
மகாவீர் பிறந்தநாளை முன்னிட்டு பகவான் மகாவீரருக்கு பிரதமர் மரியாதை
April 10th, 08:44 am
மகாவீர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகவான் மகாவீரருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பகவான் மகாவீரர் எப்போதும் அகிம்சை, உண்மை, கருணை ஆகியவற்றை வலியுறுத்தி வந்தவர் என்றும், அவரது கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு வலிமையை அளிக்கின்றன என்றும் திரு மோடி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை அரசு வழங்கியதாகவும், அந்த முடிவு பலரது பாராட்டைப் பெற்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
October 03rd, 09:38 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. செம்மொழிகள் பாரதத்தின் ஆழமான மற்றும் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தின் அரணாக செயல்படுகின்றன, ஒவ்வொரு சமூகத்தின் வரலாறு மற்றும் கலாச்சார மைல்கல்லின் சாரத்தை உள்ளடக்கியுள்ளன.