Today, India's youth are demonstrating our immense potential to the world, through their dedication and innovation: PM Modi in Rozgar Mela

Today, India's youth are demonstrating our immense potential to the world, through their dedication and innovation: PM Modi in Rozgar Mela

April 26th, 11:23 am

PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to youth. He highlighted that the government is ensuring employment and self-employment opportunities for the country's youth. The PM spoke about the immense opportunity WAVES 2025 summit offers for the youth. He recalled the mantra of ‘Nagrik Devo Bhava,’ and encouraged youth to serve every citizen of India.

PM Modi addresses Rozgar Mela

PM Modi addresses Rozgar Mela

April 26th, 11:00 am

PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to youth. He highlighted that the government is ensuring employment and self-employment opportunities for the country's youth. The PM spoke about the immense opportunity WAVES 2025 summit offers for the youth. He recalled the mantra of ‘Nagrik Devo Bhava,’ and encouraged youth to serve every citizen of India.

Together, let us build a Resilient, Revolutionary and Steel-Strong India: PM Modi at the India Steel 2025

Together, let us build a Resilient, Revolutionary and Steel-Strong India: PM Modi at the India Steel 2025

April 24th, 02:00 pm

At India Steel 2025, PM Modi called the steel sector the foundation of a developed India, remarking, “Steel has played a pivotal role in modern economies, akin to a skeleton.” He stressed its role in building infrastructure and powering growth. Highlighting the road ahead, he said the future of steel will be shaped by AI, mation, recycling, and by-product utilization, urging innovation for a stronger, self-reliant India.

PM Modi addresses the India Steel 2025 programme

April 24th, 01:30 pm

At India Steel 2025, PM Modi called the steel sector the foundation of a developed India, remarking, “Steel has played a pivotal role in modern economies, akin to a skeleton.” He stressed its role in building infrastructure and powering growth. Highlighting the road ahead, he said the future of steel will be shaped by AI, mation, recycling, and by-product utilization, urging innovation for a stronger, self-reliant India.

தற்சார்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் உலகத் தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு பிரதமர் பாராட்டு

April 01st, 07:35 pm

பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு மற்றும் உலகத் தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 28th, 08:00 pm

டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 28th, 06:53 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

ரிபப்ளிக் தொடக்க உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரை

March 06th, 08:05 pm

நீங்கள் அனைவரும் சோர்வாக இருப்பீர்கள், அர்னாப்பின் உரத்த குரலைக் கேட்டு உங்கள் காதுகள் சோர்வடைந்திருக்கும், உட்காருங்கள் அர்னாப், இது இன்னும் தேர்தல் காலம் அல்ல. முதலாவதாக, இந்த புதுமையான பரிசோதனைக்காக ரிபப்ளிக் தொலைக்காட்சியை நான் பாராட்டுகிறேன். அடிமட்ட அளவில் இளைஞர்களை ஈடுபடுத்தி, இவ்வளவு பெரிய போட்டியை ஏற்பாடு செய்ததன் மூலம் நீங்கள் அவர்களை இங்கு அழைத்து வந்துள்ளீர்கள். நாட்டின் இளைஞர்கள் தேசிய விவாதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது, சிந்தனைகளில் புதுமை ஏற்படுகிறது. அது ஒட்டுமொத்த சூழலுக்கும் ஒரு புதிய சக்தியை நிரப்புகிறது. இந்த நேரத்தில் நாம் இங்கே அந்த சக்தியை உணர்கிறோம். அடைய முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை. இந்த உச்சிமாநாட்டிற்காக ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒரு புதிய கருத்தை உருவாக்கியுள்ளது. இந்த உச்சிமாநாட்டின் வெற்றிக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். சரி, எனக்கும் இதில் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது. ஒன்று, கடந்த சில நாட்களாக நான் ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து வருகிறேன். ஒரு லட்சம் பேர் தங்கள் குடும்பங்களில் முதல் முறையாக வருபவர்கள், எனவே ஒரு வகையில், இதுபோன்ற நிகழ்வுகள் எனது இந்த நோக்கத்திற்கான அடித்தளத்தைத் தயார் செய்கின்றன.

