கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 07th, 05:52 pm

பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜ் அவர்களே, மதிப்பிற்குரிய முனிவர்களே, சத்சங்க குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே, புகழ்பெற்ற பிரமுகர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!

அகமதாபாத்தில் நடைபெற்ற கார்யகர் சுவர்ண மகோத்சவ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

December 07th, 05:40 pm

அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில்சார் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகராஜ், மதிப்பிற்குரிய துறவிகள், சத்சங்கி குடும்ப உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள், பிரதிநிதிகளை வரவேற்பதாகக் கூறினார். கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தை முன்னிட்டு பகவான் சுவாமி நாராயணரின் பாதங்களை வணங்குவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, இந் தநாள் பிரமுக் சுவாமி மகாராஜின் 103-வது பிறந்த நாளும் கூட என்று குறிப்பிட்டார். பகவான் சுவாமி நாராயணரின் போதனைகள், பிரமுக் சுவாமி மகாராஜின் தீர்மானங்கள் ஆகியவை இன்று பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகாராஜின் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் பலனளித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். இளைஞர்கள், குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஏராளமானோர் பங்கேற்கும் இத்தகைய பிரமாண்டமான நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், இந்த நிகழ்ச்சியின் ஆற்றலை உணர முடிகிறது என்று கூறினார். இந்த மகத்தான தெய்வீக விழாவிற்காக பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜை வாழ்த்துவதாக அவர் கூறினார்.

'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!

Karyakartas must organize impactful booth-level events to raise awareness: PM Modi in TN via NaMo App

March 29th, 05:30 pm

Prime Minister Narendra Modi interacted with the BJP Karyakartas from Tamil Nadu through the NaMo App, emphasizing the Party's dedication to effective communication of its good governance agenda across the state. During the interaction, PM Modi shared insightful discussions with Karyakartas, addressing key issues and soliciting feedback on grassroots initiatives.

PM Modi interacts with BJP Karyakartas from Tamil Nadu via NaMo App

March 29th, 05:00 pm

Prime Minister Narendra Modi interacted with the BJP Karyakartas from Tamil Nadu through the NaMo App, emphasizing the Party's dedication to effective communication of its good governance agenda across the state. During the interaction, PM Modi shared insightful discussions with Karyakartas, addressing key issues and soliciting feedback on grassroots initiatives.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 08th, 10:46 am

காலம் மாறி, ஒரு புதிய சகாப்தம் உதயமாகும் போது, அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது தேசத்தின் கடமையாகும். இன்று இங்கே பாரத மண்டபத்தில் இந்தப் பொறுப்பை நாடு நிறைவேற்றி வருகிறது. முதல் தேசிய படைப்பாளிகள் விருது, வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இந்த விருது வரும் நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும். இந்த புதிய சகாப்தத்தை இயக்கும் இளைஞர்களை கௌரவிப்பதற்கும், படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கும், படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பு. இந்த விருது உள்ளடக்க படைப்பாளர்களுக்கு சிறந்த ஆதாரமாக செயல்படும். அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும். இன்று நான் தேசிய படைப்பாளிகள் விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அதில் முழு மனதுடன் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. அதனால், இந்த நிகழ்வை எங்களால் அதிகம் பிரபலப்படுத்த முடியவில்லை. குறைந்த நேர கால அளவிலும்கூட, சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் படைப்பாளிகளை இதில் ஈடுபடுத்த முடிந்தது.

முதல் தேசிய படைப்பாளர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

March 08th, 10:45 am

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதலாவது தேசிய படைப்பாளர் விருதுகளை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுடன் சிறிது நேரம் அவர் கலந்துரையாடினார். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.

India's path to development will be strong through a developed Tamil Nadu: PM Modi

March 04th, 06:08 pm

Prime Minister Narendra Modi addressed a public gathering in Chennai, Tamil Nadu, where he expressed his enthusiasm for the city's vibrant atmosphere and acknowledged its significance as a hub of talent, trade, and tradition. Emphasizing the crucial role of Chennai in India's journey towards development, PM Modi reiterated his commitment to building a prosperous Tamil Nadu as an integral part of his vision for a developed India.

PM Modi addresses a public meeting in Chennai, Tamil Nadu

March 04th, 06:00 pm

Prime Minister Narendra Modi addressed a public gathering in Chennai, Tamil Nadu, where he expressed his enthusiasm for the city's vibrant atmosphere and acknowledged its significance as a hub of talent, trade, and tradition. Emphasizing the crucial role of Chennai in India's journey towards development, PM Modi reiterated his commitment to building a prosperous Tamil Nadu as an integral part of his vision for a developed India.

