பிரதமர் நரேந்திர மோடியின் நீடித்த ஆதரவும் பாராட்டும் நாட்டிற்கு கூடுதலாக செயல்பட தமக்கு எவ்வாறு ஊக்கமளித்தன என்பது பற்றி பி.வி.சிந்து ஒரு வீடியோவில் நினைவு கூர்ந்துள்ளார். 2021-ன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பும் பின்பும் அதேபோல் பத்ம பூஷன் விருது பெற்ற போதும் பிரதமர் மோடியுடனான சந்திப்பை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இவை தமக்கு மிகவும் பசுமையாக நினைவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டிற்காக உண்மையிலேயே நீங்கள் நல்லது செய்திருக்கிறீர்கள்” என்று கூறி தம்மைப் பிரதமர் மோடி பாராட்டியதாக சி்ந்து கூறியுள்ளார். விளையாட்டு ஆளுமைகள் பதக்கங்கள் பெறும்போது பிரதமரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார். இளைஞர்களை ஊக்கப்படுத்துமாறு விளையாட்டு ஆளுமைகளை பிரதமர் மோடி வலியுறுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

“பிரதமர் மோடி ஒரு தலைவர் என்பதைவிடவும் மேலானவர். விளையாட்டுகள் குறித்த அவரது தொலைநோக்கு மிகவும் உயர்வானது. அவர் எதைக் கூறினாலும் அவர் சொல்கின்ற முறையால்… நாம் அதை செய்துவிடுவோம், நம்மால் அதை செய்யமுடியும்… ஊக்கப்படுத்துவதும், பயிற்றுவிப்பதும் மிகப்பெரிய விஷயம். ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னால் விளையாட்டு ஆளுமைகள் அனைவருடனும் இணையம் வழியாக அவர் உரையாடினார். அவரது பேச்சு எங்களுக்கு ஏராளமான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது. எங்களை அவர் ஊக்கப்படுத்திய முறை பல விஷயங்களை கற்றுத்தந்தது. ஏனெனில் ஒரு நிகழ்வுக்கு முன் இத்தகைய ஊக்குவிக்கும் பேச்சு மிகப்பெரிய விஷயமாகும்” என்று அவர் கூறினார்.

பொறுப்புத்துறப்பு:

பிரதமர் திரு நரேந்திர மோடி குறித்த & மக்கள் வாழ்க்கையில் அவரின் தாக்கம் குறித்து மக்களின் நினைவுகள் / கருத்து / ஆய்வு ஆகியவற்றை நினைவுபடுத்த அல்லது தொகுத்துரைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இது உள்ளது.  

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'

Media Coverage

'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.