ரிபப்ளிக் உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

March 06th, 08:00 pm

புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ரிபப்ளிக் உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், அடிமட்ட அளவில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க ஹேக்கத்தான் போட்டியை ஏற்பாடு செய்வதற்கும் புதுமையான அணுகுமுறையை ரிபப்ளிக் டிவி மேற்கொண்டதற்காகப் பாராட்டு தெரிவித்தார். நாட்டின் இளைஞர்கள் தேசிய விவாதத்தில் ஈடுபடும்போது, அது சிந்தனைகளுக்கு புதுமையைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த சூழலையும் தங்கள் சக்தியால் நிரப்புகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆற்றல் உச்சிமாநாட்டில் உணரப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் ஈடுபாடு அனைத்துத் தடைகளையும் உடைத்து, எல்லைகளைக் கடந்து செல்ல உதவுகிறது. ஒவ்வொரு இலக்கையும் அடையக்கூடியதாகவும் ஆக்குகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த உச்சிமாநாட்டிற்காக ஒரு புதிய கருத்தை உருவாக்கியதற்காக ரிபப்ளிக் டிவிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், அதன் வெற்றிக்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை இந்திய அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தமது யோசனையை திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி குறித்த உயர்நிலைக் ஆய்வுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது

March 06th, 05:30 pm

கூட்டுறவுத் துறையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வாயிலாக மாற்றத்தைக் கொண்டுவரும் கூட்டுறவுத் துறை மூலம் வளம் என்ற நடைமுறையை ஊக்குவிக்கவும் அத்துறையில், இளைஞர்கள், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் மத்திய கூட்டுறவு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் ஆற்றிய உரை

March 04th, 01:00 pm

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்த இந்த பட்ஜெட் இணையவழி கருத்தரங்கு ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் முக்கியமானது. உங்களுக்குத் தெரியும். இந்த பட்ஜெட் நமது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதலாவது முழு பட்ஜெட் ஆகும். நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட பல துறைப்பிரிவுகளில்அரசு பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதை நீங்கள் பட்ஜெட்டில் பார்த்திருப்பீர்கள். உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக பட்ஜெட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 04th, 12:30 pm

பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இணைய கருத்தரங்குகள் வளர்ச்சியின் எந்திரங்களாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை எடுத்துக் கொண்டு நடத்தப்படுகின்றன. வளர்ச்சியின் உற்பத்தி, ஏற்றுமதி, அணுசக்தி இயக்கங்கள்; ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உற்பத்தி, ஏற்றுமதி குறித்து நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையகருத்தரங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். இந்த வரவு செலவுத் திட்டம்(பட்ஜெட் )அரசின் 3-வது பதவிக்காலத்தின் முதலாவது முழு வரவு செலவுத் திட்டம் என்று குறிப்பிட்ட அவர், இந்த வரவு செலவுத் திட்டத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் விநியோகம் என்றும் இது எதிர்பார்ப்புகளுக்கு மேலானது என்றும் தெரிவித்தார். பல துறைகளில், நிபுணர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் இன்று (மார்ச் 4) பட்ஜெட்டுக்கு பிந்தைய மூன்று இணையவழி கருத்தரங்குகளில் பங்கேற்கிறார்

March 03rd, 09:43 pm

பட்ஜெட்டுக்கு பிந்தைய மூன்று இணையவழிக் கருத்தரங்குகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) நண்பகல் 12.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்கிறார். இந்த இணையவழிக் கருத்தரங்குகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் குறித்து நடைபெறவுள்ளன. உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அணுசக்தி இயக்கங்கள், ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் குறித்து கருத்தரங்கங்களில் விவாதிக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 01st, 01:00 pm

