திரு அடூர் பிரகாஷ் அவர்களே, இதர மூத்த பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே.ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி இருவருக்கிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 24th, 11:00 am
இந்தியாவின் மகத்தான ஆன்மிக மற்றும் அறநெறித் தலைவர்களான ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் குறித்து புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் அனைவருக்கும் தமது மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு இன்று இந்த அரங்கம் முன்னெப்போதும் இல்லாத தேசத்தின் வரலாற்றுத் தருணத்தைக் காண்கிறது என்றார். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய திசையைக் காட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சுதந்திரத்தின் நோக்கங்களுக்கு வலுவான அர்த்தத்தையும், சுதந்திர இந்தியாவின் கனவையும் எடுத்துரைப்பதாக இருந்தது என்று அவர் கூறினார். “நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ நாராயண குருவுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையேயான சந்திப்பு இன்றும் ஊக்கமளிப்பதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது. மேலும் சமூக நல்லிணக்கத்திற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் கூட்டான இலக்குகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்திமிக்க ஆதாரமாக திகழ்கிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஸ்ரீ நாராயண குருவின் பாதங்களில் பணிந்து மரியாதை செலுத்திய அவர் மகாத்மா காந்திக்குப் புகழாரம் சூட்டினார்.குரோஷியா பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
June 18th, 09:56 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அழகான நகரமான ஜாக்ரெப்பில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாகம் மற்றும் அன்பிற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பராகுவே அதிபருடனான பிரதிநிதிகள் நிலையிலான பேச்சு வார்த்தைகளின் போது பிரதமரின் தொடக்க உரை
June 02nd, 03:00 pm
இந்தியாவிற்கு உங்களையும் உங்கள் குழுவினரையும் நாங்கள் மிகவும் அன்புடன் வரவேற்கிறோம். தென் அமெரிக்காவில் பராகுவே ஒரு முக்கியமான கூட்டாளியாகும். நமது புவியியல் வேறுபட்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே மாதிரியான ஜனநாயக விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்கிறோம்.தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
May 11th, 02:32 pm
தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.05.2025) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கும் நாள் இது என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, 1998-ம் ஆண்டு பொக்ரான் சோதனையை நினைவு கூர்ந்துள்ளார். அறிவியல் ஆராய்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான அரசின் முயற்சிகளை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 07th, 12:00 pm
புகழ்பெற்ற பிரதிநிதிகள், மதிப்பிற்குரிய விஞ்ஞானிகள், புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நண்பர்களே,பிரதமர் திரு நரேந்திர மோடி விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில்(கிளெக்ஸ்-2025) உரையாற்றினார்
May 07th, 11:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.05.2025) காணொலிக் காட்சி மூலம் உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடான ஜிஎல்இஎக்ஸ் (GLEX) - 2025-ல் உரையாற்றினார். உலகெங்கிலும் இருந்து வந்திருந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களை வரவேற்ற அவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணங்கள் குறித்து எடுத்துரைத்தார். விண்வெளி என்பது வெறும் ஒரு இலக்கு மட்டுமல்ல எனவும், ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம் என்றும் அவர் கூறினார். 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை செலுத்தியதில் இருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது வரை இந்தியாவின் விண்வெளி சாதனைகள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்திய ராக்கெட்டுகள் சாதனங்களை மட்டுமல்லாமல் அவை 140 கோடி இந்தியர்களின் கனவுகளையும் சுமந்து செல்கின்றன என்று அவர் குறிப்பிட்டார், இந்தியாவின் விண்வெளி முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அறிவியல் மைல்கற்கள் எனவும் மனித உணர்வுகள் ஈர்ப்பு விசையை மீற முடியும் என்பதற்கான சான்றுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். 2014-ல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்தியாவின் வரலாற்று சாதனையை அவர் நினைவு கூர்ந்தார். சந்திரயான்-1 சந்திரனில் தண்ணீரைக் கண்டறிய உதவியது என அவர் கூறினார். சந்திரயான்-2 சந்திரனின் மேற்பரப்பின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கியது என்றும் சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா சாதனை நடவடிக்கையாக குறைந்த நேரத்தில் கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கியது எனவும் ஒரே பயணத்தில் 100 செயற்கைக்கோள்களைச் செலுத்தியது என்றும், இந்திய ஏவுதள வாகனங்களைப் பயன்படுத்தி 34 நாடுகளுக்கு 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியது என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய படியாகும் என்றும் இது இந்தியாவின் சமீபத்திய சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.