
கூட்டறிக்கை: இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறை குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
December 22nd, 07:46 pm
குவைத் நாட்டின் அமீரான ஷேக் மெஷல் திரு.அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 21, 2024 அன்று குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் மேதகு அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் 'கௌரவ விருந்தினராகக்' கலந்து கொண்டார்.
குவைத்தின் பட்டத்து இளவரசரை பிரதமர் சந்தித்தார்
December 22nd, 05:32 pm
குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 2024 செப்டம்பரில் ஐநா பொதுச்சபை அமர்வின்போது , பட்டத்து இளவரசரை சந்தித்ததை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார்.
குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்
December 22nd, 05:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத் பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார்.அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்பு
December 21st, 10:24 pm
குவைத் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிரம்மாண்டமான தொடக்க விழாவில் குவைத் பிரதமர் மேதகு அமீர், பட்டத்து இளவரசர் மற்றும் மேதகு குவைத் பிரதமர் ஆகியோருடன் அவர் இணைந்து கொண்டார். குவைத் தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.