அசாம் மாநிலம் நம்ரூப்பில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழக வளாகத்தில் புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா – யூரியா வளாகம் நம்ரூப் 4 உரத் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அசாம் மாநிலம் நம்ரூப்பில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழக வளாகத்தில் புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா – யூரியா வளாகம் நம்ரூப் 4 உரத் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

March 19th, 04:09 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, அசாமில் உள்ள பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரக் கழக வளாகத்தில் ரூபாய் 10,601.40 கோடி திட்ட மதிப்பீட்டில், ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தித் திறன் கொண்ட புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா – யூரியா வளாகம் அமைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய முதலீட்டுக் கொள்கை 2012-ன் கீழ் கடன் ஈவு பங்கு விகிதம் 70:30 என்ற விகிதத்தில் இது அமைக்கப்பட உள்ளது. நாம்ரூப்-4 திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்தேச காலம் 48 மாதங்கள் ஆகும்.