பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (2023 டிசம்பர் 1) துபாயில் நடைபெற்ற ஐநா பருவ நிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு ஐசக் ஹெர்சாக்-ஐ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அந்த பிராந்தியத்தில் நடந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிர்ரிழப்புகளுக்கு தமது இரங்கலை பிரதமர்  தெரிவித்தார்.  பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் பிரதமர் வரவேற்றார்.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தை மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வு காண இந்தியா  ஆதரவு வழங்கும் என்று கூறினார்.

 

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வெற்றிக்காக இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்  தொடங்கப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்தார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India produced record rice, wheat, maize in 2024-25, estimates Centre

Media Coverage

India produced record rice, wheat, maize in 2024-25, estimates Centre
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 10, 2025
March 10, 2025

Appreciation for PM Modi’s Efforts in Strengthening Global Ties