உலக காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருந்த அஸ்வமேத யாகத்தில் பிரதமர் ஆற்றிய காணொலி உரை

February 25th, 09:10 am

காயத்ரி பரிவாரத்தால் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் மிகவும் ஆழமாக புனிதத்துடன் வேரூன்றியிருப்பதால், அதில் பங்கேற்பது ஒரு பெரிய அதிர்ஷ்டமான விஷயம். இன்று தேவ் சம்ஸ்கிருதி விஸ்வ வித்யாலயா ஏற்பாடு செய்துள்ள அஸ்வமேத யாகத்தில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அஸ்வமேத யாகத்தில் பங்கேற்க காயத்ரி பரிவாரத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது, நேரமின்மையால் ஒரு சங்கடத்தை எதிர்கொண்டேன். வீடியோ மூலம் இந்தத் திட்டத்தை இணைப்பதில் ஒரு குழப்பமும் இருந்தது. சிக்கல் என்னவென்றால், ஒரு சாதாரண மனிதன் அஸ்வமேத யாகத்தை அதிகாரத்தின் நீட்சியாக உணர்கிறான். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அஸ்வமேத யாகம் வேறு விதமாக விளக்கப்படுவது இயல்புதான். ஆனால் இந்த அஸ்வமேத யாகம் ஆச்சார்ய ஸ்ரீராம் சர்மாவின் ஆவியை மேம்படுத்துவதையும், அஸ்வமேத யாகத்தை மறுவரையறை செய்வதையும் நான் கண்டேன், எனவே எனது குழப்பங்கள் அனைத்தும் மறைந்தன.

காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருந்த அஸ்வமேத யாகத்தில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்

February 25th, 08:40 am

காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருந்த அஸ்வமேத யாகத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். தேர்தல் வரவிருக்கும் நிலையில், 'அஸ்வமேத யாகத்தில்' கலந்து கொள்வது தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்ற தயக்கத்துக்கு இடையே, இதில் பங்கேற்றுள்ளதாக கூறினார். இருப்பினும், ஆச்சார்யா ஸ்ரீ ராம் சர்மாவின் உணர்வுகளை நிலைநிறுத்தவும், அதற்கு புதிய அர்த்தத்தை அளிக்கவும் அஸ்வமேத யாகத்தை நான் கண்டபோது, என் சந்தேகம் கரைந்தது என்றார்.

அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

January 28th, 11:30 am

நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.

வீரப்புதல்வர் தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 26th, 12:03 pm

இன்று, தைரியமான சாஹிப்சாதாக்களின் தியாகத்தை தேசம் நினைவுகூர்கிறது. அவர்களின் அசைக்க முடியாத உணர்விலிருந்து உத்வேகம் பெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வீரப் புதல்வர் தினத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அப்போது முழு தேசமும் சாஹிப்சாதாக்களின் வீரக் கதைகளால் உத்வேகம் பெற்றது.

'வீரப் புதல்வர்கள் தின' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

December 26th, 11:00 am

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'வீரப் புதல்வர்கள் தினம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குழந்தைகள் நிகழ்த்திய மூன்று தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தில்லியில் இளைஞர்களின் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

PM Modi attends a public function Kanha Shanti Vanam in Telangana

November 26th, 12:17 pm

During a public function at Kanha Shanti Vanam in Telangana, Prime Minister Narendra Modi highlighted that prosperity goes beyond mere wealth, he remarked, True prosperity isn't solely derived from financial success; the elevation of culture holds equal significance. Prime Minister Modi conveyed that India is embarking on a renaissance, encompassing progress in economic, strategic, cultural, and comprehensive spheres.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 10th, 06:25 pm

1951-ம் ஆண்டு இதே இடத்தில், இதே மைதானத்தில்தான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன என்பது எவ்வளவு அற்புதமான தற்செயல் நிகழ்வு. இன்று, நீங்கள் காட்டிய தைரியம், நீங்கள் செய்த முயற்சிகள் மற்றும் நீங்கள் கொண்டு வந்த வெற்றிகளால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது. 100 பதக்கங்களைக் கடக்க இரவு பகலாக உழைத்தீர்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உங்களைப் போன்ற அனைத்து விளையாட்டு வீரர்களின் செயல்திறனால் ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

October 10th, 06:24 pm

புதுதில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் மைதானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தப்போட்டிகளில் இந்தியா 28 தங்கப் பதக்கங்கள் உட்பட 107 பதக்கங்களை வென்றது, இது கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் பிரிவில் வென்ற மொத்தப் பதக்கங்களின் அடிப்படையில் சிறந்த செயல்திறன் ஆகும்.

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 30th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.

பறிமுதல் செய்யப்பட்ட 1,44,000 கிலோ போதைப்பொருளை அழித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலுக்குப் பிரதமர் பாராட்டு

July 17th, 10:21 pm

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தனது ட்விட்டரில், இந்த சாதனையின் மூலம், ஒரே ஆண்டில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 1 மில்லியன் கிலோ போதைப்பொருட்களை அழித்து இந்தியா வியக்கத்தக்க சாதனையை எட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் அற்புதமான ஊடகமாக ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மாறியுள்ளது: பிரதமர் மோடி

February 26th, 11:00 am

நண்பர்களே, இன்று இந்தச் சந்தர்ப்பத்தில் லதா மங்கேஷ்கர் அவர்கள், லதா அக்காவின் நினைவு எழுவது என்பது மிகவும் இயல்பான விஷயம் தான். ஏனென்றால் இந்தப் போட்டி தொடங்கிய வேளையில், அன்றைய நாளன்று தான் லதா அக்கா ஒரு ட்வீட் வாயிலாக, நாட்டுமக்களிடம் இந்த நிகழ்ச்சியோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.