பட்ஜெட்டுக்குப் பிறகு, பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் உங்களது பங்கேற்பு மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சியில் இணைந்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டின் பட்ஜெட் எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை எங்களது கொள்கைகளின் தொடர்ச்சியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது. பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நீங்கள் அனைவரும் அளித்த உள்ளீடுகள், ஆலோசனைகள் பட்ஜெட் தயாரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தை மிகவும் திறம்பட செயல்படுத்துவதிலும், சிறந்த, விரைவான பயன்களைப் பெறுவதிலும், உங்கள் பங்கு மேலும் அதிகரித்துள்ளது.

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 01st, 12:30 pm

வேளாண்மை, கிராமப்புற வளம் ஆகியவை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (01.03.2025) உரையாற்றினார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த கருத்தரங்கில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்த ஆண்டின் பட்ஜெட் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் என்பதை எடுத்துரைத்தார், இது கொள்கைகளின் தொடர்ச்சியையும் வளர்ச்சி அடைந்த பாரத்திற்கான பார்வையின் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். பட்ஜெட்டுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் மதிப்புமிக்க உள்ளீடுகள், ஆலோசனைகள் ஏற்கப்பட்டதாகவும் அவை மிகவும் உதவிகரமாக இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை மேலும் சிறப்பானதாக மாற்றுவதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கு மேலும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 01st, 11:00 am

ஐடிவி நெட்வொர்க் நிறுவனரும் நாடாளுமன்றத்தில் எனது சகாவுமான கார்த்திகேய சர்மா அவர்களே, இந்த நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த குழுவினரே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களே, தாய்மார்களே வணக்கம். நியூஸ் எக்ஸ் வேர்ல்டின் மங்களகரமான தொடக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று, இந்தி, ஆங்கிலம் உட்பட உங்கள் நெட்வொர்க்கின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளும் உலக அளவில் செல்கின்றன.

என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

March 01st, 10:34 am

கடந்த காலங்களில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும், ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இப்போது ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த சாதனைக்காக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இதன் உச்சிமாநாடு, கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தியது என்றும், அரசியலை மையமாகக் கொண்டு ஒப்பிடும்போது கொள்கைகள் மையமாக இருந்தன ன்றும் அவர் கூறினார். இந்த உச்சிமாநாடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு புதுமையான மாதிரியில் பணியாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், மற்ற ஊடக நிறுவனங்கள் இந்த போக்கையும் வார்ப்புருவையும் தங்கள் சொந்த புதுமையான வழிகளில் வளப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 24th, 02:35 pm

மேஹி மகரிஷி தவம் செய்த இடமாகவும், உலகப் புகழ்பெற்ற விக்ரமசீலா மகாவிகார் அமைந்துள்ள வசுபூஜ்ய பூமியிலிருந்தும், பாபா புத்தநாதரின் புனித பூமியிலிருந்தும் வந்துள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள்!

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை விடுவித்து, பீகார் மாநிலம் பாகல்பூரில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

February 24th, 02:30 pm

இன்று இந்த நிகழ்ச்சியில் பீகார் மண்ணில் 10,000-வது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், நாடு முழுவதிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

பாரத் டெக்ஸ் 2025 வர்த்தகக் கண்காட்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 16th, 04:15 pm

எனது அமைச்சரவை சகாக்கள் திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு பபித்ர மார்கரிட்டா அவர்களே பல்வேறு நாடுகளின் மதிப்புமிகு துதர்களே, தூதரக மூத்த அதிகாரிகளே, மத்திய மாநில அரசு அதிகாரிகளே, ஆடை அலங்காரம் மற்றும் ஜவுளி உலகின் புகழ்பெற்ற ஆளுமைகளே, தொழில்முனைவோர்களே, மாணவர்களே, எனதருமை நெசவாளர்களே, கைவினைக் கலைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!