பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம்: இந்த பயணம் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது மற்றும் AI ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியது.

பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம்: இந்த பயணம் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது மற்றும் AI ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியது.

February 13th, 03:06 pm

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான சமீபத்திய இராஜதந்திர சுற்றுப்பயணம் இந்தியாவின் உலகளாவிய கூட்டணிகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது, செயற்கை நுண்ணறிவு (AI), பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வரலாற்று உறவுகளை மதிக்கிறது. இந்த விரிவான வருகை பொறுப்பான AI மேம்பாடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை ஆழமாக்குதல் ஆகியவற்றுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

PM Modi and President of France jointly inaugurate the Consulate General of India in Marseille

PM Modi and President of France jointly inaugurate the Consulate General of India in Marseille

February 12th, 05:29 pm

PM Modi and President Emmanuel Macron inaugurated the Consulate General of India in Marseille. The new Consulate will boost economic, cultural, and people-to-people connections across four French regions. PM Modi deeply appreciated President Macron’s special gesture, as both leaders received a warm welcome from the Indian diaspora.

பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் மசார்குஸ் போர் நினைவிடத்தைப் பார்வையிட்டனர்

பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் மசார்குஸ் போர் நினைவிடத்தைப் பார்வையிட்டனர்

February 12th, 04:57 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரானும் இன்று காலை மார்சேயில் உள்ள மசார்குஸ் போர் நினைவிடத்திற்குச் சென்று முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். உயிர்நீத்த வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இரு தலைவர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்கள்.

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

February 12th, 03:24 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை

February 12th, 03:22 pm

பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள், கல்வித்துறை பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடினர். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறை பொது நலனுக்காக நன்மை பயக்கும் என்பதையும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு நல்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். பிரான்சின் செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடி, அதிபர் மக்ரோனை வாழ்த்தினார். அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை பிரான்ஸ் வரவேற்றது.

பாரிஸில் நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள்

February 12th, 12:45 am

இந்த அறையில் ஒரு அற்புதமான ஆற்றல், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பை நான் உணர்கிறேன். இது ஒரு சாதாரண வணிக நிகழ்வு மட்டுமல்ல.

14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

February 12th, 12:25 am

பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மன்றத்தில் ஒன்று கூடினர்.

பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிறைவுரை

February 11th, 05:35 pm

இன்றைய விவாதங்கள் ஒரு அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளன – தொலைநோக்குப் பார்வையிலும் பங்குதாரர்களின் நோக்கத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை

February 11th, 03:15 pm

உங்கள் மருத்துவ அறிக்கையை செயற்கை நுண்ணறிவு செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியத்தின் நிலைமையை எந்த தொழில்நுட்ப சொற்களும் இல்லாமல் எளிய மொழியில் விளக்கிச் சொல்ல முடியும். ஆனால், அதே செயலியில் யாரோ ஒருவர் தனது இடது கையால் எழுதும் படத்தை வரையச் சொன்னால், அந்தச் செயலி பெரும்பாலும் வலது கையால் எழுதும் ஒருவரை வரைந்துவிடும். ஏனெனில் அதுதான் பயிற்சி தரவுகளின் ஆதிக்கமாகும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி பாரிஸில் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்கினார்

February 11th, 03:00 pm

பாரீசில் இன்று செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோனுடன் இணைந்து தலைமை தாங்கினார். பிப்ரவரி 6-7 இல் அறிவியல் தினங்களுடன் தொடங்கிய ஒரு வார கால உச்சிமாநாடு, பிப்ரவரி 8-9 அன்று கலாச்சார வார இறுதியுடன், உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட நிலையுடன் நிறைவடைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

February 10th, 10:30 pm

பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் பாரிஸ் சென்றடைந்தார். அங்கு வந்த அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பேச்சு நடத்துவார், AI உச்சி மாநாடு மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.

பிரான்ஸ், அமெரிக்க பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

February 10th, 12:00 pm

அதிபர் மேக்ரோனின் அழைப்பையடுத்து, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இணைத்தலைமை தாங்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். அங்கு புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறோம்.

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மற்றும் அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

January 27th, 11:06 am

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர் திரு மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார் பிரதமர்

December 17th, 05:19 pm

பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவிற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்சுடன் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் தலைமையின் கீழ், பிரான்ஸ் இந்த துயரத்தை உறுதியுடன் சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 19th, 05:26 am

இந்தச் சந்திப்பின் போது, இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டையும், ஹொரைசன் 2047 செயல்திட்டம் மற்றும் பிற இருதரப்பு பிரகடனங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை குறித்த பகிரப்பட்ட தொலைநோக்கையும் இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். பாதுகாப்பு, விண்வெளி மற்றும் சிவில் அணுசக்தி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர்கள், பாதுகாப்பு சுயாட்சி குறித்த தங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் அதை மேலும் துரிதப்படுத்த உறுதி பூண்டனர். இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத் திட்டத்தில் ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

August 15th, 09:20 pm

பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

June 14th, 03:45 pm

இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானும் இன்று (14.06.2024) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடிக்கு திரு இம்மானுவேல் மேக்ரோன் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், அதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க வகையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்து

June 06th, 03:02 pm

பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோன் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். தொடர்ந்து 3-வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்துத் தெரிவித்தார். அதற்கு அதிபர் மேக்ரோனிடம் நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்தியா – பிரான்ஸ் இடையேயான வலுவான, நம்பிக்கை கொண்ட உத்திசார்ந்த கூட்டாண்மையை வரும் காலங்களில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.

Congress considers their family bigger than the nation: PM Modi in Kotputli

April 02nd, 03:33 pm

Launching the BJP-led NDA's campaign in Rajasthan’s Kotputli for the Lok Sabha polls, Prime Minister Narendra Modi reminisced about how he highlighted the magnificence of Jaipur a few days ago during the visit of the President of France. The PM said, “The first electoral rally of my Rajasthan campaign began in Dhundhar in 2019. Now, in 2024, the electoral campaign begins again from the same region. You have also made your decision – ‘Phir Ek Baar, Modi Sarkar’.”

PM Modi delivers an impactful speech at a public gathering in Kotputli, Rajasthan

April 02nd, 03:30 pm

Launching the BJP-led NDA's campaign in Rajasthan’s Kotputli for the Lok Sabha polls, Prime Minister Narendra Modi reminisced about how he highlighted the magnificence of Jaipur a few days ago during the visit of the President of France. The PM said, “The first electoral rally of my Rajasthan campaign began in Dhundhar in 2019. Now, in 2024, the electoral campaign begins again from the same region. You have also made your decision – ‘Phir Ek Baar, Modi Sarkar’.”